ஆம், நம்புங்கள். அந்தப் புறா பேசியது. இதை என் மனைவியிடம் சொன்னபோது பைத்தியம் என்று சொல்லிவிட்டுப் போனாள். குடியிருப்பு வளாகத்தில் உள்ள எனக்குத் தெரிந்த சிலரிடம் சொன்னபோது அவர்கள் எதுவும் சொல்லவில்லை. ஆனால் என் மனைவி சொன்னதைத்தான் அவர்கள் நினைத்திருப்பார்கள். நான் என்ன செய்ய. அது பேசியதை நான் கேட்டேன். பிரமையல்ல. கனவல்ல. அது நன்றாக, தெளிவான குரலில்தான் பேசியது. ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள். மற்ற...
அழியாத சில
சிக்கல் எதுவுமின்றி வழக்கு நல்லபடியாக முடிந்தது. பரஸ்பரப் புரிதலின் பேரில் விவாகரத்து வழங்குவதாக நீதிபதி அறிவித்தார். ஒன்றரை வருடங்களுக்கு மேலாகப் பிரிந்தே இருந்ததால் இருவராலுமே பெரிதாக உணர்ச்சி வயப்பட முடியவில்லை. அதே சமயம் மகிழ்ச்சியோ நிம்மதியோ நிறைந்துவிட்டதாகவும் தோன்றவில்லை. அவன் மதியம் அலுவலகத்துக்குச் சென்று விடலாம் என்று நினைத்தான். அவள் தனது தோழியின் வீட்டுக்கு வருவதாகச் சொல்லியிருந்தாள்...
கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 27)
சூனியனை இரண்டு அத்தியாயங்களாகக் காணாமல், இந்த அத்தியாயத்தில் தான் மீண்டும் பார்க்கிறோம். தனக்கு, கோவிந்தசாமி மீதும் சாகரிகாவின் மீதும் எந்தப் பகையும் இல்லையென்றும், அதுல்யா, நரகேசரி, செம்மொழிப்ரியா மூவரும் அவன் லட்சியத்தை நோக்கிய பயண கருவிகள் எனவும் நம்மிடம் கூறுகிறான். ஆனால் செம்மொழிப்ரியா, மூன்றாவதாக எதற்கு அதுல்யா என நம் சூரியனோடு முறையிடும்போது தான், சூனியன் அவனது பாத்திரங்களைக்...
கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 26)
அணில்களால் மின் தடை, இதைச் சாத்தியமாக்க ஒரே வழி, அணில்கள் நீல நகரத்தில் இருப்பதை போலப் பறந்தால் மட்டுமே முடியும். என்ன ஒரு புனைவு! அதுல்யா, கோவிந்தசாமியை தன் கணவன் என்று வெண்பலகையில் எழுதியதற்காக இப்படியா தெருவில் இறங்கி கத்திக்கொண்டே ஓடுவது?, இந்தக் கோவிந்தசாமியை நினைத்தால் ஒரு பக்கம் கேலியாக இருந்தாலும், ஒரு பக்கம் பரிதாபமாக இருக்கிறது. நியாயம் கோரி நகர நிர்வாகம் நோக்கிச் செல்கிறான்...
எழுதும் மனநிலை – சில குறிப்புகள்
தினமும் எழுதுவது நல்லதல்ல. எழுத்து சடங்கல்ல. நிறைய எழுதுவது நல்லதல்ல. நீர்த்துவிடும். ஆரம்பித்தால் முடித்தே தீரவேண்டும் என்பது அவசியமல்ல. சுயமாக ஏற்படுத்திக்கொண்டாலும் ஒரு நிர்ப்பந்தத்தின் பேரில் எழுதினால் நன்றாக வராது. ஆர்வம் எந்தத் திசையில் போகிறதோ, அதனைப் பின் தொடர்வதே நல்லது. நல்ல எழுத்து கட்டுப்பாடுகளுக்கு உட்படாதது. இவையும், இவற்றை நிகர்த்த இன்னும் பல அறிவுரைகளும் எழுதுவது தொடர்பாகப் பல...
