யதி நாவலை வெளியிடும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் பினாக்கிள் புக்ஸ் பதிப்பக அறிமுக விழா நிகழ்ச்சி எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை சென்னை ஆழ்வார்பேட்டை சி.பி. ஆர்ட் செண்டரில் நடைபெறவிருக்கிறது. நாகூர் ரூமி, சுதாகர் கஸ்தூரி, ஹாலாஸ்யன் ஆகியோருடன் நானும் பேசுகிறேன். வாய்ப்புள்ளோர் வருக. பினாக்கிள் வெளியீடுகள் அரங்கில் 20 சதத் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.
யதி முன்னுரை – தேர்வானவர் அறிவிப்பு
யதிக்கு ஆர்வமுடன் முன்னுரை எழுதியோர் மொத்தம் 38 பேர். அவர்களுக்கு முதலில் என் நன்றியைச் சொல்லிவிடுகிறேன். ஆயிரம் பக்க அளவுள்ள ஒரு நாவலை வாசித்து, ஆழத் தோய்ந்து, தாம் உணர்ந்ததை வெளிப்படுத்திய அந்த அன்பும் அக்கறையும் எனக்குப் பெரிய விருது. அநேகமாக வேறெந்த எழுத்தாளருக்கும் புத்தகம் வெளிவருவதற்கு முன்பே இத்தனை மதிப்புரைகள் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. கேட்டு வாங்கியதுதான் என்றாலும் யார் இன்று வேலை...
மாலுமி – முன்னுரை
கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு ஜனவரி மாதத்திலும் இரண்டு அல்லது மூன்று சிறுகதைகளை எப்படியாவது எழுதிவிடுகிறேன். வருடம் முழுவதும் என்னென்னவோ எழுத வேண்டி இருக்கிறது. ஆயிரக்கணக்கான தொலைக்காட்சித் தொடர் காட்சிகளுக்கான வசனங்கள், நாவல் முயற்சிகள், பத்திரிகைத் தொடர்கள், கட்டுரைகள், சிறு குறிப்புகள் இன்னும் என்னென்னவோ. ஒரு சிறுகதை எழுதுவதற்கான மன ஒருங்கமைவும் நேரமும் பெரும்பாலும் கூடுவதில்லை. ஆனால் ஒரு நல்ல...
யதி – வாசகர் பார்வை 20 [அரங்கப்பெருமாள் கோவிந்தசாமி]
துறவறம் எனும் சத்திய தடம் தேடிச் சென்ற நாவலுடன் நானும் பயணித்தேன். மறக்க முடியாத அனுபவம் இது. திஜாவின் கும்பகோணம் – காவிரி போல கேளம்பாக்கம் கோவளம் கடற்கரை மற்றும் திருவிடந்தை பெருமாள் இந்நாவலெங்கும் வியாபிக்கிறார்கள். அந்த விவரிப்பு தரும் சிலிர்ப்பே என்னை ஜீவத் தடத்தைத் தேடிச் செல்லுவதை உறுதிப்படுத்துகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தின் ஒரு சிறிய கடலோர கிராமத்தில் கிளம்பி, கேரளத்தில்...
யதி – வாசகர் பார்வை 19 [ஏ.கே. சேகர்]
பா.ராகவன் தினமணி டாட்காமில் எழுதிய யதி நாவலை முழுவதும் வாசித்தேன். இதற்குமுன் அவர் எழுதிய பலவற்றை வாசித்திருந்தாலும் யதி தந்தது வேறு விதமான அனுபவம். யதி, துறவொழுக்கம் அல்லது ஒழுக்க மீறலைக் கருவாகக் கொண்டது. யோகிகள், சித்தர்கள், ஞானிகள் முதல் சாதாரண சன்னியாசிகள்வரை பலபேர் நாவலில் வந்தாலும் அவர்களின் தோற்றத்துக்கு அப்பால் உள்ளதைத் தோண்டி எடுப்பதே நோக்கம் என்பது தொடக்கத்திலேயே புரிந்துவிடுகிறது. ஒரு...
மெகா சீரியல்களை யார் பார்க்கிறார்கள்?
மெகா சீரியல்கள் பற்றிய எதிர்மறைக் கருத்துகள் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வெளிவருகின்றன. சீரியல்களைக் கிண்டல் செய்வதும், நான் சீரியல் பார்ப்பதில்லை என்று சொல்வதும் ஒருவித மேல் தட்டு மனோபாவமாகச் சமீபகாலமாக நிலைநிறுத்தப்பட்டு வருவதைக் காண்கிறேன். ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை முப்பத்து ஐந்து வயதுக்கு மேற்பட்ட பெண்களில் சுமார் எழுபது சதவீதம் பேர் சீரியல்களையே உலகமாக எண்ணி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்...
யதி – வாசகர் பார்வை 18 [இரா. ஶ்ரீதரன்]
குழந்தைப் பருவம் முதல் சாமியார் என்றதும் என் நினைவில் வருபவர், எங்கள் ஊர் (புதுகை) அதிஷ்டானம் சாந்தானந்த ஸ்வாமிகள். சிரித்த முகம். யாரைக் கண்டாலும் ஆசீர்வதிக்கும் பெருங்கருணை. பிறகு வயது ஏற ஏற காஞ்சி மகா பெரியவரின் துறவொழுக்கம் கண்டு தாள் பணிந்தேன். பின்னாளில் விதவிதமாக எவ்வளவோ சன்னியாசிகள் எங்கெங்கிருந்தோ முளைத்தார்கள். ஒவ்வொருவரைப் பற்றியும் பல்வேறு விதமான செய்திகள், தகவல்கள், பரபரப்புகள்...
யதி – முன்பதிவு – சலுகை விலை அறிவிப்பு
யதி ஜனவரி சென்னை புத்தகக் காட்சியில் வெளியாகிறது. புத்தக வடிவில் சுமார் ஆயிரம் பக்கங்கள். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் ‘பினாக்கிள் புக்ஸ்’ இதனை வெளியிடுகிறது. செம்பதிப்பு | ராயல் சைஸ் | விலை ரூ. 1000 டிசம்பர் 30-ம் தேதிக்குள் முன்பதிவு செய்வோருக்கு சலுகை விலை. ரூ.700 மட்டும். முன் வெளியீடு தொடர்பாக பினாக்கிள் புக்ஸ் அறிவித்துள்ள விவரம் கீழே. முன்பதிவு செய்ய...
யதி – வாசகர் பார்வை 17 [சி.ஜே. ஆனந்தகுமார்]
பா. ராகவனின் யதி அவரது முந்தைய படைப்புகளில் இருந்து பெரிதும் வேறுபடுகின்றது. சகோதரர்களான நான்கு சன்னியாசிகளின் கதையை ஒற்றை நபரின் மீள் நினைவாகச் சொல்லும் பாவனையில் இந்திய சன்னியாச மரபினை, அதன் பிரிவுகளை, காவி உடுத்தினாலும் உள்ளத்தின் அலைக்கழிப்பில் பறக்கும் சிந்தனையின் திசைகளை, எச்சங்களின் வலைப்பின்னல்களில் சிக்கித் தவிக்கும் துறவு மனங்களை எட்டிப் பிடிக்கின்றது. இந்த விதத்தில் சன்னியாசிகளின்...
யதி – வாசகர் பார்வை 16 [Ms Fairy]
இடைநிறுத்தம், நிறுத்தம், வரையறை, கட்டுப்பாடு, வழிகாட்டுதல், அடிக்கடி, பக்தன், அழிப்பவர், புனிதமான, தீவிரமான, தேடுபவர், துறவி, one who has controlled his passions and abandoned the world என்றெல்லாம் பொதுவாக யதி என்னும் வார்த்தை விளக்கப்பட்டாலும் இவையெல்லாம் ஆண்பாலையே குறிக்கின்றது. ஆனால் பாராவின் யதியைப் படித்தபின்பு, இந்த யதி இப்புனைவில் நடமாடும் நான்கு சகோதரர்கள், இவர்களின் அப்பா...