வலை எழுத்து

ஹரே கிருஷ்ணா!

இந்த வருடம் எங்கள் வீட்டு கொலுவில் சேரும் புதிய பொம்மைகளுள் எனக்குப் பிடிதது, கிருஷ்ண பாகவதர் கச்சேரிக் காட்சிகள்.
திருவிளையாடல் படத்தில் சிவாஜியே அனைத்து இசைக்கலைஞர்களாகவும் உட்கார்ந்து வாசிக்கிற ஸ்டைல்தான். ஒரு முழு கிருஷ்ணர் செட். அனைத்து கிருஷ்ணர்களும் ஏகாந்தமாகப் பாடி, வாசித்துக் களிக்கிறார்கள்.
என்ன அழகு இந்த பொம்மைகளில்!

ஸ்வீட் எடு, கொண்டாடு!

சென்ற வாரத்தில் ஒருநாள், சென்னை நகரின் நட்ட நடு செண்டரிலிருந்து கிழக்குக் கடற்கரையோரம் அமைந்துள்ள சாந்தோம் தேவாலயத்தை ஒட்டிய ஒரு சந்து வரை ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. நீதி ஏதும் கேட்கிற உத்தேசமில்லை என்றாலும் நீண்ட நெடும் பயணம்தான். என் மூஞ்சூறு வாகனத்தில் உரிய இடத்தைச் சென்றடைய எப்படியும் ஒன்று முதல் ஒன்றரை மணிநேரம் ஆகலாம் என்று கணக்கிட்டு இருந்தேன். ஆனால் என்ன ஆச்சரியம். முதல்வர்...

பேசு கண்ணா பேசு

பேசிக்கொண்டே வேலை செய்கிறவர்களைப் பார்க்கிற போதெல்லாம் என்னையறியாமல் ஒரு பதற்றம் ஒட்டிக்கொள்ளும். எதிராளியின் வேலையோ, அதன் நேர்த்தி அல்லது பிழையோ எவ்விதத்திலும் என்னை பாதிக்கப்போவதில்லை என்றாலும் அந்தப் பதற்றத்தைத் தவிர்க்க முடிந்ததில்லை. நான் எழுதுபவன். வேலை செய்துகொண்டிருக்கும்போது, உலகம் அழிய இன்னும் ஒரு வினாடிதான் இருக்கிறது என்று எம்பெருமான் நேரில் வந்து தகவல் தெரிவித்தாலும் அது என் காதில்...

கொஞ்சம் சோறு, கொஞ்சம் வரலாறு

சாப்பிடுகிற விஷயத்திலும், அதைப் பற்றி எழுதுகிற விஷயத்திலும் எனக்கு எத்தனைக் கொலைவெறி ஆர்வம் உண்டு என்பது உங்களுக்குத் தெரியும். பத்திரிகைகளில் நான் இதுநாள் வரை எழுதிய அத்தனை தொடர்களிலும் பார்க்க, எனக்கு மிகவும் பிடித்தமானது உணவின் வரலாறுதான். ரசித்து ரசித்துத் தகவல் திரட்டி, ருசித்து ருசித்து எழுதிய தொடர் அது. இன்றும் கடிதம் எழுதும், போன் செய்து பேசும் பெரும்பாலான வாசகர்கள் ‘உ’வைக் குறிப்பிடாமல்...

எழில்மிகு சிங்காரம்

சென்னையை சிங்காரச் சென்னை என்று சொல்லக்கூடாது; எழில்மிகு சென்னை என்றுதான் சொல்லவேண்டும் என்று சமீபத்தில் சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா சொல்லியிருக்கிறார்.  இன்னும் கொஞ்சம் நல்ல தமிழ் என்ற வகையில் இதை வரவேற்பதில் யாருக்கும் பிரச்னை இருக்க முடியாது. ஆனால் இந்த சிங்காரம், எழில் போன்றவர்கள் சென்னையில் எங்கே வசிக்கிறார்கள் என்றும் சொல்லியிருக்கலாம்.