பேய்க்கதை
அந்த மரத்தில் நிச்சயமாகப் பேய் இருக்கிறது; தவறியும் கிட்டே போய்விடாதே என்று பாட்டி சொல்லியிருந்தாள். கிட்டே போனால் மட்டும் கடிக்குமா என்று கேட்டதற்கு, ‘தின்றுவிடும்’ என்று பதில் சொன்னாள். பாபுவுக்குச் சிறிது பயமாகத்தான் இருந்தது. ஆனால் ஒரு பேயைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் கட்டுக்கடங்காமல் இருந்தது. பாட்டி கடைக்குக் கிளம்பிப் போன சமயம் அவன் தயங்கித் தயங்கி அந்தப் புளிய மரத்தை...
நாணயவியல்
சிக்னலில் நின்றுகொண்டிருந்தேன். எனக்குப் பத்தடி முன்னால் அந்தப் பெண் பிச்சை கேட்டுக்கொண்டிருந்தாள். அவளிடம் ஒரு குழந்தை இருந்தது. ஆணா பெண்ணா என்று தெரியவில்லை. தனது முந்தானைக்குள் அதனைச் சுருட்டி இடுப்பில் அமர வைத்திருந்தாள். நல்ல வெயில் வேளை. செருப்புக் கூட இல்லாமல் எப்படி அவளால் தார்ச் சாலையில் நடக்க முடிகிறது என்று நினைத்தேன். சட்டென்று பாக்கெட்டில் எவ்வளவு இருக்கிறது என்று பார்த்தேன். இரண்டு...
எடிட்டர்
சில நாள்களாக அந்த எழுத்தாளருக்கு ஒரு சந்தேகம் இருந்தது. தனது கணிப்பொறியைத் தன்னைத் தவிரவும் வேறு யாரோ இயக்கிக்கொண்டிருக்கிறார்கள். அது ஒரு பேயாக இருக்கலாம். அல்லது எங்கிருந்தோ ரிமோட்டில் வேலை செய்யத் தெரிந்த ஒரு தொழில்நுட்ப வல்லுநர். ஆனால் அப்படி ரிமோட் ஆக்சஸ் எதையும் அவர் யாருக்கும் தந்திருக்கவில்லை ஆதலால் பேயாகத்தான் இருக்கும் என்று வலுவாக சந்தேகப்பட்டார். இரண்டு தினங்களுக்கு முன்னர் அவர் ஒரு...
ஒன்றுமில்லாமை
உறுத்தலை இன்னும் நீட்டித்துக்கொள்ள வேண்டாம் என்று நினைத்தான். எதையும் மாற்றாமல் மறைக்காமல் சொல்லிவிட முடிவு செய்து மனைவியை அழைத்தான். ‘உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும். நீ ஒருவேளை அதிர்ச்சியடையலாம்.’ ‘என்ன?’ ‘இதற்காக நான் வருத்தப்படப் போவதில்லை. மன்னிப்பும் கேட்கமாட்டேன். ஆனாலும் உன் வருத்தத்தை நான் புரிந்துகொள்வேன்.’ ‘சரி, சொல்.’ ‘நான் மதம்...
குறுஞ்செய்தி
வேறெதுவும் இல்லை. வெறும் குட் மார்னிங். தினமும் வருகிறது இக்குறுஞ்செய்தி. ஒரு நாள் தவறாமல் பல மாதங்களாக வருகிறது. பதில் எதிர்பார்ப்பதில்லை. குட் மார்னிங் சொல்வது தவிர வேறெதுவும் பேசுவதில்லை. நீங்கள் யார், எதற்காக எனக்கு தினமும் குட் மார்னிங் அனுப்புகிறீர்கள் என்று கேட்டாலும் பதில் வருவதில்லை. அவனுக்கு சில சமயம் சலிப்பாக இருக்கும். சில சமயம் கோபம் வரும். குறிப்பிட்ட எண்ணை ட்ரூ காலரில் போட்டுப்...