இகவாழ்வில் ஒவ்வொருவருக்கும் விடை தெரியாத வினாக்கள் ஆயிரம் இருக்கும். எனக்கு உள்ளவற்றுள் முதன்மையான வினா, வேட்டி எப்படி இடுப்பில் நிற்கிறது என்பது.
மை வைத்த சூனியம்
சண்முகம் பிள்ளை அகராதி முதல் என் கைவசம் உள்ள எந்தப் பழம்பிரதியிலும் வழமை என்ற சொல்லைக் கண்ட நினைவில்லை. இலங்கைத் தமிழ் நாளிதழ்களின் ஆன்லைன் பதிப்பில் இதனை அதிகமாகப் பார்க்க முடிகிறது.
பயண இலக்கியம்
இரயில் வண்டி பெருங்களத்தூர் நிறுத்தத்தை நெருங்கியது. பண்டொரு காலத்தில் பிற்காலப் பல்லவர்களுக்கும் மிச்சம் மீதமிருந்த பிற்காலச் சோழர்களுக்கும் யுத்தம் மூண்டபோது அது நிகழ்ந்த பெரும் களமாக இருந்தபடியினாலே அந்தத் தலத்துக்குப் பெரும் களத்தூர் என்ற பெயர் உண்டானது.
சர்வநாச பட்டன் – 10
அதிகாரம் 10: உறவினர் 1. எனது ஸ்பாம் ஃபோல்டருக்கு ரிலேடிவ்ஸ் என்று பெயர் வைத்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் செலக்ட் ஆல், டெலீட் பொத்தானை அமுக்கும்போதெல்லாம் அப்படியொரு ஆனந்தப் பரவசம் உண்டாகிவிடுகிறது. 2. என் அனுமதி இன்றி என்னைச் சித்தப்பா, பெரியப்பா, மாமா, அண்ணன், தம்பி, மாப்ள, மச்சான், சகலை, தாத்தா, பேராண்டி என்றெல்லாம் அழைக்க எவன் எவனோ எவன் எவனையோ பெற்றுப் போட்டுவிட்டிருக்கிறான். இதெல்லாம் மனித...
சர்வநாச பட்டன் – 2
அதிகாரம் 2: கடவுள் ஆத்திகனாக இருப்பதற்குக் கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு ஹவுஸிங் லோன் இருந்தால்கூடப் போதும். அடி பிடித்த தோசைக்கல்லையும் ஆண்டவனையும் விளக்க நினைப்பது நேர விரயம். அப்படியே தண்ணி தெளித்து சுரண்டிவிட்டு, மாவை ஊற்ற வேண்டியதுதான். மருத்துவர்கள் தெய்வத்துக்குச் சமம். மெடிக்கல் இன்சூரன்ஸ், பெண் தெய்வத்துக்கே சமம். மெய் வருத்தாமல் கூலி தரும் ஒரு கடவுளைத்...
சர்வநாச பட்டன் – 3
அதிகாரம் 3: பதிவர் சிறந்த பதிவரை இனம் காண்பது எப்படி? அனைத்து பக்கெட், டேக்சா சேலஞ்சுகளிலும் தன் இருப்பைச் சொல்லி, ஹேஷ் டேக் இட்டு டிரெண்டிங்குகளில் பங்களித்து, அவ்வப்போது செல்ஃபி போட்டு, சுதந்திர தினத்துக்கு ப்ரொஃபைலில் தேசியக் கொடி வைத்து, மோடி வரும்போது கோபேக் சொல்லி, மாதக் கடைசி ஆனால் ஃபேஸ்புக்கிலிருந்து விலகலாம் என்றிருக்கிறேன் என்று ஸ்டேடஸ் போட்டு, மறு நாள் காலை, இனிய காலை வணக்கம்...
