வலை எழுத்து

கபடவேடதாரி – முனைவர் ப. சரவணன் மதிப்புரை (அத்தியாயம் 5)

‘ஓடிப் போனவளைத் தேடிப் போகாதே’ என்று ஒரு பழமொழி இருக்கிறது. கோவிந்த சாமிக்கு இந்தப் பழமொழி தெரியாது என்று நினைக்கிறேன். சிதறுதேங்காயைப் போல ஒருவருக்குத் தன் வாழ்க்கை சிதறடிக்கப்படும்போது அவன் நினைவுகள் திசைக்கு ஒன்றாகச் சென்று விழுவது இயற்கையே. அவற்றை அவன் பொறுக்கியெடுத்து, தொகுத்துக்கொள்வதற்குள் இன்னும் கொஞ்சம் வாழ்க்கையை இழந்துவிடுவான். கோவிந்த சாமியின் வாழ்க்கையை ஊழ் சிதறுதேங்காயாக்கிவிட்டது...

கபடவேடதாரி – முனைவர் ப. சரவணன் மதிப்புரை (அத்தியாயம் 4)

கைதி தப்பிப்பது என்பது ஓர் அகவிடுதலைக்கு நிகரானது. அதைச் ‘சூனியன்’ அடைந்துவிட்டான். அவன் அடையும் புதிய இடம் புதிராகவே இருக்கிறது. ஒருவரைப் பற்றி ரகசியமாக அறிய வேண்டுமெனில் அவருடைய நாட்குறிப்பைப் படிக்கலாம்; அவரை மறைமுகமாகப் பின்தொடரலாம்; அவருக்கு நெருக்கமாகவராக நடிக்கலாம். ஆனால், ஒருவரின் மண்டையைத் திறந்து புத்தகத்தைப் படிப்பது போலப் படித்து அறிவது என்பது அற்புதமான கற்பனை. எழுத்தாளர் உயர்திரு. பா...

கபடவேடதாரி – முனைவர் ப. சரவணன் மதிப்புரை (அத்தியாயம் 3)

எளிய மனிதர்களுக்கும் பேராற்றல் மிக்கவர்களுக்கும் ஒரே மனநிலைதான் இருக்கிறது. ஆனால், அதில் ஒரேயொரு வேறுபாடு உள்ளது. எளியவர்கள் தம்மை யாரும் பொருட்படுத்தவில்லையே என்பதைத் தன் மனத்துக்குக் கூறிக்கொண்டே இருப்பர். பேராற்றல் மிக்கவர்கள் அதனைப் பல வகையில் மக்களுக்கு உணர்த்திக்கொண்டே இருப்பர். ‘சூனியன்’ எளியன். ஆனால், அவனுக்குள் ஓர் வலியன் உறைந்திருக்கிறான். அந்த வலியன்தான் இப்படிப் புலம்பித் தவிக்கிறான்...

கபடவேடதாரி – முனைவர் ப. சரவணன் மதிப்புரை (அத்தியாயம் 2)

‘அழுதழுது புரண்டாலும் அவள் தான் பிள்ளை பெற வேணும்’ என்று ஒரு பழமொழி இருக்கிறது. ‘குற்றவாளி’ என உறுதிப்படுத்தப் பட்டவர்கள் அனைவரும் அவர்கள் செய்த குற்றத்துக்கு ஏற்ப தண்டனையை அடைந்தே தீரவேண்டும். குற்றவாளி தன்னளவில் குற்றமற்றவராக இருந்தாலும் நீதியின் கண்களுக்கு அவர் குற்றவாளி எனத் தெரிந்தால், அவர் குற்றவாளிதான். குற்றமற்றவர்களின் குரல் எப்போதும் நீதிமன்றத்துக்கு வெளியேதான் ஒலித்துக் கொண்டிருக்கிறது...

கபடவேடதாரி – முனைவர் ப. சரவணன் மதிப்புரை (அத்தியாயம் 1)

வியர்க்கிறதே என்பதற்காக மூளையைத் திறந்துவைக்க முடியுமா? முடியும். யதார்த்த வாழ்விலிருந்து ஓர் அடியாவது மேலெழ விரும்பாத மானுடர் யாரேனும் இருக்கிறார்களா? ‘இந்தச் சலிப்புற்ற உலகியலிருந்து விலகி, சில மணிநேரங்களாவது மகத்தான உலகில் சிறிது நேரம் நடந்து திரும்பலாமே!’ என்று விழையாத மானுட உள்ளத்தைப் பார்க்கவே முடியாது. இரவிலோ பகலிலோ பேருந்தின் நெடும் பயணம் விரக்தியைத் தந்தால் சன்னல்வழியாகத் தெரிவதைப்...

