வலை எழுத்து

இரண்டாம் பாகம் முற்றும்

நண்பர்களுக்கு வணக்கம். செய்தியாக நான் சொல்லவேண்டியதை வதந்தியாகச் சிலர் முந்திக்கொண்டு வெளிப்படுத்திவிடத் துடிப்பதை ஒருபுறம் ரசித்தபடி இதனை எழுதத் தொடங்குகிறேன். மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. அவை இயல்பானவை, இயற்கையானவை. ஆம். கிழக்கில் நாளை முதல் நான் இல்லை. பரஸ்பர நட்புணர்வு, புரிந்துணர்வு எதற்கும் பங்கமின்றி, இன்று விலகினேன்.

ஓர் அறிவிப்பு

சில தவிர்க்க முடியாத காரணங்களால் / வேலைகளால் இணையத்திலிருந்து சில தினங்கள் விடுமுறை எடுத்துக்கொள்கிறேன். இந்தத் தளம், ட்விட்டர், ஃபேஸ்புக் என நான் இயங்கும் அல்லது என் இருப்பைச் சொல்லும் இடங்கள் அனைத்துக்கும் இது பொருந்தும். அதிகபட்சம் ஒரு மண்டல காலம். குறைந்தபட்சம் இருபது நாள்கள்.
பிறகு சந்திப்போம்.

பங்கரை

சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஒரு காட்சி எனக்கு ரொம்பப் பிடிக்கும். கதாநாயகி ஜெனிலியா, முதல் முறையாக ஜெயம் ரவியின் வீட்டுக்கு வந்திருக்கிறார். ஒருவாரம் தங்கட்டும், பழகட்டும், உங்கள் எல்லோருக்கும் பிடித்திருந்தால் எனக்கு இவளைக் கல்யாணம் பண்ணிவையுங்கள் என்று கதாநாயகனாகப்பட்டவர் தனது தந்தையிடம் ஒரு நூதனமான டீலிங் போட்டிருக்கிறார். அந்த நல்ல குடும்பமானது, ஜெனிலியாவை, புதிதாக மாட்டிய முதல் வருஷ மாணவி...

டெலிகேஷன் ஆஃப் அத்தாரிடி

மனுஷகுமாரனாக பூமியில் உதித்த நாள் தொட்டு, இன்றுவரை ஒரு சமயமும் அலுத்துக்கொள்ளாமல், நூறு சதம் விருப்பத்துடன் நான் செய்யும் ஒரே செயல், என் மகளைக் குளிப்பாட்டுவதுதான். என்னைக் குளிப்பாட்டிக்கொள்வதில்கூட எனக்கு அத்தனை அக்கறை இருந்ததில்லை. பல சமயம் தண்ணீருக்குப் பங்கமில்லாமல் முழு நாளும் சோம்பிக் கிடந்திருக்கிறேன். இதைப்பற்றிய மேலிடத்து விமரிசனங்களை ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. ஆனால் மகள்...

விசாரணைக்கு வா!

இந்தக் கதையைக் கேளுங்கள். இது ஒரு சோகக்கதை. நிச்சயமாகத் தொண்ணூறு மில்லி கண்ணீர் உத்தரவாதம். உங்களுக்கா எனக்கா என்பதுதான் பிரச்னை.

பாராவின் பங்கெடுத்து வை

மிகப் பல வருடங்களுக்குப் பிறகு இன்று திருநீர்மலைக்குக் குடும்பத்துடன் சென்று வந்தேன். குரோம்பேட்டையில் இருந்த காலத்தில் அது பக்கத்து க்ஷேத்திரம். எனக்கு முன்னால் திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வாரெல்லாம் அங்கே போய் பாடியிருக்கிறார்கள். திருமங்கையாழ்வார் திருநீர்மலைக்குப் போனபோது ரங்கநாதப் பெருமாளை ஏறிச் சென்று சேவிக்கக்கூட அவரால் முடியவில்லை. பெரிய மழைக்காலம் போலிருக்கிறது. ஊர் முழுக்க தண்ணீர்...

குளத்துக்குள் குரங்கு பெடல் – பார்ட் டூ

செல்டெக்ஸ் உடனான எனது துவந்த யுத்தம் ஒருவாறு முடிவுக்கு வந்திருக்கிறது இப்போது. காசு கொடுத்துத் திரைக்கதை எழுதும் மென்பொருள் வாங்க வழியில்லாத / விரும்பாத எழுத்தாளர்கள் இனி சிக்கலேதுமின்றி செல்டெக்ஸைப் பயன்படுத்த இயலும்.
செல்டெக்ஸ் குறித்த என்னுடைய முந்தைய கட்டுரையை வாசித்துவிட்டு இதைப் படித்தால் புரிவதில் பிரச்னை இருக்காது என்று நினைக்கிறேன்.

சொல்லால் அடித்த சுந்தரி

01. என்றார் அவர் 02. என்பது ஆகும் 03. களுக்கென்று சிரித்தாள் 04. கண்கள் பனித்தன 05. என்பதாய் இருக்கிறது 06. குழந்தைக்கும் தெரியும் 07. பளீரிட்டன 08. மட்டும் நிஜம் 09. என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் 10. திருதிருவென முழித்தார் 11. ஜில்லிட வைத்தது 12. மீட் பண்ணுவோம் 13. என்ன செய்வதென்றே புரியவில்லை 14. வார்த்தைகளே இல்லை 15. அவரின் அப்பா 16. என்ன கொடுமை இது? 17. ச்சீய் 18. அம்மாவின் நியாபகம் 19...

எழுபத்திரண்டு சீன், முற்றும்.

கடந்த நாலு தினங்களாக நான் ஊரில் இல்லை. திடீரென்று கிளம்ப நேர்ந்ததால் யாரிடமும் சொல்லிக்கொள்ள அவகாசம் இல்லை. போன இடத்தில் மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்ய நேர்ந்ததால் யாருடனும் பேசவும் இல்லை. இது ஒரு பெரிய விஷயமா என்று வியக்குமளவு, வந்து மெயில் பார்த்தபோது ஏராளமான விசாரிப்புகள். ஊரில் இல்லையா, உடம்பு சரியில்லையா, வேறு பிரச்னையா – இன்னபிற. அனந்த பத்மநாபனிடம் பணம்தான் இருக்கிறது. எனக்கு எத்தனை நல்ல...

எம்பிபிஎஸ் கலைஞர்கள்

எனக்குச் சில இங்கிலீஷ் மருந்து டாக்டர்களைத் தெரியும். அவர்கள் நாடி பிடித்துப் பார்க்க மாட்டார்கள். ஊசி குத்த மாட்டார்கள். நாக்கை நீட்டச் சொல்லி டார்ச் அடிக்கமாட்டார்கள். ஆப்பரேஷன், அனஸ்தீஷியா என்று அச்சுறுத்துகிறவர்களும் இல்லை. பிரதி ஞாயிறுகூட விடுமுறை அறிவிக்காமல், வீடு பெண்டாட்டி வகையறாக்களை சாமிக்கு நேர்ந்துவிட்டதுபோல் கவனிக்காமல் விட்டுவிட்டு, எப்போதும் கிளினிக்கில் நோயாளிகளுடன் துவந்த...

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!