வளர்மதிக்குத் தலையெல்லாம் வலித்தது. நெடுநேரமாக அவளைச் சுற்றி எல்லோரும் கூடி நின்று பேசிக்கொண்டே இருந்தார்கள். கணப் பொழுது இடைவெளிகூட இல்லை. அதெப்படி முத்துராமன் அப்படி ஒரு காரியத்தைச் செய்யப் போகலாம்? இவளுக்கு என்ன குறைச்சல்? கண்ணுக்கு லட்சணமான பெண். தவிர அவன் நினைப்பதற்கு முன்னால் எதையும் செய்து தருபவள். திருமணமாகி இந்த ஊருக்கு வந்த நாளாக ஊர்க்காரர்கள் அத்தனை பேரும் பார்த்து ஆச்சரியப்படும்படியான...
புரியாதது
ஒரு நாயும் காகமும் பேசிக்கொள்ளும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அதைவிட வியப்பு, அவை இரண்டும் பேசியது எப்படி எனக்குப் புரிகிறது என்பது.
நாய்தான் முதலில் உரையாடலைத் தொடங்கியது. 'நேத்துலேருந்து சரியா சாப்பிடல. என்னமோ தெரியல. எதுவுமே கிடைக்கல.'
காகம் சிறிது வருத்தப்பட்டது. 'ஏன், யாரும் சோறு வெக்கலியா?'
ஜென் கதை
அவளுக்கு அவனை மிகவும் பிடித்தது. பார்க்க நன்றாக இருந்தான். படித்தவனாக இருந்தான். தரமான உத்தியோகமும் தாராளமான வருமானமும் இருந்தது. தவிர வீட்டுத் தொல்லைகள், தொந்தரவுகள் இருக்காது என்று தோன்றியது. அவனது வீட்டாரும் தன்மையாகப் பழகினார்கள். பெண் பார்க்க வந்துவிட்டு அவளைப் பிடித்திருக்கிறது என்று அனைவரும் சொன்னார்கள். தனியே அவனோடு பேசியபோது தவறாக எதுவும் தோன்றவில்லை. அழகாகப் புன்னகை செய்தான். எல்லாம்...
செகண்ட் ரேங்க்
அவன் ஒரு கவிதை எழுதினான். அவள் அது நன்றாக இருப்பதாகச் சொன்னாள். அவன் சிறிதாக தாடி வைத்துக்கொண்டான். அவள் அது அவன் முகத்துக்கு எடுப்பாக இருப்பதாகத் தெரிவித்தாள். அவன் ஒரு ஏழைப் பிச்சைக்காரனுக்கு மதிய உணவு வாங்கித் தந்ததை அவள் கண்டாள். அவனுக்கு நல்ல மனம் என்று சொன்னாள். அவனுக்கு அது திருப்தியாக இருந்தது. பிறகொரு நாள் உடன் படித்த மாணவன் தேர்வில் தோல்வியுற்றதை அடுத்துத் தற்கொலை செய்துகொள்ளச்...
ரிப்
பாட்டி மரணப் படுக்கையில் இருந்தாள். வயதான கட்டைதான் என்றாலும் போகப் போகிற நேரத்தில் ஒரு துயரம் சூழத்தான் செய்யும். அம்மா அழுதுகொண்டிருந்தாள். எதிர்பார்த்து முன்கூட்டி வந்திருந்த உறவினர்கள் ஒவ்வொருவராகத் தமது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டிருந்தார்கள். பாட்டி நல்லவள். பாட்டி பரந்த மனப்பான்மை கொண்டவள். சிக்கனமானவள். அவள் கோபப்பட்டுப் பார்த்ததில்லை. அவள் சமைக்கும் அரிசி உப்புமா ருசிகரமானது. பாட்டி நிறைய...
