மனிதன் செயல்களை செய்யவே படைக்கப்பட்டிருப்பவன். அவனளவில் அவன் செயல்கள் சரியானதே என நினைத்திருப்பவன். அவன் செயல்களால் சிலசமயம் யாராகிலும் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும். ஆனால் மனிதமனம் தன் செய்கையால் தான் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறார் என ஏற்க மறுக்கும். மனிதனுக்கே இப்படி எனில் பாதிப்பை தருவதையே கடமையாக கொண்ட சூனியனின் செயலில் குற்றம் கூறினால்,..? சூனியனின் உள்ளக்கொதிப்பை விளக்கும் ஆசிரியர்...
கபடவேடதாரி – எஸ். சீனிவாச ராகவன் மதிப்புரை (அத்தியாயம் 1)
கபடவேடதாரி எனும் தலைப்பை அறிவிக்கையில் Mr.சம்பத், நான் அவனில்லை போல் ஏமாற்றுக்காரனின் கதையாயிருக்கும் என நினைத்தேன். ஏமாந்து போனேன். சூனியனிலிருந்து கதை ஆரம்பிக்கிறது. அதுவே ஒரு வித்தியாசமெனில், சூனியனுக்கு விசாரணை, தண்டனை என நினைத்தற்கரிய கோணத்தில் கதை ஆரம்பத்திலேயே வேகமெடுக்கிறது. ஆங்கில திரைப்படங்களில், கதைகளில் Parallel universe என்ற concept சுவாரசியமாக இருக்கும். அது போன்ற புது உலகை நம்...
கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 2)
தப்பிப்பதற்கான முதல்படி தப்பிக்கவேண்டும் என்ற எண்ணம்தான். அந்த எண்ணம் அவனுக்கு கடந்த அத்தியாயத்திலேயே உதித்துவிட்டது. இப்போது அவன் எப்படி தப்பிக்கப் போகிறான்? அவன் கிடக்கட்டும். வாழ்வின் எத்தனையோ சூழல்களில் இருந்து நாம் தப்பிக்க நினைத்திருப்போம். நாம் ஏன் ஒரு சூழலில் இருந்து தப்பிக்க நினைக்கிறோம்? அந்த சூழல் நமக்கு உவப்பில்லாதபோது. அப்படித்தானே? அப்படி நாம் தப்பிக்க நினைத்த அந்த உவப்பில்லாத சூழலை...
கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 1)
முதல் அத்தியாயத்தில் என்னைப்படிக்கத் தூண்டாத எந்தவொரு நாவலையும் நான் முழுவதுமாய் படித்ததில்லை, அது யார் எழுதிய நாவலாக இருந்தாலும், யார் பரிந்துரைத்தாலும் சரி. அப்படி நான் படிக்காமல் சேகரித்து வைத்திருக்கும் எத்தனையோ புத்தகங்கள் அதற்கு ஆதாரமாய் இன்னும் இருக்கின்றன. கபடவேடதாரியின் முதல் அத்தியாயம் எனக்கு சொன்ன சேதி என்னவெனில் இது என்னால் முழுமையாகப் படிக்கப்படப்போகிற நாவலாய் இருக்கப்போகிறது என்பதே...
கபடவேடதாரி – விமரிசனப் போட்டி
Bynge appல் தொடராக வெளியாகிக்கொண்டிருக்கும் கபடவேடதாரி நாவல் அத்தியாயங்களுக்கு ஃபேஸ்புக்கில் வெளியாகும் விமரிசனங்களை இங்கே தொகுக்கிறேன்.
