சலம் – புதிய நாவல்

 

வரைகலை: ராஜன் பிஆர்

இந்நாவல், முன்மாதிரிகள் அற்றது.

வரலாறு இல்லாததொரு காலத்தைப் புனைவின் எல்லைகளற்ற சாத்தியங்களைக் கொண்டு முற்றிலும் கற்பனையில் உருவாக்கிப் பார்க்கும் முயற்சி.

‘பைசாச வேதம்’ என்று அறியப்படும் அதர்வ வேதம் தோன்றிய காலத்தில் நாவல் தொடங்குகிறது. சரஸ்வதி நதி ‘இல்லாமல் போன’ தருணத்துக்கு நியாயமாக இருந்திருக்கக் கூடிய காரணங்களைத் தனது அடித்தளமாக அமைத்துக்கொண்டு கற்பனையில் ஒரு நதிக்கரை நாகரிகத்தினை உருவாக்கிக் காட்டுகிறார் பா. ராகவன்.

இன்றைய இந்தியாவில் உயிருடன் வாழும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் எது தொடக்கமோ, அதன் வேர்களை இந்நாவல் ஆராய்கிறது.

சலம் – நாவல் முன்பதிவுக்கு:

HardCover Edition | Paperback Edition


 

வலை எழுத்து

கண்டெடுத்த வரிகள்

ஒரு நாவலை எழுதியவன் எதிர்கொள்ளும் வினாக்களுள் ஆகக் கொடூரமானது, இந்நாவல் எதைப்பற்றிப் பேசுகிறது? சுருக்கம் என்ன?

எல்லா நாவல்களுக்கும் இது வரத்தான் செய்கிறது. தவிர்க்க முடியாது. வாசிப்பு என்னும் செயல்பாடு ஒரு கிரகத்திலும் மக்கள் இன்னொரு கிரகத்திலும் வசிக்கும் வினோதமான தீபகற்பத்தில் நாம் வாழ்வதில் உள்ள சிக்கல் இது.

இடமும் இருப்பிடமும்

எழுதுவதுடன் என் பணி முடிந்தது என்று பலர் இருக்கலாம். என்னால் அது முடியாது. எழுதுகிற ஒவ்வொரு புத்தகமும் தனது இறுதி வாசகனின் கரங்கள் வரை சிதறாமல் சென்று சேர வேண்டும் என்று நினைப்பேன். அது குறித்த பதற்றம் எப்போதும் இருக்கும். அதனாலேயே புத்தகப் பதிப்பை ஒரு பக்கவாட்டுத் தொழிலாகக் கொள்ளும் பத்திரிகைகளின் பதிப்பகங்களைக் கண்டு அஞ்சுகிறேன்.

விழாதவன்

எழுத்தாளனுக்கும் வாசகர்களுக்கும் இடையில் புத்தகம் மட்டும் போதும். பிரசாரகர்கள் தேவையில்லை. ஒரு புத்தகத்துக்கு நேர்மையாகப் பிரசாரம் செய்யத் தகுதி படைத்தவர்கள் இரண்டு பேர். எழுதியவரும் வெளியிட்டவரும். மூன்றாம் தரப்பென்பது எப்போதும் இடைஞ்சலே.

சலம் முன்பதிவு ஆரம்பம்

சலம் முன்பதிவை நேற்று தொடங்கி வைத்த வாசக நண்பர்களுக்கு நன்றி.  ட்விட்டரிலும் இன்ஸ்டாகிராமிலும் இயக்குநர் சமுத்திரக்கனி இதன் முன்பதிவுச் சுட்டிகளை வெளியிட்டு வாழ்த்தினார். மகிழ்ச்சியாக இருந்தது.

தொடர்பு எல்லைக்கு அப்பால் வசித்தல்

தீவிரமாக எதையும் நான் சமூக வெளியில் எழுதுவதில்லை. முக்கியமாக அரசியலை அறவே தவிர்க்கிறேன். என்னை மீறி ஒரு சில சந்தர்ப்பங்களில் அரசியல் பேசப் போகும்போது பெரும்பாலும் அது கொதிநிலையைத் தாண்டி வெடிநிலையைக் கண்டுவிடுவதை விழிப்புணர்வுடன் கவனித்திருக்கிறேன். அதனாலேயே தவிர்ப்பதில் கவனம் செலுத்துகிறேன்.

மிருது மீம் போட்டி அறிவிப்பு

ஜந்துவை வாட்சப் சேனலில் தொடராக எழுதிய சமயத்தில் எந்தப் போட்டி அறிவிப்பும் இல்லாமலேயே மீம் புரட்சி செய்த வாசக நண்பர்களுக்கு வணக்கம்.

உங்கள் ஈடுபாட்டை மதித்து இம்முறை போட்டி அறிவிக்கிறேன்.

மிருது மதிப்புரைப் போட்டி அறிவிப்பு

நண்பர்களுக்கு வணக்கம். ஏப்ரல் முதல் தேதியில் இருந்து வாட்சப் சேனலில் ‘மிருது’ நாவலை எழுதத் தொடங்குகிறேன். இது நாள்தோறும் அங்கே பிரசுரமாகும்.

எழுத்துப் பயிற்சி வகுப்பு FAQ

இந்த ஆண்டின் இரண்டாவது எழுத்துப் பயிற்சி வகுப்புகளை ஏப்ரல் 5 முதல் தொடங்கவிருக்கிறேன். இது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படுகிற சில வினாக்களும் பதில்களும் கீழே உள்ளன.

அச்சம், விசுவாசம், அடிமைத்தனம்

விசுவாசம் அல்லது அடிமைத்தனத்தின் மூலம் தாற்காலிக லாபம் பெறுவோர் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவானவர்களே. கும்பல் மனநிலையுடன் ஒருமித்த குரலில் ஒலிக்கும்போது கிடைக்கும் அற்பக் கிளர்ச்சியே பெரும்பாலானோருக்குப் போதுமானதாக இருந்துவிடுகிறது. இது தனது தனித்துவத்தைக் கண்டறிய முடியாமையின் சோகம் அல்லது தனக்குத் தனித்துவம் உள்ளதென்றே உணர முடியாமையின் அபத்தம்.

நேர்த்தி

என் மனைவி எப்போதும் சொல்வது ஒன்றுண்டு. எதையும் அளவுடன். உணவு தொடங்கி உணர்ச்சிகள் வரை அனைத்துக்கும் பொருந்தக்கூடிய சூத்திரம்தான். ஆனால் அது எத்தனை பெரிய சிரமம் என்பது எனக்கு மட்டுமே தெரியும். என்னால் நூறு சதவீத அர்ப்பணிப்பைத் தர இயலாத எது ஒன்றின் மீதும் விரைவில் அக்கறை இழந்து போய்விடுகிறேன்.

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!