தமிழினி வெளியீடாக, சயந்தனின் ஆறாவடு நாவல் சென்னை புத்தகக் கண்காட்சியை ஒட்டி வெளிவருகிறது. கன்னிமரா நூலக வளாகத்தில் உள்ள அண்ணா அரங்கில் இதன் வெளியீட்டு விழா 3.1.2012 செவ்வாய்க்கிழமை மாலை 4.30க்கு நடைபெறுகிறது.
ராஜேந்திர சோழன் தலைமையில் விருபா குமரேசன் நூலை வெளியிட, சோமிதரன் முதல் பிரதி பெற்று உரையாற்றுகிறார்.
புத்தாண்டைப் புத்தக நிகழ்ச்சியுடன் தொடங்குவதே மங்களகரமானது.
இந்த வருடம் என்ன செய்தேன்?
ஒவ்வொரு வருடத் தொடக்கத்திலும் சில திட்டங்கள் வகுப்பேன். கூடியவரை அதன்படியே நடக்க முயற்சி செய்வேன். பெரும்பாலும் சொதப்பியதில்லை. ஏனெனில் சாய்ஸில் விடுவதற்கென்றே எப்போதும் சிலவற்றைச் சேர்த்து திட்டமிடுவது என் வழக்கம். ஆனால் இந்த 2011 மட்டும் எனக்கு வேறு மாதிரி அமைந்தது. திட்டமிட்ட எதையும் செய்யாமல், திட்டமிடாத எத்தனையோ காரியங்களை இந்த ஆண்டு செய்திருக்கிறேன். யோசித்துப் பார்த்தால், முற்றிலும்...
குற்றியலுலகம்
ட்விட்டராகப்பட்டது, கிபி 2006ம் வருடம் மார்ச் மாதம் கண்டுபிடிக்கப்பட்டு, 2008ம் வருடம் மே மாதம் 25ம் நாள் முதலாக என்னால் பயன்படுத்தப்பட்டு வருகிற ஒரு சமூக இணையத்தளம். என்ன வேண்டுமானாலும் எழுதலாம்; ஆனால் 140 கேரக்டர்களுக்குள் முடியவேண்டுமென்கிற இதன் கொள்ளளவு சார்ந்த சவால் என்னை இதன்பால் ஈர்த்தது. ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை இந்தப் பக்கம் நான் போகாமலிருந்த தினமென்று ஒன்றில்லை.
பானைக்குள் பூதம்
ஒரு கதை எழுதியிருக்கிறேன் என்று என் மகள் (வயது 7) ஒரு தாளை நீட்டினாள். ஏற்கெனவே சொல்லப்பட்ட கதைதான். ஆயினும் மொழி அவளுடையது.
கீழே அவள் எழுதிய வர்ஷன். வாக்கிய அமைப்பு, ஒற்றுகள் எதையும் மாற்றவில்லை. டைப் செய்தது மட்டுமே என் பணி.
விபரீதம் – 2
கீழ்க்கண்ட சாஹித்தியத்தை நேற்று முன் தினம் இரவு இதே நேரம் எழுதினேன். இன்று சன் டிவியில் உதிரிப்பூக்கள் சீரியலுக்கான ட்ரெய்லரில் இது வருகிறது. தொன்மமும் பின்னவீனமும் சந்தமும் சொந்தமும் சங்கமிக்கும் இந்த ராப்பிலக்கியப் படைப்பினைத் தமிழ்கூறும் நல்லுலகின்முன் சமர்ப்பிப்பதில் சொல்லொணா ஆனந்தமடைகிறேன். [யாருக்காவது வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் தனிமடலில் தெரிவிக்கவும்.]
விபரீதம்
சமர்ப்பணம் – பேயோனுக்கு.
மழையும் மற்றதும்
கடந்த சில வாரங்களில் சென்னை நகரில் நான் இதற்குமுன் பார்த்திராத பல பகுதிகளுக்கு, படப்பிடிப்பு நிமித்தம் செல்ல வேண்டியிருந்தது. ஒரு சில இடங்கள் சென்னைக்குச் சற்று வெளியேயும் இருந்தன. எப்படி ஆனாலும் அதிகபட்சம் அரை மணி, முக்கால் மணி நேரத் தொலைவுக்குள் இருந்த இடங்கள். ஒரு சுமாரான மழைக்கு நகரம் எத்தனை நாசமாகிவிடுகிறது என்பதை இந்தப் பயணங்களின்போது கண்கூடாகப் பார்த்தேன். குறிப்பாக, போரூர்...
பதிலளிக்கும் நேரம்
கிழக்கிலிருந்து விலகிய பிறகு நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று கேட்டு அநேகமாக தினசரி இரண்டு மின்னஞ்சல்களாவது வருகின்றன. இணையத்தில் ஏன் முன்போல் எழுதுவதில்லை என்று விசாரித்தும்.
இது பதிலளிக்கும் நேரம்.
நாளை ரிலீஸ்
நான் வசனம் எழுதியிருக்கும் தம்பி வெட்டோத்தி சுந்தரம் திரைப்படம் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாகிறது.
தொடர்புடைய முந்தைய குறிப்புகள்: ஒன்று | இரண்டு
படம் பார்க்கும் நண்பர்கள் உங்கள் கருத்துகளைத் தெரியப்படுத்தினால் மகிழ்வேன்.
மறந்தும் இருந்துவிடாதீர்கள்!
சாக்கடை அடைப்புகள். தார் காணா வீதியின் மேடு பள்ளங்கள். குவியும் குப்பைகள். நாய்த் தொல்லை. பன்றித் தொல்லை. கொசுத் தொல்லை. பிளாட்பார ஆக்கிரமிப்புகள். மட்டரகமான குடிநீர் வினியோகம். மோசமான மழைநீர் வடிகால். அன்றாட வாழ்வின் அசகாயப் பிரச்னைகள் கடந்தவாரம் முழுதும் ஆட்டோ ஏறி வீதிவலம் வந்தன. உண்மையில் இந்த உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்கள் கூம்பு மைக் ஆட்டோக்களில் உட்கார்ந்தபடிக்கு மேற்படி பிரச்னைகளை...