சர்வநாச பட்டன் – 4
அதிகாரம் 4: காதல் நவீன காதல் என்பது திருமணத்தை உத்தேசிக்க வாய்ப்பில்லை. ஆனால் விவாகரத்தை அது இரு கரம் தட்டி வரவேற்கும். சிறந்த காதலர்கள் சீக்கிரம் பிரிந்துவிடுவார்கள். காதலை வாழவைக்க வேறு நல்ல உபாயமில்லை. போயும் போயும் இவனை (அல்லது இவளை)க் காதலித்தோமே என்று தோன்றும்போதுதான் மேற்படியார்கள் கவிதை எழுத ஆரம்பிக்கிறார்கள். இது குழந்தைகள் மலச்சிக்கலில் இருந்து விடுபட ஆசனவாயில் வெற்றிலைக் காம்பைச்...
சர்வநாச பட்டன் – 5
அதிகாரம் 5: பெண்கள் 1. பெண்கள் இரண்டு வகைப்படுவர். 1. ஆண்கள் விரும்புவது போல இல்லாதவர்கள். 2. இதர பெண்கள் விரும்புவது போல இல்லாதவர்கள். 2. பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்ற முதுமொழியில் ஒரு தவறான புரிதலுக்கான வாய்ப்புள்ளது. பொதுவாகப் பெண்கள் இன்னொரு பெண்ணை எதிரியாகக் கூட அண்ட விடமாட்டார்கள். 3. பெண்ணியம் என்பது சரியாக சாம்பார் வைக்க வராதவர்களால் உருவாக்கப்பட்ட கருத்தாக்கம். 4. இருபது வருடங்களுக்கு...
சர்வநாச பட்டன் – 6
அதிகாரம் 6: புரட்சி 1. மிகப்பெரிய புரட்சிகளுக்கான முதல் புள்ளி பெரும்பாலும் சமையலறைகளில்தான் வைக்கப்படும். உதாரணமாக, விளாதிமிர் லெனினின் மனைவி நதெஸ்தா க்ருப்ஸ்கயா கட்சி வேலைகளில் லெனினைவிட பிசியாக இருந்ததால் கணவருக்கு நல்ல தேநீர் போட்டுத் தர வழியில்லாதிருந்தது. விளைவு, அடிக்கடி தோழர்களைச் சேர்த்துக்கொண்டு டீ குடிக்கச் சென்றவர், அப்படியே புரட்சியில் குதித்துவிட்டார். 2. புரட்சிகர எழுத்துகளில்...
சர்வநாச பட்டன் – 7
அதிகாரம் 7: டீக்கடை நாலு பேர் டீ குடித்துக்கொண்டு நிற்கும் கடைக்குப் புதிதாக வருபவன் ‘ஒரு காப்பி’ என்று கேட்டால் ஆணவப் படுகொலை செய்யப் போவது போலப் பார்க்கிறார்கள். சுதாரித்துக்கொண்டு, ‘ஒரு வடை’ என்று கேட்டு வாங்கி அதைக் காப்பியில் முக்கி எடுத்துக் கடித்தால்தான் சமாதானமாகிறார்கள். டீயும் வடையும் தமிழர் உணவு. காப்பி நாம் தமிழர் உணவு. இரண்டு ரூபாய்க்கு விற்ற டீ, பன்னிரண்டு ரூபாய் ஆகிவிட்டாலும்...
சர்வநாச பட்டன் – 8
அதிகாரம் 8: நடைப் பயிற்சி 1. சகஸ்ரநாமமோ சஷ்டி கவசமோ கேட்டபடி காலை நடைப் பயிற்சிக்கு வருபவர்கள் இந்த உலகுக்கு ஒரு செய்தியை மறைமுகமாக அறிவிக்கிறார்கள். வீட்டில் அவர்களுக்கு நல்ல காப்பி கிடைப்பதில்லை என்பதே அது. 2. பெண்கள் முன்னேற்றத்துக்காக இதுவரை என்ன செய்து கிழித்திருக்கிறேன் என்று ஆவேசமாகக் கேட்டார் நண்பரொருவர். தினமும் நடைப்பயிற்சியின்போது என்னை அவர்கள் முந்திச் செல்ல விட்டு மகிழ்கிறேனே, போதாதா...