கபடவேடதாரி – தேவேந்திரன் ராமையன் மதிப்புரை (அத்தியாயம் 1)
ஆசிரியர் பா. ரா. அவர்களின் பல நூல்களை வாசித்திருக்கிறேன். அவர்களின் எழுத்துக்கு ஒரு தனி தன்மையுண்டு. அந்த வகையில் இந்த “கபடவேடதாரி” நாவலினை, வாசிக்க ஆரம்பித்தேன், முதல் அத்தியாயத்தில் இருந்து இது எதோ ஒரு புதிய கோணத்தில் புனையப்பட்ட வேடதாரி என்று என்னைப்படிக்கத் தூண்டியது. ஆரம்பமே ஒரு பிரமாண்ட உலகம். நம் கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்ட வெகுவான விஷயங்களை முதல் அத்தியாயத்தில்...
கபடவேடதாரி – கவிதா. கே மதிப்புரை (அத்தியாயம் 2)
முதல் அத்தியாயத்தில் இருந்த புதிர் இரண்டாம் அத்தியாயத்தில் அவிழும் என்று நினைத்தால் புதிர்கள் நீண்டு கொண்டே செல்கிறது. நம் ஊரில் முதல்மரியாதை செய்ய மாலை அணிவிப்பது வழக்கம். சில பல அரசியல்வாதிகள் தற்போது கமெர்ஷியலாக வேல் ஏந்துவதைப் போல, சூனியர்கள் உலகில் எலும்புக்கூடுகளுக்கு மதிப்பு அதிகம். ஏனெனில் இறைவன் படப்பில் இறுதியில் எஞ்சுவது அது மட்டும் தானே. எலும்புக்கூடுகளை கடவுளின் தோல்விச் சின்னமாக...
கபடவேடதாரி – கவிதா. கே மதிப்புரை (அத்தியாயம் 1)
சூனியர்கள், அமீஷின் நாகர்கள், டேன் ப்ரவுனின் மேஷன்கள் போலவே பாராவின் புனை மாந்தர் தாம் அவர்கள். ஒரு இனக்குழு தனக்குள்ளேயே அடித்துக் கொண்டு அழிவதற்கு ஆவன செய்பவர்கள் சூனியர்கள். கடவுளை அழிக்க இயலாத காரணத்தால் கடவுளது முதன்மைப் படைப்பான மனித குலத்தை அழிந்து தங்களின் கடவுள் வெறுப்பை ஆற்றுப்படுத்திக்கொள்ள முயல்பவர்கள் தாம் சூனியர்கள். அவ்வினத்துள் ஒருவன் தன் இன சூனியர்களாலேயே இனத்துரோகி எனக் குற்றம்...
கபடவேடதாரி – ஷாலினி கணேசன் மதிப்புரை (அத்தியாயம் 2)
மானிடர்களின் உலகிலிருந்து சூனியர்களின் உலகம் முற்றிலும் வேறுபட்டதாக இருப்பினும், மனிதர்களுக்கு உண்டான அந்த பழி வாங்கும் குணம் சூனியர்களிடம் மேலோங்கி நிற்கிறது. ஆனால் சூனியர்களின் பலிவாங்கும் குணம் நியாயத்தின் போர்வையில் பதுங்கி இருப்பதாய் தான் படுகிறது. மனிதர்களிடத்தில் இறுதியாய் எஞ்சியிருக்கும் எலும்பினை சூனிய உலகில் பெரும் மதிப்பாய் கருதுவாய் பாரா அவர்கள் எழுதியிருக்கிறார். தனது மனைவிக்காக...
கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 3)
எத்தனையோ சங்குகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம். பூகம்பச் சங்கு என்றொரு சங்கா? அது எப்படியிருக்கும்?அதன் பயன்பாடு என்ன? என்ற ஆவல் தலைப்பை வாசித்ததும் பற்றிக் கொள்கிறது. தன்னைப் பலிகொடுத்தலில் தான் தப்பித்தலுக்கான வழி இருக்கிறது என நம்பும் சூனியன் நீலநிற நகரத்தை அழிக்க தன்னை பயன்படுத்திக் கொள்ளும் படி சொல்கிறான். மரணக்கப்பலை அழிக்க கடவுள் அந்நகரை அனுப்பி இருக்கக்கூடும் என நினைக்கும் மீகாமன் சூனியனின்...