Tagஒழுக்கம்

பராமரிப்புக் கலை

மேக் ஒழுக்கம் என்பது மென்பொருள்களை எங்கிருந்து தரவிறக்கம் செய்கிறோம் என்பதில் தொடங்குகிறது. ஆப் ஸ்டோரில் இருந்துதான் எதையும் வாங்குவது என்பது என் கொள்கை. இலவச மென்பொருள்களானாலும் சரி; காசு கொடுத்து வாங்குவதானாலும் சரி. அதிகாரபூர்வக் கடையில் மட்டும் வாங்கினால் ஆபத்து கிடையாது.

ஒழுங்கீனம், ஒரு கேள்வி: சிகரம் பாரதி

நாம் நிறைய வேலை செய்வதாக, எப்போதும் பணியில் தீவிரமாக இருப்பதாக எண்ணிக்கொள்வது ஒரு பாவனை அல்லது மாயை. விலகி நின்று நமது பணியை நேர்மையாக மதிப்பிட்டால் ஒரு நாளில் நான்கில் ஒரு பங்கு நேரத்தைக் கூட நாம் நேர்த்தியாகச் செலவிடுவதில்லை என்பது புரியும்.

பாடம்

போதி மரத்துக்கு எந்தச் சிறப்பும் கிடையாது. சிறப்பெல்லாம் புத்தருக்குரியதே. ஆனால் அவர் தினம் ஒரு மரத்தடியைத் தேடிச் சென்று அமர்ந்திருந்தால் நிச்சயமாக வேலை கெட்டிருக்கும் என்றுதான் தோன்றுகிறது.

நானொரு மாண்டேக் சிங் அலுவாலியா

ஒவ்வொரு புத்தாண்டு தொடங்குவதற்கு முன்பும், அதற்கு முந்தைய டிசம்பரில் அடுத்த ஒரு வருடத்துக்கான திட்டங்களை எழுதுகிறேன். இந்தத் திட்டம் எழுதும் பணி என்பது ஒரு நாவல் எழுதுவதினும் கடினமானது, கவனம் கேட்பது. கிட்டத்தட்ட ஒரு தற்கொலைப் போராளி மனநிலையுடன்தான் இச்செயலில் ஒவ்வொரு முறையும் ஈடுபடுகிறேன். அந்தத் தீவிரத்தை உங்களால் புரிந்துகொள்ளவே முடியாது, நீங்கள் என்னை நிகர்த்த அல்லது என்னைக் காட்டிலும்...

எடுத்த புத்தகத்தைப் படித்து முடிப்பது எப்படி?

புத்தகம் படிப்பதில் உள்ள பெரிய சிக்கலே, எடுப்பதில் பாதி படிக்க முடியாதபடி இருப்பதுதான். 1. போரடிக்கும் எழுத்து நடை 2. எழுதத் தெரியாமல் எழுதியிருப்பது 3. சப்ஜெக்டுக்கு வராமல் ஊர் உலகமெல்லாம் சுற்றி வளைப்பது 4. நிறுத்தற்குறி வைக்கும் வழக்கமே இல்லாமல், பத்து வரிக்கு ஒரு சொற்றொடரை அமைத்திருப்பது 5. விறுவிறுப்பே இல்லாமல் இருப்பது 6. சுவாரசியம் அற்று இருப்பது 7. பண்டித மொழியில் எழுதியிருப்பது 8. தொட்ட...

எப்போதும் நூறு சதம்

என்னுடைய ஒய்யார ஒழுங்கீனங்கள் குறித்துப் பலமுறை எழுதியிருக்கிறேன். அதில் முக்கியமான ஓர் ஒழுங்கீனத்தைப் பற்றி எப்படியோ இதுவரை எழுதாது விட்டிருக்கிறேன். நேற்று மாமல்லனுடன் பேசிக்கொண்டிருந்தபோது இந்த விவகாரம் வந்து போனதால் இப்போது எழுதிவிடுகிறேன். நான் ஒரு மூலவர். அதாவது எதற்காகவும் எழுந்து நகர்ந்து போகாத ஆலமரத்தடிப் பிள்ளையார். என் மனைவியின் கருத்துப்படி சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் மட்டுமே என்...

நான் எப்படி எழுதுகிறேன்?

நிறைய எழுதுகிறீர்கள். எப்படி நேரம் கிடைக்கிறது என்று அநேகமாக தினசரி யாராவது ஒருவராவது கேட்டுவிடுகிறார். ஒரு பண்பலை வானொலி நிருபர் சற்றுமுன் தொலைபேசியில் அழைத்துச் சில விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தார். அவரும் கடைசியில் மறக்காமல் இதே கேள்வியைத்தான் கேட்டார். எனக்கு இந்த ‘நேரம் கிடைப்பது’ என்கிற விஷயம் உண்மையிலேயே புரியவில்லை. ராக்கெட் விட்டுக்கொண்டிருப்பவர்களெல்லாம் எண்டர் தட்டிக் கவிதை எழுத...

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive new posts by email.

தொகுப்பு

Links

Recent Posts

Join here

RSS Feeds

R.P. Sarathy

எழுத்துக் கல்வி