ஆயிரம் அப்பள நிலவுகள்

கீதையிலே பகவான் சொல்கிறான், எது ருசியானதோ, அது உடம்புக்கு ஆகாது. எது எண்ணெயில் பொறிக்கப்பட்டதோ, அது கொழுப்பைக் கூட்டி, இடையளவை ஏடாகூடமாக்கும். நேற்று கடைக்காரனிடம் இருந்த அப்பளம் இன்று உன் வீட்டு வாணலியில் பொறிபடும். நாளை அது உன் வயிற்றில் ஜீரணமாகி, நாளை மறுநாள் டாக்டர் பாக்கெட்டுக்குப் பணமாக மாறிச் செல்லும். நீ உன் பெண்டாட்டியிடம் வாங்கிக் கட்டிக்கொண்டு, வயிற்றைக் கட்ட வழி தெரியாது விழிப்பது உலக...

ஆடி அடங்கும் வாழ்க்கையடா

அம்மன், வேப்பிலை, கூழ், கூம்பு ஸ்பீக்கர், மஞ்சள் டிரெஸ், சாமியாட்டம் என்று வழக்கம்போல் இந்த ஆண்டும் ஆடி மாதம் அமர்க்களமாக வந்துபோய்விட்டது. வீட்டு வாசலில் ஓர் அம்மன் கோயில் இருக்க விதிக்கப்பட்டவன், இது விஷயத்தில் எம்மாதிரியான உளவியல் நெருக்கடிக்கு உள்ளாகக்கூடும் என்று உங்களால் கற்பனை பண்ணிக்கூடப் பார்க்க முடியாது. கடந்த மாதம் முழுதும் தினசரி கனவில் எனக்கு யாரோ நாக்கில் அலகு குத்தி, முகத்தில்...

ரொம்ப நல்லவர்கள்

மனிதர்கள் பொதுவாக இரண்டு வகைப்படுவார்கள். நல்லவர்கள், கெட்டவர்கள். ரொம்பக் கெட்டவர்கள் என்று யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் ரொம்ப நல்லவர்கள் என்னும் துணைப்பிரிவு ஒன்று இருக்கிறது. இந்தப் பிரிவில் இருப்பவர்களிடம் என்ன ஒரு சிக்கல் என்றால், இவர்களது நல்ல குணம் எம்மாதிரியான விதத்தில், எப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் வெளிப்படும் என்று எளிதில் தெரிந்துகொண்டுவிட முடியாது. இரணிய கசிபுவை காலி...

இரண்டாம் வகுப்பு அம்மாக்கள்

அந்தப் பெண்கள் அத்தனை பேருக்கு இடையிலும் ஒரு பெரிய ஒற்றுமை இருக்கிறது. அத்தனை பேரின் மகன் அல்லது மகளும் இரண்டாம் வகுப்பு படிக்கிறார்கள். ஒரு தோராய மனக்கணக்குப் போட்டு அந்த அத்தனை அம்மாக்களுக்கும் சுமார் முப்பது வயது இருக்கும் என்று தீர்மானம் பண்ணியிருந்தேன். பெரும்பிழை. பல சீனியர் அம்மாக்கள் இருக்கிறார்கள். இரண்டாவது அல்லது மூன்றாவது குழந்தை இப்போது இரண்டாம் வகுப்பில் இருக்கலாம் அல்லவா? எனவே...

அன்சைஸ்

நம்ப முடியவில்லைதான். ஆனால் எல்லாம் அப்படித்தானே இருக்கிறது? நமுட்டுச் சிரிப்பு சிரிக்காதீர்கள். இப்படியெல்லாமும் ஒரு மனுஷகுமாரனுக்கு அவஸ்தைகள் உருவாகும் என்று நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டீர்கள். இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்று கருதுவதற்கு ஒரு ஆதாம் அல்லது ஏவாளின் மனநிலை நமக்கு வேண்டுமாயிருக்கும். துரதிருஷ்டம். நாகரிகம் வளர்ந்துவிட்ட இருபத்தியோறாம் நூற்றாண்டில் நடந்துகொண்டிருக்கிறோம்...

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!