Categoryபதிப்புத் தொழில்

நீயெல்லாம் ஒரு இலக்கியவாதியா?

சில காலம் முன்னர் பத்ரி ஒருமுறை என்னிடம், ‘உங்கள் வலைப்பதிவின் சைட் பாரில்  நானொரு இலக்கியவாதி இல்லை என்று  கட்டம் கட்டிப் பெரிதாகப் போடுங்கள்’ என்று சீரியஸாகச் சொன்னார். செய்வதில் எனக்குப் பெரிய ஆட்சேபணை ஒன்றுமில்லை. அநாவசியமான சில விவாத விதண்டாவாதங்களைத் தவிர்க்கலாம் என்பதால்தான் செய்யவில்லை. எனக்கு இலக்கியம் பிடிக்கும். படைக்க அல்ல. படிக்க. அதுதான் என் எழுத்துக்கு வலு சேர்ப்பது. கொஞ்சகாலம்...

எடிட்டர் டாவிதார்

பிம்பங்கள் உடைவதைப்போல் வலி மிகுந்த சுவாரசியம் வாழ்வில் வேறில்லை. இன்றைய என் காலை பெங்குயின் எடிட்டர் டேவிட் டாவிதார் மீதான பாலியல் வழக்குச் செய்தியுடன் விடிந்தது. டாவிதார், என் மானசீகத்தில் என்னைக் கடந்த ஆறேழு ஆண்டுகளாக வழி நடத்திக்கொண்டிருந்தவர். அவர் பெங்குயின் இந்தியாவிலிருந்து மாற்றலாகி, பெங்குயின் கனடாவுக்குச் சென்று, அதன் தலைமை நிர்வாக அதிகாரியாகி எக்செல் ஷீட்டுகளுடன் வாழத்தொடங்கிய பிறகும்...

பதிப்பு – திருச்சி – கருத்தரங்கம்

ஜூன் 3, தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் பிறந்தநாளை, கௌரா இலக்கிய மன்றமும் முத்தமிழ்க் கலைப் பண்பாட்டு மையமும் உலக தமிழ்ப் பதிப்பாளர் தினமாகக் கொண்டாட முடிவெடுத்துள்ளன. இதனையொட்டி, ஜூன் 5 சனிக்கிழமை அன்று திருச்சியில் தமிழ்ப் பதிப்பாளர் தினக் கருத்தரங்கு ஒன்றை நடத்துகிறார்கள். இடம்: திருச்சி கலையரங்கம், மேல் தளம் நேரம்: மாலை 5 மணி தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றுபவர்: த. சவுண்டையா, திருச்சி மாவட்ட...

பேயோன் 1000

எனக்கு அறிமுகமான காலம் தொடங்கி இணையத்தில் நிறையப்பேர் புதிதாக எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் இணையம் பிறப்பித்த எழுத்தாளர் என்று பேயோனைத்தான் சொல்லத் தோன்றுகிறது. அவர் மக்களுக்கு நன்கு அறிமுகமான எழுத்தாளர்தான்; ட்விட்டருக்காகப் புனைபெயரில் எழுதுகிறார் என்று பலபேர் சொன்னார்கள். ஜெயமோகன் தொடங்கி, கோணங்கி வரை பலபேரது பெயர்கள் பேயோனுக்குப் பொருத்திப் பார்க்கப்பட்டுக் கைவிடப்பட்ட கதை அநேகமாக தமிழ்...

தேவை, அவசர உதவி

இந்தப் பையன் நன்றாக எழுதுகிறான். சிறுகதைகளைப் படித்துப் பார்த்தேன், உருக்கமாக, நன்றாக உள்ளன. பிரசுரித்து ஊக்குவிக்க முடியுமா பார் என்று ஒரு துண்டுத் தாளில் எழுதிக் கையெழுத்திட்டு அனுப்பியிருந்தார் அசோகமித்திரன். ஈர்க்குச்சிக்கு மூக்குக் கண்ணாடி போட்ட மாதிரி என்னெதிரே நின்றுகொண்டிருந்த முத்துராமனுக்கு அப்போது அதிகம் போனால் இருபது வயதுதான் இருக்கும். ஆதிகால மணிரத்னம் படங்களில் இடம்பெற்ற வசனங்களை...

