வலை எழுத்து

விபூதி யோகம்

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு ராமேஸ்வரத்துக்கு அடிக்கடிச் செல்வேன். காரணம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அது வழக்கமாகியிருந்தது. அப்போது கல்கியில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். வாரம் ஐந்து நாள்கள் வேலை. சனி ஞாயிறு விடுமுறை. வெள்ளிக்கிழமை மாலை ரயில் ஏறினால் சனிக்கிழமை காலை பதினொன்றரைக்கு ராமேஸ்வரம் சென்று சேர்ந்துவிடலாம். ஞாயிறு மாலை வரை அங்கு இருந்துவிட்டுக் கிளம்பினால் திங்கள் முதல் மீண்டும்...

byngeapp சிறந்த கேள்வி – போட்டி முடிவு

ByngeThamizh அறிவித்திருந்ததை ஏற்றுக் கேள்விகள் அனுப்பிய அனைத்து வாசக நண்பர்களுக்கும் நன்றி. சுமார் இருநூறு கேள்விகள் வந்திருந்தன. அனைத்தையும் படித்து, கூடியவரை அந்தப் பக்கத்திலேயே அவற்றுக்கு பதில் சொல்லியிருக்கிறேன். சில கேள்விகளுக்கு இன்னும் பதில் எழுதவில்லை. நேரமின்மையே காரணம். ஓரிரு நாள்களில் எழுதிவிடுகிறேன். ஆனால் இன்று பரிசுக் கேள்வி பதிலை அறிவித்துவிட வேண்டும் என்று சொன்னார்கள். ஐந்து...

கபடவேடதாரி – முனைவர் ப. சரவணன் மதிப்புரை (அத்தியாயம் 20)

“ந நிர்மிதஹ கேன ந த்ருஷ்டபூர்வஹ ந ச்ரூயதே ஹேம மயஹகுரங்கஹ ததாபி த்ருஷ்ணா ரகுநந்தனஸ்ய விநாச காலே விபரீத புத்திஹி” (சாணக்கிய நீதி, அத்யாயம் – 16, ஸ்லோகம் – 5) ஒருவருக்குக் கெட்ட காலம் வந்தபோது மனது தடுமாறி தவறான முடிவு எடுப்பார்கள். அதனால் அவருடைய அழிவை அவரே தேடிக்கொள்வர். அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட பெண் சாகரிகா. எனக்கென்னவோ இந்தப் பெயரை வாசிக்கும் போதெல்லாம் ‘சாகறீயா?’ என்றே...

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 19)

‘ஜிங்கோ பிலோபா’ ‘விஷம் முறிக்கும் விஷமரம்’, ‘செம்மொழிப் பிரியா’, ‘திராவிடத் தாரகை’, ‘கலாச்சார செயலர்’ என்று இந்த அத்தியாயத்தில் புனைவில் புகுந்து விளையாடியிருக்கிறார் நம் எழுத்தாளர். கதையின் விறுவிறுப்பு சற்றும் குறையாமல் இருக்கிறது. “கோவிந்தசாமிக்கு அந்த மரத்தின் மகிமை தெரிந்து இலைகளைச் சாப்பிட்டாலும் மரம் தான் மொட்டையாகுமே தவிர அவன் மாற மாட்டான்.” – இவ்வளவு...

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 18)

நம் சூனியன் தான் கபடவேடதாரி என்று இது வரையில் நினைத்திருந்தேன். அனால் இந்த அத்தியாயத்தில் தான் பாரா தான் நம் கபடவேடதாரி என்று தெரிகிறது. பாரா தான் சாகரிகாவின் மூளைக்குள் சென்று அவளை ஆக்ரமித்து, நினைவுகளை அழித்து, இவர்கள் வாழ்க்கையில் வில்லனாக இருக்கிறார்.ஆனால் எதற்கு இதையெல்லாம் செய்தார் என்று தான் தெரியவில்லை. இந்த அத்தியாயத்தில் எழுத்தாளரின் இந்த இரண்டு வரிகள் என்னை வெகுவாய் ஈர்த்தது, “எனக்கு...

