Warning: Undefined array key "00" in /home/writerpara/webapps/writerpara/wp-includes/class-wp-locale.php on line 321

Warning: Undefined array key "00" in /home/writerpara/webapps/writerpara/wp-includes/class-wp-locale.php on line 321

Warning: Undefined array key "00" in /home/writerpara/webapps/writerpara/wp-includes/class-wp-locale.php on line 321
0 | Page 2 of 14 | Pa Raghavan
Warning: Undefined array key "00" in /home/writerpara/webapps/writerpara/wp-includes/class-wp-locale.php on line 321

Warning: Undefined array key "00" in /home/writerpara/webapps/writerpara/wp-includes/class-wp-locale.php on line 321

Archive2011

நாளை ரிலீஸ்

நான் வசனம் எழுதியிருக்கும் தம்பி வெட்டோத்தி சுந்தரம் திரைப்படம் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாகிறது.
தொடர்புடைய முந்தைய குறிப்புகள்: ஒன்று | இரண்டு
படம் பார்க்கும் நண்பர்கள் உங்கள் கருத்துகளைத் தெரியப்படுத்தினால் மகிழ்வேன்.

மறந்தும் இருந்துவிடாதீர்கள்!

சாக்கடை அடைப்புகள். தார் காணா வீதியின் மேடு பள்ளங்கள். குவியும் குப்பைகள். நாய்த் தொல்லை. பன்றித் தொல்லை. கொசுத் தொல்லை. பிளாட்பார ஆக்கிரமிப்புகள். மட்டரகமான குடிநீர் வினியோகம். மோசமான மழைநீர் வடிகால். அன்றாட வாழ்வின் அசகாயப் பிரச்னைகள் கடந்தவாரம் முழுதும் ஆட்டோ ஏறி வீதிவலம் வந்தன. உண்மையில் இந்த உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்கள் கூம்பு மைக் ஆட்டோக்களில் உட்கார்ந்தபடிக்கு மேற்படி பிரச்னைகளை...

ஜடாமுடிக்கு வழியில்லை!

பொதுவாக எனக்கு நகை அணிவது என்பது பிடிக்காது. பெண்கள் அணிவது, அவர்கள் பிறப்புரிமை. அது பற்றி இங்கே பேச்சில்லை. நகை அணியும் ஆண்களைப் பற்றியது இது. மோதிரம், செயின், கம்மல், வளையல் எனப் பெண்களின் பிதுரார்ஜித உரிமைகளில் நான்கினை ஆண்கள் தமக்குமான ஆபரணங்களாக அபகரித்துக்கொண்டது பற்றி நிரம்ப வருத்தப்பட்டிருக்கிறேன். பால்ய வயதுகளில் நகையணியும் ஆண்களைப் பார்க்க நேர்ந்தால் குறைந்தபட்சம் நாலடியாவது தள்ளி...

எனக்கு வேணாம் சார்!

நெடுந்தூரப் பேருந்துப் பயணம் ஒன்றில்தான் முதல்முதலில் அவர் எனக்கு அறிமுகமானார். ரொம்பக் கோபத்தில் இருந்தார். அரசுப் பேருந்துகளின் இருக்கைகள் ஏன் இன்னும் இருபதாம் நூற்றாண்டிலேயே இருக்கின்றன? பயணிகளின் முதுகுகள் மற்றும் முழங்கால்கள் குறித்து முதல்வருக்குப் போதிய அக்கறை இல்லை. தி ஹிந்துவுக்கு யாராவது வாசகர் கடிதம் எழுதிவிட்டு மெரினா கடற்கரையில் ஒரு கண்டன மாநாடு நடத்தினால் அவர் வந்து கலந்துகொண்டு...

ஹரே கிருஷ்ணா!

இந்த வருடம் எங்கள் வீட்டு கொலுவில் சேரும் புதிய பொம்மைகளுள் எனக்குப் பிடிதது, கிருஷ்ண பாகவதர் கச்சேரிக் காட்சிகள்.
திருவிளையாடல் படத்தில் சிவாஜியே அனைத்து இசைக்கலைஞர்களாகவும் உட்கார்ந்து வாசிக்கிற ஸ்டைல்தான். ஒரு முழு கிருஷ்ணர் செட். அனைத்து கிருஷ்ணர்களும் ஏகாந்தமாகப் பாடி, வாசித்துக் களிக்கிறார்கள்.
என்ன அழகு இந்த பொம்மைகளில்!

ஸ்வீட் எடு, கொண்டாடு!

சென்ற வாரத்தில் ஒருநாள், சென்னை நகரின் நட்ட நடு செண்டரிலிருந்து கிழக்குக் கடற்கரையோரம் அமைந்துள்ள சாந்தோம் தேவாலயத்தை ஒட்டிய ஒரு சந்து வரை ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. நீதி ஏதும் கேட்கிற உத்தேசமில்லை என்றாலும் நீண்ட நெடும் பயணம்தான். என் மூஞ்சூறு வாகனத்தில் உரிய இடத்தைச் சென்றடைய எப்படியும் ஒன்று முதல் ஒன்றரை மணிநேரம் ஆகலாம் என்று கணக்கிட்டு இருந்தேன். ஆனால் என்ன ஆச்சரியம். முதல்வர்...

பேசு கண்ணா பேசு

பேசிக்கொண்டே வேலை செய்கிறவர்களைப் பார்க்கிற போதெல்லாம் என்னையறியாமல் ஒரு பதற்றம் ஒட்டிக்கொள்ளும். எதிராளியின் வேலையோ, அதன் நேர்த்தி அல்லது பிழையோ எவ்விதத்திலும் என்னை பாதிக்கப்போவதில்லை என்றாலும் அந்தப் பதற்றத்தைத் தவிர்க்க முடிந்ததில்லை. நான் எழுதுபவன். வேலை செய்துகொண்டிருக்கும்போது, உலகம் அழிய இன்னும் ஒரு வினாடிதான் இருக்கிறது என்று எம்பெருமான் நேரில் வந்து தகவல் தெரிவித்தாலும் அது என் காதில்...

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!