எழுதுபவர்களும் எழுத்தாளர்களும்

ஓர் எழுத்தாளன் எவ்வாறு உருவாகிறான் என்று எளிதில் சொல்ல முடியாது. எல்லோருக்கும் சொல்ல விஷயங்கள் உண்டு. எல்லோரும் ஏதோ வகையில் சொல்லிக்கொண்டிருக்கிறோம். கடிதங்கள், கவிதைகள், கட்டுரைகள், கதைகள் எழுதுகிறோம், பத்திரிகைகளுக்கு அனுப்புகிறோம், வலைப்பதிவுகள் எழுதுகிறோம், டிவியில், சாத்தியமுள்ள அனைத்து ஊடக முறைகளையும் பயன்படுத்துகிறோம். ஆனால் எழுதுபவர் என்கிற படியிலிருந்து எழுத்தாளர் என்னும் படிக்குச்...

எழுத்தாளர்களின் ராயல்டி

முன்னர் சாரு. இப்போது ஜெயமோகன். இரண்டு முக்கியமான எழுத்தாளர்கள் தமது புத்தகங்களின் விற்பனை குறித்தும், கிடைக்கும் ராயல்டி பற்றியும் மனம் திறந்து எழுதியிருக்கிறார்கள். [ஆக, இந்தக் கிசுகிசுவில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொகை, இந்த இரு எழுத்தாளர்களைப் பொருத்த அளவில் பொய்யானது என்பது உறுதியாகிறது.] ஆண்டிறுதியில் இவர்கள் நடத்தும் புத்தக வெளியீட்டு விழாக்களுக்கு முண்டியடிக்கிற கூட்டம், நிகழ்ச்சிக்குக்...

சிறுகதைப் பயிலரங்கம் – சில குறிப்புகள்

உரையாடல் அமைப்பின் சிறுகதைப் பயிலரங்கில் நேற்று கலந்துகொண்டேன். தமிழ்நாட்டில் சிறுகதை பயில நூறு பேர் பணம் கட்டி வரக்கூடியவர்கள் இருக்கிறார்கள் என்பது வியப்பல்ல; மகிழ்ச்சி. சில வருடங்களுக்கு முன்னர் தமிழோவியத்தில் புனைகதைகளின் எதிர்காலம் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். கதைகளில் இருந்து கதையல்லாத எழுத்தை நோக்கி நகர்வது பரிணாம வளர்ச்சி என்று அதில் குறிப்பிட்டிருந்தேன். கொஞ்சம் தீவிரமான சர்ச்சைகளை...

நினைக்காத நாளில்லை

என்றும் நினைக்க வேண்டும். இன்றாவது நினைக்கலாம். மகாகவி பாரதி நினைவு தினம் இன்று [செப் 11].
எனவே இன்றொருநாள் குறுங்குடிலில் என் வெண்பாம் இம்சைகள் இருக்காது.

Prodigy பயிலரங்கம் [1]

எழுதுவது தொடர்பாகச் சொல்லிக்கொடுக்கப்படும் விஷயங்களால் பத்து பைசா பிரயோஜனமில்லை என்பது என் கருத்து. எனக்குப் பல பேரிடம் கற்றுக்கொள்ளச் சென்ற அனுபவமும் உண்டு; எழுத்துப் பயிலரங்குகளில் வகுப்பெடுத்த அனுபவமும் உண்டு. கிழக்கு ஆரம்பிக்கப்பட்ட பிறகு இந்தப் பயிலரங்கு நடவடிக்கைகள் அடிக்கடி என் வாழ்க்கையில் குறுக்கிடுகின்றன. விதியை வெல்ல யாராலும் முடியாது. எப்படி எழுதலாம், அல்லது எப்படி எழுதவேண்டும் என்கிற...

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!