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 17)

கோவிந்தசாமி அவனது கவிதைக்கு நிழலிடமிருந்து கிடைத்த மதிப்புரையை (?!) கேட்டதில் இருந்து சற்று கோபமாக இருக்கிறான். என்னதான் இருந்தாலும் காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு தானே. அனால், கோவிந்தசாமி ‘பேரிகை’ இதழில் காதலர் தினத்துக்காக எழுதிய கவிதை கொஞ்சம் பரவாயில்லை போல தான் இருந்தது. அப்போது அவனுக்கு தெரிந்த அறிஞர் ஒருவர் மூலம், கிருஷ்ணரால் ஏற்பட்ட சந்தேகத்தை தீர்த்துக் கொள்கிறான். அப்போதும்...

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 16)

கோவிந்தசாமி காதலின் ஆழத்தை நிழலின் மூலமாக தெரிந்துக் கொள்கிறோம், வேண்டுதலைக் கூட தன்னை மறந்து, சாகரிகாவை கண்ணில் காட்டி விடுமாறு வேண்டும் கோவிந்தசாமியின் காதல் ஆழமாக தெரிகிறது. எதற்காக இவ்வளவு தூரம் அவனை வெறுத்து ஒதுக்கியும், அவளை சேர பாடுபடுகிறான் என இப்போது புரிகிறது. காதல் தன் வேலையைக் காட்டுகிறது. ரொம்ப இயல்பான காதலின் பதற்றம், தன்னுடைய தோற்றத்தின் மீதான கவனம் என நம்மை நெகிழ வைக்கிறது...

கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 20)

சூனியனுக்கு சாகரிகாவின் மீது நேரடியாக எந்த வன்மமும் இல்லைதான். உண்மையில் அவள்மீது அவனுக்கு கொஞ்சம் காமமும் இருந்தது. அவனது எண்ணமெல்லாம் அவளை எப்படியாவது அந்த முட்டாள் கோவிந்தனுடன் சேர்த்து வைத்துவிட வேண்டும் என்பதாகத்தான் இருந்தது. ஆனால் அவனது இலக்கிய எதிரி்க்கு அவள் துணைபோய் விட்டாள் என்பதை அறிந்தவுடன்தான் அந்த வன்மம் தொடங்கியது. அந்த நகரத்தின் கலாசார செயலாளர் ஆவது பெருமைக்குறிய விஷயம்...

கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 19)

பூங்காவில் உறங்கிக் கிடக்கும் கோவிந்தசாமியை சூனியன் சந்திப்பது, அவன் படுத்திருக்கும் ஜிங்கோ பிலோபா மரம் பற்றிய தகவல், அதன் மருத்துவ குணம், அதுகுறித்து போகருக்கும், அவர் சீடர் புலிப்பாணிக்கும் நிகழ்ந்த விவாதம், ஜிங்கோ பிலோபா வளர்வதற்கான சூழல் என அத்தியாயம் நீண்டு திறக்கிறது. தன் வீட்டு முற்றத்தில் புதைந்து கிடக்கும் புதையலை அறியாமல் அதை தேடித் திரிந்தவன் கதையாய் தான் படுத்திருந்த மரத்தின்...

கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 18)

சாகரிகா சங்கப்பலகையில் எழுதுவது உள்ளிட்ட அனைத்தும் பா.ரா.வின் சூது என அறிந்து கொள்ளும் சூனியன் தன் எதிரியான பா.ரா வின் யோக்யதை குறித்து கிஞ்சித்தும் நமக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக ”பூரண அயோக்கியன்” என்ற ஒற்றை வார்த்தையில் அவரின் குணாதிசதியத்தைச் சொல்லி விடுகிறான். கோவிந்தசாமியின் நினைவுகளை முழுமையாக அழித்தொழிக்க சாகரிகா பா.ரா.வின் உதவியை நாடுகிறாள். அவரும் அதற்கு ஒப்புக் கொள்கிறார். அவளை...

தொகுப்பு

Random Posts

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!