புத்தகங்கள் விற்பனை செய்யக்கூடாது…

(இந்தியாவில்) தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பற்றிய புத்தகங்களை சென்னை புத்தகக் கண்காட்சி அரங்குகளில் விற்பனை செய்யக்கூடாது என்று வாய்மொழி உத்தரவு ஒன்று காவல்துறையிடமிருந்து புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்துக்கு (பபாஸி) வந்துள்ளது.

பபாஸி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, சென்னை புத்தகக் கண்காட்சியில், கிழக்கு பதிப்பகம் அரங்கில் கீழ்க்கண்ட புத்தகங்கள் இப்போதைக்கு விற்பனைக்குக் கிடைக்கா:

1. அல் காயிதா
2. தாலிபன்
3. விடுதலைப் புலிகள்
4. உல்ஃபா
5. பிரபாகரன்
6. லஷ்கர்-ஈ-தோய்பா
7. எல்.டி.டி.ஈ (மினிமேக்ஸ்)

இந்தப் புத்தகங்கள் எல்டாம்ஸ் ரோடில் உள்ள கிழக்கு பதிப்பகத்தின் காட்சியகத்திலும் இணையம் வழியாகவும் விற்பனைக்குக் கிடைக்கிறது. தமிழகத்தின் அனைத்துக் கடைகளிலும் விற்பனைக்குக் கிடைக்கிறது.

இது தொடர்பாக மேலும் விவரங்கள் கேட்கும் நிலையில் இருக்கிறோம். எனவே மேற்கொண்டு தகவல் தெரிந்ததும் எழுதுகிறேன்.

Share

5 comments

  • எல்லா தகவல்களும் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன.. தினம் தினம் இந்த பெயர்கள் எல்லா பத்திரிக்கைகளிலும் வருகின்றன..
    தனிப்புத்தகமா வந்தா என்ன ஆகும்..? இப்படி ஏதாவது பண்ணினாத்தான், அதுல அப்படி என்ன இருக்குனு எல்லாரும் யோசிக்கமாட்டாங்களா? எ.கொ.ச.இ?

  • Dear Sir,
    Was searching Kizakku’s stall for last saturday & sunday for some of these books. I thought I have missed them and was rounding the the stall for many times. Very Bad!!!!

    Is Mayavalai too in this category ? I have not booked it. But thought of seeing how the book is ? but couldn’t find one.

  • How come Anandavikatan and its sister publications continuously write about the Tigers, very sympathetically?
    this writing is worse than Seeman’s speeches.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி