Categoryதிரைப்படம்

யாருக்கும் இழப்பில்லை

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை மிகத் தீவிரமாகத் திரைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அது தீவிரம்கூட அல்ல. அதைத் தாண்டியதொரு வெறி கொண்ட வேட்கை. இந்தியப் படங்கள், உலகப் படங்கள், ஹாலிவுட் படங்கள், கொரியன் படங்கள், சீனாவின் பிரசித்தி பெற்ற கராத்தே, குங்ஃபூ படங்கள், இந்த எந்த இனத்துடனும் சேராத மசாலா டப்பிங் படங்கள் இப்படி. எந்தத் திரைப்பட விழாவையும் தவறவிட்டதில்லை. அதேபோலத் தமிழ்ப் படங்கள்...

ஒரு நெடும்பயணம்

இன்று அதிகாலை இரண்டு மணிக்கு வாணி ராணியின் இறுதிக் காட்சிகளை எழுதி முடித்தேன். விரைவில் தொடர் நிறைவு பெறுகிறது. சீசன் மாறுதல்கள் இல்லாமல் ஒரே கதையாக ஆறு ஆண்டுகள் (23.1.2013 முதல்), 1750 எபிசோடுகள் தொடர்ச்சியாக வெளியான ஒரே தொலைக்காட்சித் தொடர் இதுதான். இதில் ஒரு எபிசோட்கூட இன்னொருவர் இடையில் புகாமல் முழுக்க நானேதான் எழுதியிருக்கிறேன். [வாணிராணியின் திரைக்கதை ஆசிரியர் குமரேசன். அவரும் முதல்...

மனெ தேவுரு

இன்னொரு மொழி சீரியலுக்கு நான் வசனம் எழுதுவேன் என்று எண்ணிப் பார்த்ததில்லை. விரைவில் உதயா டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் ‘மனெ தேவுரு’ [குல தெய்வம்] தொடருக்கு என்னை எழுத எம்பெருமான் பணித்தான். நேற்று பெங்களூரில் அதற்கான பூஜை, முதல் நாள் படப்பிடிப்பு. கலந்துகொண்டு திரும்பினேன்.

மூணு

ஓடியே விட்டது ஒரு வருடம். சென்ற ஆண்டு ஜூலையில்தான் இனி முழுநேரமும் எழுத்து என்று முடிவு செய்தேன். குடும்பத்தினரின் அச்சம், நண்பர்களின் கவலை, நண்பர்கள்போல் இருந்தவர்களின் நமுட்டுச் சிரிப்பு அனைத்தையும் பதில் கருத்தின்றி வாங்கி வைத்துக்கொண்டு என் முடிவு இதுதான் என்று என் மனைவியிடம் சொன்னேன். சரி என்பதற்கு மேல் அவள் வேறேதும் சொல்லவில்லை. நான் சினிமாவில் கவனம் செலுத்துவேன் என்று அவள் நினைத்தாள்...

The Real Salute

The Real Salute என்னும் குறும்படத்தின் லிங்க்கை அதன் இயக்குநர் ஷக்தி எனக்கு அனுப்பியிருந்தார். ஒரு குறும்படத்தின் நோக்கமும் வெளிப்பாடும் எப்படி அமையவேண்டும் என்பதை மிகச் சரியாகக் காட்டுகிற படமாக இது இருக்கிறது. வெறும் மூன்றரை நிமிடப் படம்தான். ஆனால் ஓடி முடித்ததும் உருவாகிற உணர்வெழுச்சி வெகுநேரம் மனத்தைவிட்டு நீங்காதிருக்கிறது. தேச பக்தி என்பதும் கொடியின்மீதான மரியாதை என்பதும் காலிகளாலும் போலி...

நாளை ரிலீஸ்

நான் வசனம் எழுதியிருக்கும் தம்பி வெட்டோத்தி சுந்தரம் திரைப்படம் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாகிறது.
தொடர்புடைய முந்தைய குறிப்புகள்: ஒன்று | இரண்டு
படம் பார்க்கும் நண்பர்கள் உங்கள் கருத்துகளைத் தெரியப்படுத்தினால் மகிழ்வேன்.

கொஞ்சம் சோறு, கொஞ்சம் வரலாறு

சாப்பிடுகிற விஷயத்திலும், அதைப் பற்றி எழுதுகிற விஷயத்திலும் எனக்கு எத்தனைக் கொலைவெறி ஆர்வம் உண்டு என்பது உங்களுக்குத் தெரியும். பத்திரிகைகளில் நான் இதுநாள் வரை எழுதிய அத்தனை தொடர்களிலும் பார்க்க, எனக்கு மிகவும் பிடித்தமானது உணவின் வரலாறுதான். ரசித்து ரசித்துத் தகவல் திரட்டி, ருசித்து ருசித்து எழுதிய தொடர் அது. இன்றும் கடிதம் எழுதும், போன் செய்து பேசும் பெரும்பாலான வாசகர்கள் ‘உ’வைக் குறிப்பிடாமல்...

குளத்துக்குள் குரங்கு பெடல் – பார்ட் டூ

செல்டெக்ஸ் உடனான எனது துவந்த யுத்தம் ஒருவாறு முடிவுக்கு வந்திருக்கிறது இப்போது. காசு கொடுத்துத் திரைக்கதை எழுதும் மென்பொருள் வாங்க வழியில்லாத / விரும்பாத எழுத்தாளர்கள் இனி சிக்கலேதுமின்றி செல்டெக்ஸைப் பயன்படுத்த இயலும்.
செல்டெக்ஸ் குறித்த என்னுடைய முந்தைய கட்டுரையை வாசித்துவிட்டு இதைப் படித்தால் புரிவதில் பிரச்னை இருக்காது என்று நினைக்கிறேன்.

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி