சாகரிகாவின் தோழியான ஷில்பாவை சந்தித்த கோவிந்தசாமி சாகரிகா தன்னுடன் திரும்பி வந்து வாழவோ அல்லது குறைந்தபட்சம் அவன் மீது தவறில்லை என்பதை நிரூபிக்கவாவது ஷில்பாவின் உதவியைக் கோருவதே இந்த அத்தியாயம். “உனக்கு சாவே கிடையாது என்று இறுதி வரை நம்பிக்கை அளிப்பார்கள். பிறகு RIP சொல்லி விடுவார்கள்” – இக்கொடூர சூழலில் இவ்வரிகளை வாசிக்கையில் ஏனோ ஒரு வருத்தம் உள்ளுக்குள் சூழ்ந்தது. கதை இப்போது...
கபடவேடதாரி – திவாகர். ஜெ மதிப்புரை (அத்தியாயம் 11)
நீங்கள் அறியாதது ஒன்றுமில்லை. முகநூலில் ஒரு பெண் பெயர் கொண்ட ஐடி ஒரு நிலைத் தகவலைப் பதிவிட்டால் எவ்வளவு விருப்பக்குறிகள் (likes), கருத்துகள் (comments) வரும். இன்னும் ஒரு படி மேலாய், அதனோடு தன் புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டால்? இதே, ஓர் ஆண் ஒரு தகவலைப் பதிவிட்டால்??? அதே கதை தான் நீல நகரத்தில் மக்கள் தங்கள் தகவல்களைப் பகிரும் வெண்பலகைக்கும். போன அத்தியாயத்தில் விட்ட குறையை சொல்ல மறந்தோமே...
கபடவேடதாரி – சாய் வைஷ்ணவி மதிப்புரை (அத்தியாயம் 1)
சாய் வைஷ்ணவியின் முதல் அத்தியாயத்துக்கான மதிப்புரை இங்கே உள்ளது.
கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 10)
உண்மை. உண்மை. இந்த உண்மைக்குப் பல நேரங்களில் மதிப்பு இருப்பதில்லை. அதனால்தான் காரியவாதிகள் உண்மை மீது வர்ணத்தைப் பூசிப் பொய்யாக்குகின்றனர். அந்த வர்ணம் ஈர்க்கிறது. வர்ணத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் அதனைத் தன் மனத்திற்குள் செலுத்திக் கொள்கின்றனர். ஆனால், நம் சூனியனோ உண்மையையும் பொய்யையும் ஆராயத் தெரிந்தவன். அறிந்து கொள்ளக்கூடியவன். முதலில் அவன் கோவிந்தசாமியின் தலைக்குள்ளேதான் இறங்கினான். ஆகவே, அவன்...
கபடவேடதாரி – முனைவர் ப. சரவணன் மதிப்புரை (அத்தியாயம் 10)
கோவிந்த சாமியின் நிழலுக்கும் சூனியனுக்குமான உணர்ச்சிகரமான உரையாடல் இந்த அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ளது. ‘ஒருவரைப் பற்றிப் பிறரது கருத்தே அவரின் ஆளுமையாக மற்றவரால் கருதப்படுகிறது’ என்ற கருத்தை இந்த அத்தியாயத்தில் எழுத்தாளர் உயர்திரு. பா. ராகவன் அவர்கள் தெரிவித்துள்ளார். கடவுளுக்கும் கடவுளின் விரோதிக்குமான போராட்டம் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்து. யுகப்பிரளயம் பற்றிய செய்தியும் குறிப்புணர்த்தப்...
கபடவேடதாரி – முனைவர் ப. சரவணன் மதிப்புரை (அத்தியாயம் 9)
ஒன்பதாவது அத்தியாயத்திலிருந்து இந்த நாவலின் கதைகூறும் முறையில் ஒரு மாறுதல் ஏற்பட்டுள்ளது. புகைவண்டி புதிய திசையில் செல்ல தண்டவாளத்தை மாற்றிக்கொள்வது போல இது அமைந்துள்ளது. இதுவரை வாசித்துவந்த வாசகர்கள் சற்றுத் தயங்கி, இந்தப் புதிய கதைசொல்லியைப் பின்தொடரத் தொடங்குவார்கள். ஒருவகையில் இந்த அத்தியாயம் முழுக்க முழுக்க தன்னிலை விளக்கமாகவே அமைந்துள்ளது. கதையின் ஓட்டம் ஆற்றொழுக்காக மாறிவிடுகிறது...
கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 7)
தனக்கு வேண்டாம் என்ற ஒன்றை அவ்வளவு தெளிவாகவும், தைரியமாகவும் எடுத்து சொல்லும் நம் சாகரிகாவின் மீது பொறாமையாக இருக்கிறது. இந்த மனோதிடம் மட்டும் எல்லோரிடமும் இருந்துவிட்டால் எவ்வளவு உசிதமாக இருக்கும். மொழியறிவைக் கற்றுக்கொள்ள பிரஜையாக மாறினால் போதும் என்ற விதிமுறை பிரமாதம். மேலும் இந்த நகரில், மக்களிடையே எந்த ரகசியமும் இல்லை என்ற வழக்கமும் அழகு. இந்த அத்தியாயத்தில் மொழி நடையும், சொற்கட்டமைப்பும்...
கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 6)
சூனியன் மற்றும் கோவிந்தசாமியின் நிழலோடு சேர்ந்து நாமும் நீல நகரத்திற்குள் நுழைந்து விட்டோம், மனிதர்களுக்கு இருப்பதை போல சூனியனுக்குள்ளும் தற்பெருமை ( நீல நகரத்தை அவனுடைய கிரகத்தோடு ஒப்பிட்டு பெருமை கொள்கிறான் ) கொள்ளும் மனோபாவம் இருக்கிறது, பல இடங்களில் சூனியனிடம் மனித உணர்வுகள் மேலோங்க ஏதோ காரணம் இருக்கும் என நினைக்கிறேன். நீல நகர கட்டட அமைப்புகள் மட்டும் வித்தியாசமாக இல்லை, அதில் வாழும்...
கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 5)
ஒரு கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், அனால் நம் கோவிந்தசாமிக்கும், சாகரிகாவுக்கும் இடையில் அடிப்படை புரிதல் கூட இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. கோவிந்தசாமியின் முந்திய தலைமுறைகளின் வாழ்வை நகைச்சுவை கலந்த நடையில் வாசித்தது வெகு சுவாரசியமாய் இருந்தது. அடிப்படை புரிதல் இல்லாத இருவர் பிரிவது இயல்பு தான், மேலும் சொல்ல போனால் அது தான் இருவருக்குமே நல்லது. இது தெரியாத நம் கோவிந்த்...
கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 9)
‘பாரா’ என்று அழைக்கப்படும் நபர் யார்? இதில் எப்படி நுழைந்தார். எதற்காக நுழைந்தார்? என்று சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில் சூனியன் அதெல்லாம் உனக்கெதுக்கு? கதையைப் படி என்றதும் ஒன்பதாவது அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்கினேன். மண்வாசனை வீசுவது போல் அரசியல் வாசனை இந்த அத்தியாயம் முழுவதும் தெறிக்கிறது. அரசியலைப் பற்றியும் அதனோடு தொடர்புடையவர்களையும் சொல்லிச் சென்றுள்ளார். சமூகம் பெண்ணுக்குச் சில...