தகவல் பிழை
ஒரு ஊரில் ஒரு தகவல் பிழை இருந்தது. பிறக்கும்போதே அது பிழைபட்டு இருந்ததால் அதனை மறைக்க அதன் பெற்றோர் அது ஓர் அற்புதம் என்றும் வரம் வாங்கிப் பெற்றது என்றும் சொல்லிப் பரப்பிவிட்டார்கள். வயது ஆக ஆக அத்தகவல் பிழையின் தோற்றத்தைக் குறித்த வதந்திகளும் சிலாகிப்புகளும் ஊரெங்கும் பரவத் தொடங்கின. காரணம், அதன் பெற்றோர் அதனை வீட்டை விட்டு வெளியே அனுப்பியதே இல்லை. பொத்திப் பொத்தி வளர்க்கும் தங்கள் குழந்தையைக்...
தலைமுறை
அபார்ட்மெண்ட் செகரெட்டரி குமுறிக் கொட்டிக்கொண்டிருந்தார். இதென்ன நூறு பேர் குடியிருக்கும் இடமா இல்லை கூத்தடிக்கும் மடமா? உடனே ஒரு சனாதனவாதி மடங்களைக் கேலி பேச வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். பொது ஒழுக்கத்துக்குக் கேடு விளைவிக்கும்படியாக ஏதாவது நடந்திருந்தால், சம்பந்தப்பட்டவர்களைத் தனியே அழைத்து எச்சரித்தால் போதும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் சொன்னார். பொது வெளியில் தவறு நடந்தால் அதைப்...
பெட்டி
ஐயாவுக்கு இருபது வருடங்களாக நான் கார் ஓட்டிக்கொண்டிருக்கிறேன். அவர் ஒரு காலத்தில் பெரிய நடிகர். நிறைய சம்பாதித்தார். என்னைப் போல அவரிடம் வேலை பார்க்கும் எல்லோருக்கும் மகிழ்ச்சி கொள்ளும் அளவுக்கு சம்பளம் கொடுத்தார். ஏதாவது விசேஷம் என்று பத்திரிகை வைத்தால் வீடு தேடி வந்து தாம்பாளத்தில் பழங்களுடன் பத்தாயிரம், இருபத்தையாயிரம் ரூபாயெல்லாம் தருவார். மிகவும் நல்ல மாதிரி. அவருக்கு அப்படியொரு துயரம்...
வரம்
நெடுநாள் போராடித் தோற்றுவிட்டது போலத் தோன்றியது. வாழ்ந்த நாள்களில் எண்பது சதவீதம் இருக்குமா? அதற்கு மேலேயே இருக்கலாம். வீட்டைத் துறந்து, படிப்பை விடுத்து, உறவுகளை மறந்து, சந்தோஷங்களை இழந்து நாடோடியாக எங்கெங்கோ அலைந்து திரிந்தாகி விட்டது. பிச்சை உணவு பழகிவிட்டது. மான அவமானங்களை எண்ணிப் பார்ப்பதில்லை. தியானமும் தவமும் வேட்கையுமாக நதிப் படுகைகளில், மலைக் குகைகளில், அடர்ந்த கானகங்களில் வாழ்க்கை உருகி...
ஆசி
கிழவிக்கு எப்படியும் எண்பது வயது இருக்கும். அவள் நின்று, நடந்து நான் பார்த்ததில்லை. வீட்டை விட்டுக் கிளம்பி தெரு முனைக்கு வரும்போது மெயின் ரோடுக்குத் திரும்பும் இடத்தில் அவள் ஒரு கோணிப்பையை விரித்து சாலை ஓரம் அமர்ந்திருப்பாள். யாரையும் அழைக்க மாட்டாள். கையேந்த மாட்டாள். யார் என்ன கொடுத்தாலும் வணங்கி ஏற்றுக்கொள்வாள். எதுவும் தராதவர்கள் மீது அவளுக்கு எந்த விமரிசனமும் இல்லை. முதலில் எப்போதாவது...