சூனியனின் மிக நுண்ணிய விவரங்களுடனான கதைகளை வெண்பலகையில் வாசிக்கையில் வெகுசுவாரசியம். இந்த அத்தியாயத்தில் முல்லைக்கொடியின் கதையையும், அவளுக்கும் கோவிந்தசாமிக்குமான உறவு எனச் சூனியன், கோவிந்தசாமிக்கு இன்னொரு கல்யாணமும் செய்து வைத்திருக்கிறான்.
வழக்கம்போல அதையெல்லாம் படித்துவிட்டு கோவிந்தசாமி வெகுவாய் அலறுகிறான்.மேலும் வாகனத்தில் இருந்தவர்களின் கருத்துகள் அவனை மேலும் கலங்கடிக்கின்றன. கோவிந்தசாமி நீல நகரத்தில் தன்னை எதிர்த்துக் குழி தோண்ட ஒரு படை கிளம்பியிருக்கிறது என வருந்துகிறான். இந்தச் சூழ்ச்சி வலையிலிருந்து எப்படி மீள்வது எனப் புரியாமல் முன் இருக்கும் இருக்கையில் முட்டிக் கொண்டு அழுகிறான்.
இந்தக் கலவரத்திற்கு நடுவில் அவன் நீல வனத்தைச் சென்றடைகிறான்.
கபடவேடதாரியோடு தொடர்ந்து பயணிப்போம்!
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.