சர்வநாச பட்டன் – 9
அதிகாரம் 9: விருது எழுதுவது ஒரு வேலை என்பது போல விருது வாங்குவது இன்னொரு வேலை. மிகச் சில எழுத்தாளர்களுக்கு மட்டுமே மல்ட்டி டாஸ்கிங் கைவருகிறது. பண முடிப்பு இல்லாத, சொப்பு சாமான் மட்டுமே கொண்ட விருதுகளை நிர்த்தாட்சண்யமாக நிராகரித்துவிடுகிறேன். ஐம்பது வயதுக்கு மேலே சொப்பு வைத்து விளையாடக் கூச்சமாக இருப்பதுதான் காரணம். நாற்பத்து நான்கு வயதில் நோபல் கொடுத்து ஆல்பர்ட் காம்யூவை பார்சல் பண்ணிவிட்டார்கள்...
சர்வநாச பட்டன் – 1
அதிகாரம் 1: சக மனிதன் நூறு நல்லவர்களை என்னிடம் தாருங்கள். நூறு பேருமே ஃப்ராடு என நான் நிரூபிக்கிறேன். ஓ! மனிதன் எத்தனை சிறந்த கமிஷன் ஏஜெண்ட்! நல்ல மனிதர்கள் என்று யாருமில்லை. எல்லோருமே சுமாரான அசெம்பிள்டு செட்தான். மனித குலத்தின் ஆகப் பெரிய பிரச்னை, அன்பு நிறைந்து பொங்கி வழிவது போல அவ்வப்போது காட்ட வேண்டி இருப்பதுதான். ஆண்டவா, உறவுக்காரர்களிடம் இருந்து என்னைக் காப்பாற்று. சக மனிதனை நான்...
மங்கலப் பற்றாக்குறை
‘அது நான்கு அயோக்கிய ராஸ்கல்களின் கதை. நான்கு பேரும் ஒரே பெண்ணைத் திருட்டுத்தனமாகக் காதலித்தவர்கள். அதில் ஒருவன் திருமணம் வரை சென்று ஏமாற்றியவன். அவளது தற்கொலைக்கே காரணமாக இருந்துவிட்டுப் பிறகு வாழ்க்கை முழுக்க ஹரே கிருஷ்ணா ஹரே ராமா என்று சொல்லிக்கொண்டிருக்கிறான். அவனையெல்லாம் கட்டி வைத்து உதைக்க வேண்டாமா?’
பல்சரும் பால கணேஷும்
பால கணேஷ் என் நண்பர் என்பது இந்தப் பக்கத்தைப் பின் தொடரும் அத்தனை பேருக்கும் அநேகமாகத் தெரிந்திருக்கும். உடனடி நகைச்சுவைக்கு, சீண்டலுக்கு, கிண்டலுக்கு, உதாரணத்துக்கு – யோசிக்காமல், போன் செய்து ஒப்புதல் கேட்காமல் நம்மால் யார் பெயரைப் பயன்படுத்த முடியுமோ, அவரைத்தான் நண்பர் என்று சொல்ல முடியும். அவர் எனக்கு அந்த ரகம். பெரிய படிப்பாளி. நல்ல, வெகுஜன நகைச்சுவை எழுத்தாளர். கொஞ்சம் தீவிரம்...
