Categoryபயணம்

சிங்கப்பூர் பயணம் 6

திங்களன்று சிங்கப்பூர் தமிழ் மாணவர்களுக்குப் பாடத்திட்டம் வகுக்கும் தமிழாசிரியர் குழுவினருக்காக [இவர்கள் கல்வி அமைச்சகத்தின் கீழ் பணியாற்றுகிறார்கள். டெபுடேஷனில் வந்து போகிறவர்கள்.] ஒரு பயிலரங்கம் நடத்தினோம். ஏற்கெனவே திட்டமிட்ட பயிலரங்கம்தான் போலிருக்கிறது. ஆனால் பத்ரி செய்த சதியால் இந்த விவரம் எனக்கு முந்தைய தினம் இரவு வரை தெரியாமலேயே இருந்திருக்கிறது. போகிற வழியில், எது குறித்த பயிலரங்கம்...

சிங்கப்பூர் பயணம் 5

முதல் நாள் செய்த துரோகத்துக்கு மறுநாள் பிராயச்சித்தம் தேடிக்கொள்ளும்பொருட்டு, பத்ரி அன்று காலை எனக்கு முன்னரே எழுந்து ஆயத்தமாகியிருந்தார். உணவு அரங்கு உலக உணவுகளால் நிரம்பியிருந்தது. கூடை நிறைய பிரெட். எடுத்து டோஸ்ட் செய்து தர ஒரு சீனப்பெண். அருகே பாத்திரத்தில் வெண்ணெய்க் கட்டி, ஜாம் வகைகள். சாலட்டுகள். சற்றுத் தள்ளி மெகா சீரியல் எழுத்தாளர்களுக்கான சீரியல் ஃபுட். ஒரு கிண்ணத்தில் ஓட்ஸ் மற்றும்...

சிங்கப்பூர் பயணம் 4

சிங்கப்பூரில், எழுத்தாளர்கள் ஓரிருவரும் எழுதுவோர் ஒரு சிலரும் எழுதும் விருப்பமுள்ளவர்கள் சற்றே அதிகமாகவும் இருக்கிறார்கள். எடிட்டிங் குறித்த பயிலரங்கமென்றாலும் எழுத்தாளர்கள்தாம் பெருமளவில் கலந்துகொள்ளப் பதிவு செய்திருந்தார்கள். எடிட்டிங் என்றால் என்னவென்று அறிந்த இரண்டு பேர் இருந்தார்கள். அதிலொருவர் கல்வித்துறையைச் சார்ந்தவர். பொதுவாக எடிட்டிங் என்பது என்ன என்று விளக்குவது மிகவும் பேஜாரான காரியம்...

சிங்கப்பூர் பயணம் 3

சாங்கி விமான நிலையத்தில் இறங்கியதுமே பத்ரி தன் மொபைல் போனில் நேரத்தை மாற்றிக்கொண்டதைப் பார்த்தேன்.  நான் அதைச் செய்யவில்லை. செய்ய வேண்டாம் என்று ஏற்கெனவே முடிவு செய்திருந்தேன். கடிகாரத்தில் இந்திய நேரத்தையே வைத்திருப்பது. ஒவ்வொருமுறை பார்க்கும்போதும் இரண்டரை மணி நேரம் கூட்டிக்கொள்வது என்பது முடிவு. அதன்படியே முதல் நாள் இரவு இரண்டே முக்காலுக்குப் படுத்தபோது சரியாக நாலு மணிக்கு அலாரம் வைத்தேன்...

சிங்கப்பூர் பயணம் 2

சிங்கப்பூர் சாலைகள் அழகானவை. சீரானவை. குண்டு குழிகளற்றவை. இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டும் பயணம் செய்துகொண்டுமே இருக்கலாம். பிரதான சாலைகள் மட்டுமல்ல. சந்து பொந்துகளுக்கும் அங்கே சமநீதி கிடைத்திருக்கிறது. என்று தொடங்கி ஒரு வியாசம் எழுதுவது என் நோக்கமல்ல. எனக்கென்னவோ சாலைகள் அந்த தேசத்தின் ஒரு குறியீடாகத் தென்படுகின்றன. ஒழுங்கினால் உருப்பெற்ற தேசம் அது. அது இன்றளவும் நீடித்திருப்பதன் வெளிப்படையான...

