Warning: Undefined array key "00" in /home/writerpara/webapps/writerpara/wp-includes/class-wp-locale.php on line 321

Warning: Undefined array key "00" in /home/writerpara/webapps/writerpara/wp-includes/class-wp-locale.php on line 321

Warning: Undefined array key "00" in /home/writerpara/webapps/writerpara/wp-includes/class-wp-locale.php on line 321
0 | Page 4 of 22 | Pa Raghavan
Warning: Undefined array key "00" in /home/writerpara/webapps/writerpara/wp-includes/class-wp-locale.php on line 321

Warning: Undefined array key "00" in /home/writerpara/webapps/writerpara/wp-includes/class-wp-locale.php on line 321

Archive2017

பூக்களால் கொலை செய்கிறேன்

வயது என்னை ஆண்டு கொண்டிருந்த காலம் அது. எதிர்காலம், இரு சாத்தியங்களாயிருந்தது அப்போது. ஒன்று, நானொரு தேர்ந்த பொறுக்கியாகி விடலாம். அல்லது கவிஞனாக. கர்த்தருக்கு நன்றி. டெய்ஸி வளர்மதி என் பாதையில் காதலியாக எதிர்ப்பட்டதும் நான் கவிஞனாகிப் போனேன். நண்பர்கள் வியந்தார்கள். குறிபார்த்துப் பேராசிரியர்களின் வாகனங்களின் மேல் கல்லெறிவதும், ஸ்டிரைக்குகள் சமயம் கல்லூரி நிர்வாகத்தைக் கடுமையாகக் கண்டித்து...

ஒரு வருட பேலியோ – கிடைத்தது என்ன?

நண்பர்களுக்கு வணக்கம். இந்தக் குறிப்பை நான் இன்னும் சில தினங்கள் முன்னதாக எழுதியிருக்க வேண்டும். சில சொந்தப் பிரச்னைகளால் முடியாமல் போய்விட்டது. கடந்த ஆண்டு [2016] ஜூலை 23ம் தேதி வெஜ் பேலியோ கடைப்பிடிக்க ஆரம்பித்தேன். டாக்டர் ப்ரூனோ எனக்கு அடிப்படைகளை விளக்க, திரு. சங்கர்ஜி எனக்கு ஆரம்ப டயட் கொடுத்தார். மூன்று மாதங்களில் வாரியருக்கு இடம் பெயர்ந்தேன். அப்போது முதல் திரு சவடன் என்னைக் கவனிக்கத்...

ஒரு கடிதம் – கடுகு

அன்புள்ள பா.ரா அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீகள் என்று நம்புகிறேன். இங்கு நியூ ஜெர்சியில் இருக்கிறோம். இத்துடன் உள்ள படம் சற்று வித்தியாசமான முறையில், கிட்டத்தட்ட 100 Step-பில் போட்டோஷாப்பில் உருவாக்கியது. MONEY STYLE etched graphics என்கிறார்கள். பல நாள் முயற்சி செய்து செய்து ஓரளவு தேறிவிட்டேன். எழுத்தாளர்கள். அரசியல்வாதிகள், நடிக, நடிகையர், பாடகர்கள், பாடகிகள் என்று பலரை...

ருசியியல் – 32

வசமாக மாட்டினீர்கள். இம்முறை நான் எந்த உணவைப் பற்றியும் எழுதப் போவதில்லை. கதறவைக்கும் ஒரு கண்ணீர்க் காவியத்துக்குத் தயாராக வேண்டியது உங்கள் ஊழ். எப்பப்பார் உணவைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தால் உண்பதைப் பற்றி வேறு எப்போது பேசுவது? அதுவும் எம்பெருமான் யாருக்கு, எந்த இடத்தில், எம்மாதிரியான தங்க ஆப்பு தயாரித்து வைப்பான் என்பது தெரியாது. இந்த, கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை என்பார்களே, அதைச்...

தோற்ற மயக்கம் அல்லது யாருடா நீ மூதேவி.