அறுக்கமாட்டாதவன்
எழுதத் தொடங்கிய காலத்தில் பெரும்பாலும் நானொரு கைவலிய நவநீதனாகத்தான் இருப்பேன். என் அளவுக்கே குண்டான பேனாக்களைப் பிடிக்க முடியாமல் பிடித்துக்கொண்டு நான்கைந்து மணி நேரம் இடத்தை விட்டு நகராமல் அமர்ந்து எழுதிக்கொண்டிருப்பேன். வலி, விரல்களில் இருந்து முழங்கை வரை நீண்டு தொடும்போது சிறிது நேரம் ஓய்வு. பிறகு மீண்டும் எழுத ஆரம்பித்தால் தோள்பட்டை வலிக்கும்வரை எழுதுவேன். கைவலி உச்சம் தொடும்போது அது கழுத்து...
பார்த்தால் தீருமா பசி?
எனக்கு சமைக்கத்தான் வராதே தவிர, சாப்பிடும் கலையில் சந்தேகமின்றி வாகை சூடியவன். குவாலிடி கண்ட்ரோல் என்றொரு பணி இனத்தையே எவனோ என்னை ஒளிந்திருந்து பார்த்துத்தான் உருவாக்கியிருக்கிறான் என்ற ஐயம் எனக்குண்டு. சாதாரண சாம்பார், ரசமானாலும் ருசியில் அரை சிட்டிகை முன்னப்பின்ன இருந்தால் அந்தராத்மா அலாரம் அடித்துவிடும். இது வெறும் உப்பு-காரம் குறைபாடு சார்ந்தது மட்டுமல்ல. ஒரு ரசப்பாத்திரத்தைத் திறந்தால்...
பெண்ணிய விரோதக் கட்டுரை எழுதுவது எப்படி?
பொதுவாக ஆண்களுக்கு இது எளிதே என்றாலும் எழுதுவது என்னும் தொழிற்படும்போது அவர்கள் சிறிது எச்சரிக்கையாகிவிடுவார்கள். பொது புத்தி என்று பொதுவில் முன்வைக்கப்படும், காதல் சந்தியாவின் மூக்கு நிகர்த்த குற்றச்சாட்டுக்கு அஞ்சி, தம்மையொரு நடுநிலைவாதியாகக் காட்டிக்கொள்ளும் ஆயத்த உணர்வு ஆரம்பத்தில் ஏற்படும். ஆனால் அது தேவையற்றது. எப்படி என்பதைப் படிப்படியாகப் பார்க்கலாம். கட்டுரையின் முதல் பத்தியில் பெண்களின்...
அன்சைஸ் – மறு பதிப்பு
இந்த உலகில் ஆகச் சிரமமான காரியம் ஒன்று உண்டென்றால் அது சுய விமரிசனம் செய்துகொள்வதுதான். ஆனால், பெரும்பாலும் நமக்கு ரொம்பப் பிடித்த நபர் நாமேவாகத்தான் இருப்போம். பிடித்துவிட்டால் விமரிசனம் எங்கிருந்து வரும்? ஆனால் ஓர் எழுத்தாளன், விமரிசனக் கலை பயில விரும்பினால் அதற்கு மிகவும் சௌகரியமான, பாதுகாப்பான வழி தன்னைத்தானே விமரிசித்துக்கொள்வது. ஒரு பயலும் நாயே பேயே என்று நாலு பக்கத்துக்குத் திட்ட...
கொடுங்கனவு
இரவு ஒரு கொடுங்கனவு. கொங்கு நாடு உதயமாகிவிடுகிறது. வலிமை அப்டேட் வானதி சீனிவாசனுக்கு லெஃப்டினண்ட் கவர்னர் காயத்ரி ரகுராம் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப் போகிற நேரம், ‘நிறுத்துங்கள்!’ என்று கூவிக்கொண்டு ராஜகுரு ஜக்கி வாசுதேவ் உருவிய வாளுடன் அரண்மனைக்குள் நுழைகிறார். கடலுக்குள் மூழ்கிய துவாரகையை மீட்டு வெளியே கொண்டு வந்து, கடல் இல்லாத பாதுகாப்புப் பிராந்தியமான கொங்கு நாட்டில் மறு...


