வலை எழுத்து

பாவி, பழுவேட்டரையா! குறுக்கே வராதே!

ஊரில் யாருக்காவது கல்யாணமானால், காலக்ரமத்தில் ஒரு குழந்தை எதிர்பார்க்கலாம், நியாயம். தாலி கட்டி முடித்துவிட்டு நேரே போய் கம்ப்யூட்டரில் உட்கார்ந்து க்ளியோபாட்ராவின் வாழ்க்கை வரலாறை எழுதுகிற ஜென்மத்தை அறிவீர்களா? சென்ற வருடம் கிளுகிளு ராஜாக்களின் ஜிலுஜிலு வாழ்க்கையை எழுதி புத்தகக் கண்காட்சியைக் கலக்கிய முகில் இந்த வருடம் தருவது கிளியோபாட்ரா. எகிப்து ராணி உனக்கு எதுக்கு தாவாணி என்கிற அற்புதமான...

பிழியப் பிழிய ஒரு சோகக்கதை

முன்பெல்லாம் நான் திருமணங்களுக்குச் சென்றால் அங்கே சாப்பிட மாட்டேன். உறவினர் வீட்டு விசேஷங்களுக்குச் சென்றாலும் உணவு நிச்சயமாக ஹோட்டலில்தான். வீட்டில் இது பற்றிய விமரிசனங்கலும் திட்டுகளும் எப்போதும் இருக்கும். ஆனால் உண்மைக் காரணத்தை நான் ஒருபோதும் சொன்னதில்லை. இப்போது சொல்கிறேன். என்னால் கீழே உட்கார்ந்து சாப்பிட முடியாது. தொப்பை இடிக்கும், மூச்சு வாங்கும். திருமண மண்டபங்களில் டேபிள் சேர் போடத்...

வருட பலன்

கிட்டத்தட்ட நான்காண்டுகளுக்கு மேலாக எழுதிக்கொண்டிருந்த காஷ்மீர் புத்தகத்தை இந்தாண்டு ஒருவழியாக முடித்தது, தனிப்பட்ட முறையில் பெரிய ஆசுவாசமாக இருந்தது. அவ்வப்போது எழுதிவைத்த குறிப்புகளும் துண்டு துக்கடா அத்தியாயங்களுமே சுமார் எண்ணூறு பக்கங்களுக்குமேல் வந்துவிட்டன. இது மிகுந்த கலவர உணர்ச்சியை அளித்துக்கொண்டிருந்தது. நிச்சயமாக இந்தப் புத்தகம் நாநூறு பக்கங்களைத் தாண்டக்கூடாது என்பதுதான் என் எண்ணம்...

மகாத்மா காந்தி கொலை வழக்கு

மகாத்மா காந்தி கொலையைப் பற்றி கோட்சேவின் பார்வையில் சொல்லப்பட்ட ‘கோட்சே’ என்ற புத்தகத்தைப் பல வருடங்களுக்கு முன் படித்தேன். [ஹிம்சாகர் என்பவர் எழுதியது.] அது கோட்சேவைப் பற்றிய புத்தகம்தான். ஆனால் காந்தியைக் கொல்லாத பட்சத்தில் கோட்சேவைப் பொருட்படுத்தவேண்டிய அவசியம் ஏது? அவன் ஒரு சாதாரண ஸ்வயம்சேவக். ஹிந்து வெறியன். அடிப்படைவாதி. அவனுடைய படிப்பு, அறிவு, அனுபவம், தேசபக்தி அனைத்தும் அவனைக்...

அநீ

நிகழ்தமிழின் முக்கியமான சிந்தனையாளர்களுள் ஒருவர், அரவிந்தன் நீலகண்டன். நமது அதிர்ஷ்டம், அவர் இணையத்தில் எழுதுவது. துரதிருஷ்டம், அவரை ஒரு ஹிந்துத்துவவாதியாக மட்டுமே பார்த்து, என்ன எழுதினாலும் திட்டித் தீர்க்க ஒரு பெருங்குழு இருப்பது. பல சமயம் எனக்கு, இவர்களெல்லாம் படித்துவிட்டுத்தான் திட்டுகிறார்களா என்று சந்தேகமே வரும். ஏனெனில், போகிற போக்கில் பொத்தாம்பொதுவாக அரவிந்தன் எதுவும் எழுதுவதில்லை. தான்...