சிங்கப்பூர் பயணம் 1

சிங்கப்பூர் தேசிய புத்தக வளர்ச்சி கவுன்சில் சார்பில் எங்களை அழைத்திருந்தார்கள். சிங்கப்பூர் எழுத்தாளர்களுக்கான இருநாள் எடிட்டிங் பயிலரங்கம். முடித்துவிட்டு, மூன்றாம் நாள் சிங்கப்பூர் கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாடநூல் உருவாக்கக் குழுவினருக்கான எடிட்டிங் பயிலரங்கம். நியூ ஹொரைசன் மீடியா சார்பில் நானும் பத்ரியும் இந்தப் பயிலரங்குகளை நடத்துவதற்காகக் கடந்த 14ம் தேதி சிங்கப்பூர் சென்றோம்...

என்ன ஊர்? சிங்கப்பூர்.

எதிர்வரும் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் [மே 15,16] சிங்கப்பூர் நேஷனல் புக் டெவலப்மெண்ட் கவுன்சில் ஏற்பாடு செய்திருக்கும் எடிட்டிங் தொடர்பான ஒரு பயிலரங்கை வழிநடத்தவிருக்கிறேன். என்னுடன் பத்ரியும் இணைந்து இதனைச் செய்கிறார். இதன் பொருட்டு நாங்கள் இருவரும் இவ்வார இறுதியில் சிங்கப்பூர் செல்கிறோம். சனி, ஞாயிறு, திங்கள் மூன்று தினங்கள் சிங்கப்பூரில் இருப்பேன். பகல் பொழுது முழுதும் பயிலரங்கில்...

இருட்டறையில் எம்பெருமான், ஏசி காரில் தமன்னா

சென்னையின் நரக வெயிலிலிருந்து தப்பிக்க நினைத்து ஒரு நாலு நாள் பெங்களூர், மைசூர்ப் பக்கம் போக ஏற்பாடு செய்திருந்தேன். என் துரதிருஷ்டம், அங்கேயும் பட்டை காய்கிறது. ஆனால் சென்னை அளவுக்கு மோசமில்லை என்றுதான் சொல்லவேண்டும். காலை, மாலை வேளைகளில் காற்று குளிர்ந்துவிடுகிறது. அபூர்வமாக ஒரு சில சொட்டுகள் மழையையும் கண்டேன். அந்தவரை ஆண்டவனுக்கு நன்றி. பெங்களூர் எனக்குப் பிடிக்கவில்லை. எல்லா சாலைகளிலும்...

கலைஞரின் ‘ராங்’ செண்டிமெண்ட்

நேற்று காவிரிப் பூம்பட்டணம் என்கிற பூம்புகார் அருகே மேலையூர் சீனிவாசா மேல்நிலைப் பள்ளியின் ஆண்டுவிழாவுக்கு என்னை அழைத்திருந்தார்கள். காலைப் பொழுதில் கலந்துரையாடல். மாலை பரிசளிப்பு விழா என முழுநாள் நிகழ்ச்சி. என்னளவில் இது ஒரு புதிய அனுபவம். கூட்டங்களோ, கருத்தரங்குகளோ புதிதல்ல என்றாலும் ஒரு பள்ளிக்கூட ஆண்டு விழாவுக்குத் தலைமை தாங்குவது என்பது முதல். மூவாயிரத்தி ஐந்நூறு மாணவ மாணவிகளுக்கு எதிரே...

வெயிலோடு வாழ்

ஹைதராபாத்துக்கு ஒரு குறும்பயணம் நேர்ந்தது. முதல் மனப்பதிவு, சென்னையை விடக் கெட்டுப்போய்விட்ட நகரம். முன்பு சென்றிருக்கிறேன். பத்துப் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு. நிறைய பச்சை பார்க்க முடிந்தது. நாம்பள்ளி ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி எந்தப் பக்கம் போனாலும் நூறடிக்கு ஒரு பூங்கா, வழியெல்லாம் மரங்கள், ஆங்காங்கே புல் திட்டு என்று கண்ட நினைவு அப்படியே இருக்கிறது. சந்திரபாபு நாயுடு காலத்தில் நகரசுத்தி...

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!