வலை எழுத்து

அறிவுஜீவி பயங்கரவாதம்

இன்றைய தினத்தை என் சொந்த விருப்பத்துக்குப் புத்தகங்கள் வாங்குவதற்கென்று ஒதுக்கிவிடலாம் என்று முடிவு செய்து முதல் வரிசையின் முதல் கடையிலிருந்து தொடங்கினேன். கண்ணில் பட்ட வரை அங்கே கூட்டம் குவியும் இடமாக தினத்தந்தி ஸ்டால் இருக்கிறது. ஒரே ஒரு புத்தகம். வரலாற்றுச் சுவடுகள். அடி பின்னியெடுக்கிறது. பெட்டி பெட்டியாக வெளியே எடுக்கிறார்கள், எடுத்த சூட்டில் காலியாகிவிடுகிறது. திரும்பவும் இன்னொரு பெட்டி...

நம்புங்கள்! நாவல் விற்கிறது!

மன்னார் அண்ட் கம்பெனி மாதிரி, செட்டியார் மெஸ் என்று என்னமோ பேர் போட்டு இன்று ஒருவழியாக கேண்டீன் தொடங்கிவிட்டார்கள். இட்லி, தோசை, பரோட்டா, போண்டா, பஜ்ஜி வகையறாக்களும் மினரல் வாட்டர் போத்தல்களும். ஃபுட் கோர்ட் மாதிரி செய்திருக்கலாம் என்று அந்த வாசல் மிதித்த அத்தனை பேரும் சொன்னதைக் கேட்க முடிந்தது. அப்துல் கலாம் கனவு கண்ட 2012ல் அதெல்லாம் நடைமுறைக்கு வந்துவிடும். இன்று அநேகமாக அனைத்துக் கடைகளிலும்...

சென்னை புத்தகக் காட்சி 2011 – முதல் நாள்

தமிழகத்தின் எதிர்காலமே, எழுச்சித் தளபதியே, ஆருயிரே, மன்னவரே என்று ஈகா தியேட்டரில் ஆரம்பித்து சாலையெங்கும் தட்டிகளைப் பார்த்தபோது முதலில் குழப்பமாக இருந்தது. பிறகு சந்தேகமாக. இன்விடேஷனில் ஸ்டாலின் பெயர் இல்லை. அப்புறம் எதற்கு இத்தனை வரவேற்புத் தட்டிகள் என்று புரியவில்லை. ஏதாவது திடீர் ஏற்பாடாக இருக்குமோ என்று நினைத்தேன். ஆனால் புத்தகக் காட்சி தொடங்கும் பள்ளி வளாகத்தைத் தாண்டியும் தட்டிகள்...

படம் காட்டுதல் 1

புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியப் பள்ளி மைதானத்தில் நாளை தொடங்கவிருக்கும் புத்தகக் கண்காட்சியில் கிழக்கு பதிப்பகத்தின் அரங்கம் இது. F 13-14-15 எண். அரங்கில் இருந்து மொபைலில் படமெடுத்து, மொபைல் வழியாகவே பிரசன்னா அனுப்பியது இது. இன்னும் சில காட்சிகள் பின்னால் வரும்.

அனைவரும் வருக

சென்னை புத்தகக் காட்சி 2011 நாளை செவ்வாய்க்கிழமை  [04.01.2011] மாலை 5 மணிக்குத் தொடங்குகிறது. எப்போதும் நடக்கும் அதே சேத்துப்பட்டு புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேநிலைப் பள்ளி மைதானம். பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே. இந்திய சட்ட ஆணையத்தின் முன்னாள் தலைவர் நீதிபதி அரு. லட்சுமணன் கண்காட்சியைத் தொடங்கிவைக்கிறார். கலைஞர் கருணநிதி பொற்கிழி விருதுகளை வழங்கிச் சிறப்புரை ஆற்றுபவர், மத்திய தகவல்...

இனிய புத்தாண்டும் சில இம்சை அரசர்களும்

ஜனவரி 4ம்தேதி [நாளை]  இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது. புத்தாண்டைப் புத்தகங்களுடன் ஆரம்பிக்க விரும்புகிறவர்கள், சேத்துப்பட்டு செயிண்ட் ஜான்ஸ் பள்ளிக்கூட மைதானத்துக்கு வந்துவிடுங்கள். தீபாவளி, பொங்கல், வருடப்பிறப்பெல்லாம் ஒரு பண்டிகையா? இதுதான். இதுமட்டும்தான். ஒரு காலத்தில், தமிழர்கள் புத்தகம் வாங்குவதே இல்லை; ஆயிரம் காப்பி விற்றால் அமோகம் என்று சில பழம்பெரிசுகள் எப்பப்பார்...

புத்தாண்டு வாழ்த்துகள்

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெலூடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குட நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.
[நன்றி: ஆண்டாள்]

சர்ச்சைக்குள் ஒரு சவாரி

2010ம் ஆண்டு இந்தியாவில் அதிகம் உச்சரிக்கப்பட்ட சொற்கள் மூன்று. ஸ்பெக்ட்ரம், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆ. இராசா. ஒரு லட்சத்து எழுபத்தி ஐயாயிரம் கோடி என்கிற எண் இதன்மூலம் இந்திய சரித்திரத்தில் இடம் பிடித்துவிட்டது. நீரா ராடியா என்று தொடங்கி ராசாத்தி அம்மாளின் ஆடிட்டர் என்பது வரை இது தொடர்பான துணைக் கதாபாத்திரங்கள் வரிசைப்படுத்தப்பட்டு, குற்றச்சாட்டுகள், வழக்குகள், ஆவேசப் பேச்சுகள், ஆர்ப்பாட்டங்கள் என்று...

சாமியார்களின் ஏஜெண்டுகளைச் சமாளிப்பது எப்படி?

நீங்கள் சில புத்தகங்களை வாங்கவேண்டும் என்று குறித்துவைத்துக்கொண்டு புத்தகக் கண்காட்சிக்குச் செல்கிறீர்கள். எந்தப் புத்தகம், எந்த ஸ்டாலில் கிடைக்கும் என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியும். ஒரு பிரச்னையும் இல்லை. போனோமா, வாங்கினோமா, வந்தோமா என்று வேலையை முடிப்பது எளிது; இரண்டு மணிநேரத்தில் திரும்பிவிடுவேன் என்று வீட்டில் சொல்லிவிட்டுப் புறப்பட்டிருக்கிறீர்கள். ஆனாலும் அரை நாள், ஒருநாள் ஆகிவிடுகிறது...

லிங்கு சாமி!

ஒருவழியாக, இப்போது வரப்போகிற புதிய புத்தகங்களுக்கு என்னெச்செம் தளத்தில் லிங்க் போட்டுவிட்டாற்போலிருக்கிறது. நல்லவர்கள் நீடுவாழ்க. என்னுடைய இந்தாண்டுப் புத்தகங்களை என்.எச்.எம். தளத்தில் பார்வையிடவும் வாங்கவும் கீழ்க்கண்ட சுட்டிகள் உதவும். 1. ஆர்.எஸ்.எஸ் – மதம் மதம் மற்றும் மதம் 2. காஷ்மீர்: அரசியல்-ஆயுத வரலாறு 3. அலகிலா விளையாட்டு 4. கொசு 5. உணவின் வரலாறு 6. புகழோடு வாழுங்கள் என்னுடைய பிற...

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!