சாகரிகா சங்கப்பலகையில் எழுதுவது உள்ளிட்ட அனைத்தும் பா.ரா.வின் சூது என அறிந்து கொள்ளும் சூனியன் தன் எதிரியான பா.ரா வின் யோக்யதை குறித்து கிஞ்சித்தும் நமக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக ”பூரண அயோக்கியன்” என்ற ஒற்றை வார்த்தையில் அவரின் குணாதிசதியத்தைச் சொல்லி விடுகிறான். கோவிந்தசாமியின் நினைவுகளை முழுமையாக அழித்தொழிக்க சாகரிகா பா.ரா.வின் உதவியை நாடுகிறாள். அவரும் அதற்கு ஒப்புக் கொள்கிறார். அவளை...
கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 19)
கோவிந்தசாமியின் தலைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனது வருத்தத்திற்கு உரியதே. ஆனால், இது சூனியனுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதே. ‘அரிய இலையைத் தின்று விட்டால், அறிவார்ந்த கோவிந்தசாமியாக மாறி விட்டால்’ என்று சூனியன் எண்ணுகிறான். ஆனால், மாற வாய்ப்பு இல்லை என்று முடிவுக்கும் வருகிறான். கோவிந்தசாமியைத் தூண்டிலாகப் பயன்படுத்திப் பாராவை வீழ்த்தி விடத் துடிக்கிறான் சூனியன். அதனால்தான் கோவிந்தசாமி வெறுத்த...
கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 18)
பாரா என்று பெயர் வைத்ததற்குப் பதிலாகக் ‘கபடவேடதாரி’ என்று பெயர் வைத்திருக்கலாம். மிகப் பொருத்தமாக இருந்திருக்கும். தன்னை நிலை நிறுத்தச் சூனியனுக்குச் சூனியனாக இந்தப் பாரா உள்ளார். நீல நகரத்திற்குப் பாராவை அழைத்து வந்தது சாகரிகா என்பதை உறுதிபட அறிந்து கொள்கிறான் சூனியன். அவளது நேர்த்தியாகச் சொல்லிற்குக் காரணமான பாராவையும் அறிந்து கொள்கிறான். சூனியன் சாகரிகா, பாராவின் மீதுள்ள கோபத்தை, “அவளுக்கு...
கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 17)
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஆஸ்திகம், நாஸ்திகம் ஆகிய இரண்டுமே கலந்திருக்கின்றன என்பதை அறிஞர் கோவிந்தசாமி உரையாடல் வழியே உணரமுடிகிறது. இது மறுக்க முடியாத உண்மையும்கூட. இருவருக்கும் நடைபெறும் உரையாடலை வாசிக்கும் பொழுது எனக்குச் சிரிப்புத் தோன்றியது. மனித மூளையில் தூசிப் படிந்த சில பகுதிகள் இருக்கும். அதைத் தன் எழுத்து என்னும் துடைப்பான் கொண்டு துடைக்கிறார் பா. ராகவன் அவர்கள். அவனுக்கு இறுதி வரை அவன்...
கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 19)
சூனியன் தன்னுடைய எதிரியான பா.ரா.வை எதிர்கொள்ள வேண்டும் என்கிற முதன்மையான பணியை முடிக்கும்வரை வேறெந்த பணியையும் தொடுவதில்லை என்கிற முடிவுக்கு வந்தபின் கோவிந்தசாமியோ அல்லது அவனது நிழலோ அவனுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை. அதனால் தன் எதிரியை எதிர்கொள்ளும் முயற்சியின் முதல்படியாக கோவிந்தசாமியின் உள்நுழைந்து தன் வேலைகளை தொடங்குகிறான். ஒரு இடத்தில் பிரச்சினை இருக்கிறது அதை ஒருவர் எதிர்த்து குரல்...
கபடவேடதாரி – திவாகர். ஜெ மதிப்புரை (அத்தியாயம் 19)
சென்ற அத்தியாயத்தில் திராவிடத்தை உயர்த்தினார் என்று மகிழ்ந்திருக்கும் வேளையிலே ஒரே போடாக போட்டுத் தாக்கி விட்டார் இந்த அத்தியாயத்தில். ஆனால் அங்கு பேசியது பா.ரா. இங்கு பழித்தது சூனியன். கண்ணதாசன் குறிப்பிடும் அந்த பகுத்தறிவாளர் யாரென்று ஊகிக்க முடிகிறது. ஆனால், செம்மொழிபிரியா??? அடுத்ததாக ஜிங்கோ பிலோபா மரம். உண்மையில் அப்படியொரு மரம் இருக்கிறதா? Google செய்து பார்க்க வேண்டும். இந்த மனிதருக்கு...
கபடவேடதாரி – திவாகர். ஜெ மதிப்புரை (அத்தியாயம் 18)
சாகரிகாவின் மூளைக்குள் பா.ரா.! அவரின் நிறைய புத்தகங்களைப் படித்திருப்பாளோ என்று நினைத்தேன். இல்லை. இது வேறு என்று புரிகிறது. அப்போ பா.ரா.வும் சூனியனும் ஒரே ஆள் அல்ல. Confirm. இன்று காலை தற்சார்பு பொருளாதாரம் பற்றி ஒரு கிரீஸ் டப்பாவின் பதிவினை முகநூலில் படிக்க நேர்ந்தது. அதில் ஏகப்பட்ட எழுத்துப் பிழைகள். இங்கும் அப்படித்தான் பா.ரா. குறிப்பிடுகிறார். “எனக்கு ஒற்றுப் பிழை இல்லாமல் எழுத வராது...
கபடவேடதாரி – திவாகர். ஜெ மதிப்புரை (அத்தியாயம் 17)
கோவிந்தசாமியின் நிழல் கோபித்துக் கொண்டு அவனை விட்டு பிரிந்ததை விடவும் தனது கவிதையை அது மொக்கை என்று கூறியது தான் அவனுக்கு பெரும் அவமானமாகிப் போகிறது. காதலர் தினத்திற்கு எப்போதும் போல் அவன் சார்ந்த கட்சியின் வடக்கத்தி தலைவர் ஒருவர் எதிர்ப்பு தெரிவிக்க அது குறித்து அவன் ஒரு கவிதை எழுத முனைவதே இந்த அத்தியாயம். இடையில் கிருஷ்ணனை ஒரு காட்டு காட்டி விடுகிறார் பா.ரா. இவருக்கு ஏன் கிருஷ்ணனின் மீது...
கபடவேடதாரி – முனைவர் ப. சரவணன் மதிப்புரை (அத்தியாயம் 19)
கொடுக்குற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுத்தாலும்’ அதைப் பெற்று அனுபவிக்கும் குறைந்த பட்ச அறிவு இல்லாதவரால் எந்த நன்மையையும் அடைந்துவிட முடியாது. வாசகர்கள் அனைவரும் கோவிந்த சாமிக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்ள வேண்டியதுதான். இந்தக் கோவிந்தசாமியை வைத்துக்கொண்டு சூனியன் அடையும் மனத்தடுமாற்றங்கள் பல. ஒருவழியாகக் கோவிந்தசாமியின் நிழலை அது புறக்கணித்துவிட்டது. இனி, சூனியனுக்குக்...
கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 18)
சூனியனுக்கு சமமான ஒரு எதிரி கதையில் வரவில்லையே என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் அதுபற்றி ஆசிரியர் கடந்தசில அத்தியாயங்களாக சொல்லி வந்தது இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. சூனியன் ஒரு அசுர சக்தி. அவனுக்கு இணையான ஒரு சக்தி மறுபுறம் இருக்கவேண்டுமென்றால் அது கடவுளின் அருளையோ அல்லது கடவுளுக்கு இணையாக இருக்கும் ஒருவரின் அருளையோ ஆசியையோ பெற்றவராக இருக்கவேண்டும் என்பது இயற்கைதானே. தன்னை கோரக்கரின்...