முதல் இரவு, முதல் குழந்தை மற்றும்…

விருதகிரியைவிடக் கொடுமையான ஒரு விஷயம் உலகில் உண்டு. புத்தம்புதிதாக ஒருத்தரைக் கண்டுபிடித்து, ஒரு சப்ஜெக்ட் தீர்மானித்து, அவரை ஓர் உருப்படியான புத்தகம் எழுத வைப்பது. ஒவ்வொரு வருடமும் குறைந்தது பதினைந்து முதல் இருபது பேரிடமாவது நான் இந்த விளையாட்டை விளையாடுகிறேன். என்னைத் தோற்கடிப்பதில் அளப்பரிய ஆர்வம் கொண்ட நல்லன்பர்கள், சொல்லி சொல்லி அழவைத்து பதில் விளையாட்டு விளையாடுவார்கள். நானும்...

மயிர் நீத்த காதை

இப்போதெல்லாம் என்னை ஓர் இடைவெளிக்குப் பிறகு பார்க்கிற அத்தனை பேரும் கேட்கிற முதல் கேள்வி பெரும்பாலும் என் சிகையலங்காரம் பற்றியதாக இருக்கிறது. என்ன இது என்னும் வியப்புடன் தொடங்கி, டை போடக்கூடாதா என்னும் அக்கறையுடன் விரிந்து, ரொம்ப வயசாயிட்ட மாதிரி தெரியுது என்று தீர்ப்பு சொல்லி முடித்துவிட்டுத்தான் அடுத்த விஷயத்துக்கே வருகிறார்கள். முதலில் ஒவ்வொருவருக்கும் பொறுமையாக விளக்கிக்கொண்டிருந்தேன். ஒரு...

கொடியில் ஏந்திய குழந்தை

இந்த வருடம் என்னை செமத்தியாக பெண்டு நிமிர்த்திய புத்தகம், ஆர். முத்துக்குமாரின் திராவிட இயக்க வரலாறு. பொதுவாக எத்தனை பெரிய புத்தகமாக இருந்தாலும் எடிட்டிங்கில் என்னிடம் இரண்டு மூன்று நாள்களுக்குமேல் நிற்காது. இந்தப் புத்தகம் கிட்டத்தட்ட ஒரு மாத காலத்துக்கு என்னை இழுத்துக்கொண்டுவிட, வழக்கமான காரியங்கள் பலவற்றை இதனால் நிறுத்திவைக்க வேண்டியதானது. [இதற்கு முன்னால் அதிகநாள் எடிட் செய்த புத்தகம் அநீயின்...

கொண்டாட ஒரு தருணம்

நல்லி செட்டியாருக்கு என்று அறிவிக்கப்பட்டாலும் தமிழர்கள் ஜீரணித்துவிடுவார்கள் என்றாலும், நாஞ்சில் நாடனுக்கு இவ்வாண்டு சாகித்ய அகடமி விருது என்னும் அறிவிப்பு உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியையும் திருப்தியையும் தருகிறது. நாஞ்சிலுக்கு அன்பான வாழ்த்துகள். தலைகீழ் விகிதங்கள் தொடங்கி நாஞ்சில் நாடனின் ஒரு படைப்பையும் நான் விட்டதில்லை. நமக்கே நமக்கென்று அந்தரங்கமாகச் சில விஷயங்கள் எப்போதும் இருக்குமல்லவா...

இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம்

ஜனவரி 4, 2011 அன்று தொடங்கவுள்ள சென்னை புத்தகக் கண்காட்சியின் அரங்க வடிவமைப்பு வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. F 13,14,15 ஆகியவை கண்காட்சியில் கிழக்கு பதிப்பகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள கடை எண்கள். கீழே வரைபடம் உள்ளது. வேறு சில முக்கியமான பதிப்பு நிறுவனங்களின் கடைகள் உள்ள இடங்களும் அதில் சுட்டப்பட்டிருக்கின்றன. வாசகர்களை சென்னை புத்தகக் கண்காட்சிக்குக் கிழக்கு சார்பில் அன்புடன் வரவேற்கிறேன்.

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!