நான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் முன்னூறு குடும்பங்கள் இருக்கின்றன. தோராயமாகக் கணக்குப் போட்டால் மொத்த மக்கள் தொகை சுமார் ஆயிரம். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு என்னைத் தெரியாது. தெரிந்த சிலருக்கும் முகம் தெரியுமே தவிர என்னைப் பற்றிய தகவல்கள் எதுவும் தெரிய வாய்ப்பில்லை. கவனமாக நான் அதைத் தவிர்ப்பேன். ஓர் எழுத்தாளனாக, புகைப்படங்களைப் பத்திரிகைகளில் பார்த்துவிட்டு அடையாளம் கண்டு...

ருசியியல் – 31

இரு வாரங்களுக்கு முன்னர் என் தந்தை காலமாகிப் போனார். நல்ல மனிதர். எனக்கு நிறைய செய்தவர். அதில் தலையாயது, என்னை முழுச் சுதந்தரத்துடன் வளரவிட்டது. யோசித்துப் பார்த்தால் நான் செய்த எதையுமே அவர் மறுத்ததோ நிராகரித்ததோ இல்லை. இதைச் செய்யாதே என்று சொன்னதும் இல்லை. எத்தனை பேருக்கு அப்படியொரு அப்பா கிடைப்பார் என்று தெரியவில்லை. விடுங்கள், விஷயத்துக்கு வருகிறேன். அப்பா இறந்த அதிர்ச்சியை உள்வாங்கி ஜீரணித்து...

காணாதிருத்தல்

புத்தக அடுக்கின் நடுவே ஏதோ ஒன்று உருவப்பட்டு காணாமல் போயிருக்கிறது நானே எடுத்திருப்பேன் அல்லது யாராவது. ஒற்றைப் பல்லிழந்த கிழவியின் புன்னகைபோல் ஈயென்று இளிக்கிறது புத்தக அடுக்கு காணாமலான புத்தகம் எதுவாக இருக்கும் யோசனையில் கழிகிறது பொழுது அவசரத்துக்கு எடுப்பதையெல்லாம் வாரமொருமுறை அடுக்கிவிடுவேன் அவ்வப்போது புரட்டுவதை அப்போதைக்கப்போதே வைத்துவிடுவேன் எனக்குத் தெரியாமல் என் அறைக்கு வருவோர் இல்லை...

ருசியியல் – 30

கால் கிலோ அவரைக் காயை எடுத்துக்கொள்ளவும். நாரை உரித்துவிட்டு அப்படியே மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவில் உப்பு, மிளகாய்ப்பொடி போட்டுக் கலந்து வைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை ஏற்றி எண்ணெய் விட்டுக் காயவைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் அரைத்து வைத்திருக்கும் அவரை மாவை உள்ளங்கையில் வைத்து தட்டித்தட்டி அதில் போட்டுப் பொரித்தெடுக்கவும். சுவையான அவரை வடை தயார். மேற்படி...

10

ஓவியா அழுதிருக்கிறாள் கோவிந்து வந்திருக்கிறார் எப்போதுமில்லா வழக்கமாக எங்களூர் ஏடிஎம்மில் பணம் இருந்திருக்கிறது தக்காளி விலை ஏறி ராயப்பேட்டை புத்தகக் காட்சியில் விற்பனை சரிந்திருக்கிறது விஜய் சேதுபதிக்கு இன்னொரு நல்லபடம் பாதாம் நூறென்றால் கிராமா நம்பரா நேற்றும் குழுமத்தில் கேட்டிருக்கிறார் யாரோ ஒருவர் குறும்பட இயக்குநர் கைதாகி சமூகப் பொதுவெளியில் பிரபலமாகியிருக்கிறார் ஆந்திரத்தில் கஞ்சா கடத்தல்...

ஒரே ஒரு அறிவுரை

எலும்புகளை ஒரு சட்டியில் போட்டு வைத்திருந்தார்கள். அவை சூடாக இருந்தன. எட்டு மணி நேரத்துக்கு முன்பு வரை அப்பாவாக இருந்து, பிறகு பிரேதமாகி, இப்போது ஒரு சிறு மண் சட்டிக்குள் அவர் எலும்புத் துண்டுகளாக இருந்தார். சாம்பல் குவியலில் இருந்து பொறுக்கியெடுத்தவர் கைகள் சுட்டிருக்கும். காரியம் முடியவே ஆறு மணிக்குமேல் ஆகிவிட்டபடியால் உடனடியாக இடத்தைக் காலி பண்ணவேண்டியிருந்தது. சுடுகாட்டு ஊழியர்களுக்கும் வீடு...

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!