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 2)

சூனிய உலக அதிகார அரசியலில் சிக்குண்டு, இரண்டு வருடங்களாக நிலக்கடலை ஓட்டினுள் சிறைப்பட்டுக் கிடந்த நம் சூனியனுக்கு இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அவனை கொல்வதற்கு, துரோகிகளின் எலும்புகளைக் கொண்டு செய்யப்பட்ட கப்பலில் இரண்டாம் அத்தியாயப் பயணம் தொடங்குகிறது. சட்டென நெப்போலியப் போரில் பிரெஞ்சு சிறைக்கைதிகளை எலும்புகளாலான கப்பலில் கொண்டு சென்ற வரலாறு நினைவுக்கு வந்து சென்றது. எலும்புகளின்...

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 1)

புனைவுக் கதைகளின் மீது எப்போதுமே எனக்கு ஒரு விவரிக்க முடியாத பிணைப்பு உண்டு. இந்த தொடரில், எழுத்தாளர் அவரின் கற்பனை உலகத்தை நம்மிடம் அழகாக கடத்தி இருக்கிறார். இது தான் கதையின் முதல் வெற்றி. காட்சிகள் கண் முன் விரிந்து படர்ந்து நம்மை உள்ளிழுத்து கொள்கிறது. சூனியனின் மீது ஒரு விதப் பற்று உருவாகி விட்டது. எப்படியும் அவன் தண்டனையில் இருந்து தப்பித்து விட வேண்டும் என்று மனம் அடித்துக் கொள்கிறது...

கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 13)

ஷில்பாவுக்காக காத்திருப்பதா சாகரிகாவைத் தேடிப்போவதா என அவன் குழம்புகையில் நகரவாசி ஒருவன் மூலமாக முகக்கொட்டகை பற்றி அறிகிறான். விதவிதமான முகங்கள் அங்கே கிடைக்கும் அதைவைத்து அவனது பிரச்சினையை தீர்த்துக்கொள்ள முனைகிறான். அங்கே உள்ள முகங்கள் எல்லாம் அங்கே வாழ்ந்து இறந்துபோன மனிதர்களின் முகமாம். நாம் மாஸ்க் எடுத்து முகத்தில் பொருத்திக் கொள்வது போல நாம் தேர்ந்தெடுக்கும் முகத்தை நம் தலையில் சுலபமாக...

கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 12)

தன்னைப் பற்றி இவ்வளவு அபாண்டமாக எழுதும் அளவுக்கு தான் செய்த தவறு குறித்து சாகரிகாவிடம் கேட்க விரும்புவதால் தன்னை அவளிடம் அழைத்துச் செல்ல முடியுமா? சூனியனிடம் பறி கொடுத்திருந்த தன் நிழலை மீட்டுத் தர முடியுமா? என்ற இரு கோரிக்கைகளை கோவிந்தசாமி சாகரிகாவின் தோழி ஷில்பாவிடம் வைக்கிறான். அவளோ, ”இரண்டில் ஒன்று” என்கிறாள். கோவிந்தசாமியோ ”இரண்டுமே” என்கிறான்! கடைசியில் ஷில்பாவே ஜெயிக்கிறாள். சாகரிகாவை...

கபடவேடதாரி – தர்ஷனா கார்த்திகேயன் மதிப்புரை (அத்தியாயம் 13)

கண்ணெதிரே தெரிகின்ற அனைத்து அசாத்தியங்களையும் மீறி அதீத தன்னம்பிக்கையுடன் தன் மனைவியை சமாதானப்படுத்த கோவிந்தசாமி எடுக்கின்ற பிரயத்தனங்களை வாசித்தால் எரிச்சல் தான் வருகிறது. எதற்கு இத்தனை பரிதவிப்பு? சில மனிதர்களின் அசட்டுப் பிடிவாதங்களை நீல நகரத்தின் சுதந்திரம் கூட மாற்ற முடியாது போலும். ( சரி, இருக்கட்டும். கதை நகர வேண்டுமே?). ஆனால் அவனுக்கு முகக்கொட்டகையில் கிடைக்கின்ற தெரிவுகள் பூமியில்...

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Pa Raghavan

Stay informed with curated content and the latest headlines, all delivered straight to your inbox. Subscribe now to stay ahead and never miss a beat!

Skip to content ↓