Notice: Undefined index: 00 in /home/writerpara/webapps/writerpara/wp-includes/class-wp-locale.php on line 321

Notice: Undefined index: 00 in /home/writerpara/webapps/writerpara/wp-includes/class-wp-locale.php on line 321

Notice: Undefined index: 00 in /home/writerpara/webapps/writerpara/wp-includes/class-wp-locale.php on line 321
0 | Page 2 of 4 | Pa Raghavan
Notice: Undefined index: 00 in /home/writerpara/webapps/writerpara/wp-includes/class-wp-locale.php on line 321

Notice: Undefined index: 00 in /home/writerpara/webapps/writerpara/wp-includes/class-wp-locale.php on line 321

Archive2022

பதினான்கு சொற்கள் (சிறுகதை)

அந்தப் பெண்ணை முதல் முதலில் பார்த்தபோது பள்ளி இறுதி வகுப்பில் படிக்கிறவளாக இருப்பாள் என்று நினைத்தேன். ஆனால் இருபத்தைந்து வயது என்று சொன்னாள். அலுவலகத்தில் சில சிறிய, செப்பனிடும் பணிகளைச் செய்ய வேண்டியிருந்தது. எளிய அலங்காரங்கள் கொஞ்சம். நண்பர் ஒருவர் அந்தப் பெண்ணின் எண்ணைக் கொடுத்துப் பேசச் சொன்னார். பகுதி நேரமாகத்தான் செய்வாள்; ஆனால், வேலை ஒழுங்காக இருக்கும் என்றார். அவள் நேரில் வந்தபோது...

சில காதல்களின் கதை

அந்தப் பெண்ணுக்கு என்று ஆரம்பிப்பது அபத்தம். அந்தச் சிறுமிக்கு மிஞ்சிப் போனால் பதிமூன்று வயது. எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறாள். வீடு, வீட்டை விட்டால் பள்ளிக் கூடம், மீண்டும் மாலை வீடு. ஓய்வுக்கு இணையம். ஒப்புக்குத் தோழிகள். எல்லா சராசரி எட்டாம் வகுப்பு மாணவிகளையும் போலத்தான் அவளும் இருந்தாள். அல்லது அப்படி எல்லோரும் நினைத்துக்கொண்டிருந்தார்கள். திடீரென்று ஒரு நாள் பள்ளிக்கூடத்தில்...

அருள் கூடிப் பொங்கிப் பொழிதல்

அவரை நினைக்கும்தோறும் அப்பா என்றுதான் மனத்துக்குள் அழைப்பேன். ஏன் என்று தெரியாது. தோற்றத்தில் என் அப்பா அவரைப் போன்றவரில்லை. வேறு எந்த ஒற்றுமையும் கிடையாது. என் அப்பாவுக்கு சேஷாத்ரி சுவாமிகளைப் பற்றித் தெரிந்திருந்ததா என்றுகூட எனக்குத் தெரியாது. ஆனாலும் அவர் எனக்கு அப்பா உறவுதான். இத்தனை வருடங்களுக்குப் பிறகு இதனை எழுத அமரும்போது காரணம் யோசித்துப் பார்க்கிறேன். என் அப்பாவைப் போல என் சிறுமைகளைச்...

ஒரு சிறிய சமூகத்தின் புனைபெயர்

தமிழ்ச் சூழலில் ஒரு சராசரி மனிதன் அறுபதாண்டுகள் நலமாக வாழ்வதற்கும் ஓர் எழுத்தாளன் வாழ்வதற்கும் வித்தியாசங்கள் உண்டு. அவன் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தாலொழிய அந்தக் காலப் பரப்பைப் பெரிய சிக்கல்களின்றிக் கடப்பது சிரமம். ஜெயமோகன், சிக்கலின்றிக் கடந்தார் என்று சொல்ல முடியாது. அவருக்குப் பத்தாண்டுகள் சிறியவன் என்ற அளவிலேயே, அவர் மீது திணிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள், அக்கப்போர்கள், திரிபுகள், காழ்ப்புகள்...

உன் மீது ஒரு புகார்

தன்னுடன் படித்த நண்பர்களில் பலர் புத்தக சகவாசமே இல்லாதிருப்பது குறித்து நண்பர் மகுடேசுவரன் எழுதிய ஒரு குறிப்பை ஃபேஸ்புக்கில் படித்தேன். நியாயமாக அவர் தம் நண்பர்களுக்க நன்றி சொல்ல வேண்டும். நேற்று ஒரு சம்பவம் நடந்தது. இரவு ஒரு தொலைபேசி அழைப்பு. அழைத்தது ஒரு பெண். எடுத்த எடுப்பில், ‘நீங்க பா. ராகவன்ங்களா? நான் மதுரவாயில் போலிஸ் ஸ்டேசன்லேருந்து பேசறேங்க. உங்க மேல ஒரு கம்ப்ளைண்ட் வந்திருக்கு. கொஞ்சம்...

சிம்பிள் டெக்ஸ்ட் – செயலிக் குறிப்பு

இங்கே என்னைத் தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு, ஒரு நல்ல டெக்ஸ்ட் எடிட்டருக்காக பன்னெடுங்காலமாக நான் நடத்தி வரும் துவந்த யுத்தம் பற்றித் தெரிந்திருக்கும். சும்மா நான்கு ஃபேஸ்புக் போஸ்ட் எழுதுகிறவர்களுக்கோ, ஆடிக்கொரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் சிறுகதை எழுதுகிறவர்களுக்கோ இதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. என்னைப் போல தினமும் ஆயிரம் சொற்களை நியமமாக வைத்திருப்பவர்களின் பிரத்தியேக இம்சை இது. மைக்ரோசாஃப்ட்...

ஞானம் அடைய என்ன வழி?

ஆன்மிக விஷயமாக யாராவது என்னவாவது பேசத் தொடங்கினால் நான்கு வரிகளுக்குள் ஞானமடைவது என்கிற விவகாரம் வந்துவிடும். ஆனால் சிறிது யோசித்துப் பார்த்தீர்கள் என்றால், அப்படி என்றால் என்ன என்று யாரும் இதுவரை உடைத்துச் சொன்னதில்லை. சமையல் குறிப்பு எழுதுகிறவர்கள் உப்பு தேவையான அளவு என்று எழுதுவது போலத்தான் இது. ஒரு ஓட்டாஞ்சில்லு தடுக்கி ஞானமடைந்த ஒருவரைக் குறித்து ஒரு ஜென் கதை இருக்கிறது. தடுக்கி விழுந்தால்...

பிரபாகரன் – ஒலிப் புத்தகம்

பிரபாகரன் வாழ்வும் மரணமும் ஒலிப் புத்தகம் வெளியாகியிருக்கிறது. ஸ்டோரி டெல் இதனை வெளியிட்டிருக்கிறது. ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. இந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பு வந்தபோது சென்னை புத்தகக் காட்சியில் போஸ்டர் கூடாது; விளம்பரம் கூடாது என்று தொடங்கி, அரங்கில் வைக்கவே கூடாது என்றெல்லாம் கடைக்கு வந்து கட்டளை போட்டார்கள். அனைத்தையும் மீறி எவ்வளவோ பதிப்புகள் வரத்தான் செய்தன. கடந்த வாரம்கூட ஜீரோ...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி