முல்லைக்கொடி பிறந்து அதன் பின் பிறந்தும் தேசியவாதியாகத்தான் காணப்பட்டாள். முல்லைக்கொடி கோவிந்தசாமியை ஒயின்ஸ் அருகில் சந்திக்கிறாள். சாகரிகா தன்னைக் கடன்காரி ஆக்கியதால் சீரழிந்து விட்டதாகக் கூறுகிறான். இந்த முதல் சந்திப்பைக் குறித்து முல்லைக் கொடி எழுதியதை மின் வாகனத்தில் இருந்த வெண்பலகையின் வழியாகப் படித்து அதிர்ச்சியுற்றுக் கத்துகிறான். அதுல்யாவிற்கும் கோவிந்தசாமிக்கும் இடையே அன்புப் பற்றியும் பேருந்தில் உள்ளவர் கேட்கிறார். தன்னைப் பற்றி வருவதெல்லாம் அபாண்டம் எனக் கூறி கதறுகிறான். தன்னைப் பற்றி எழுதும் பெண்களெல்லாம் தனக்கு யார் என்று தெரியாது என்றும் கூறுகிறான். தன்னை விட்டுப் பிரிந்த நிழல்தான் இவ்வாறெல்லாம் செய்கிறது என்கிறான். தன்னைப் பற்றி எழுதி தன் எதிர்காலத்தைக் குழிதோண்டிப் புதைந்து விட எண்ணுகிறார்களே இதிலிருந்து எப்படி விடுபடுவேன் இருக்கையில் முட்டிக் கொண்டு அழுகிறான். இதையெல்லாம் வாசிக்கும் பொழுது கோவிந்தசாமியைப் பார்க்கப் பாவமாகத்தான் இருக்கிறது. இவனைக் காப்பாற்ற யாராவது வருவார்களா எனக் காத்திருந்து பார்ப்போம்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.