‘அதுல்யா’ வின் வருகை நல்வரவாகட்டும். கோவிந்தசாமியின் வாழ்க்கை இனி ‘டாப்கியர்’இல் செல்லும் என்று நம்புவோம். ஆனால், அப்படியும் உறுதிபடுத்திவிட இயலாது. சூனியன், கோவிந்தசாமியின் நிழல் ஆகியோர் அதுல்யாவைக் கைப்பற்றவும் வாய்ப்புள்ளது. எது எப்படியோ எழுத்தாளர் உயர்திரு. பா. ராகவன் அவர்கள் மனம் உவந்து ஓர் அழகியைப் படைத்தமைக்காக வாசகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்க வேண்டும். அதுல்யா-கோவிந்தசாமியின் திருவாவடுதுறைப் பயணம் நிச்சயமாக ஆன்மிகப் பயணமாக அமையாது என்று நம்புவோம்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.