Categoryஅனுபவம்

துறப்பதும் ஏற்பதும்

உணவு குறித்தோ, நொறுக்குத் தீனிகள் குறித்தோ எப்போது நான் என்ன எழுதினாலும் உடனே, ‘பேலியோ அவ்வளவுதானா?’ என்று யாராவது ஓரிருவராவது கமெண்ட் போட்டுவிடுகிறார்கள். அது ஏதோ கோயிலுக்கு நேர்ந்துகொண்டு மொட்டை போடுவது போல இங்கே நடக்கிறது. இதுவரை அத்தகு கமெண்ட்களுக்கு நான் பதில் சொன்னதில்லை. ஐந்தாண்டுக் காலம் நான் பேலியோவில் இருந்தேன். 28 கிலோ எடை குறைத்தேன். 6.7 அளவில் இருந்த சர்க்கரையை 5.4க்குக் கொண்டு...

நடந்த கதை

காலை கண் விழித்து எழுந்த சில நிமிடங்களிலேயே ஹலோ எஃப்.எம்மில் சிவல்புரி சிங்காரம் சொன்னார். அன்பின் ரிஷப  ராசியினரே! இன்று நீங்கள் வழிபாட்டின் மூலமே வளர்ச்சி காண வேண்டும்.  என்றால், முழு நாளும் மொக்கை வாங்குவீர் என்று பொருள். அவர் சொல்லும் நல்லவையெல்லாம் நடக்கிறதோ இல்லையோ. இம்மாதிரியான ஆரூடங்கள் உடனடியாக பலித்துவிடுகின்றன. நேற்று இரண்டு முக்கியமான வேலைகள். காலை ஒன்று; மாலை ஒன்று.  விடிந்ததுமே...

கிறுக்குத்தனம்: 2004 வர்ஷன்

பயன்பாட்டில் இல்லாத ஜிமெயில் ஐடிகளைச் சில மாதங்களாக டெலிட் செய்து வருகிறேன். என்ன ஒரு ஐந்து பத்து ஐடி இருக்குமா, இது ஒரு ப்ராஜக்டா என்று உங்களுக்குத் தோன்றலாம். ஜிமெயில் அறிமுகமான காலத்தில் அதன் 15 ஜிபி இடம் என்பது ஒரு பயங்கரமான போதைப் பொருளைப் போல என்னைத் தாக்கியது. எப்படியாவது ஒரு பத்தாயிரம் ஜிபியை வளைத்துப் போட்டுவிட வேண்டும் என்று வெறிகொண்டு என்னென்னவோ பெயர்களில் அக்கவுண்ட்...

என்றாவது ஒரு நாள்

வீடு வெதுவெதுப்பாக்கும் விழாக்கள்கூட முக்கியமில்லை. வீட்டைச் சுற்றிக்காட்டும் வீடியோ கலாசாரம் ஒன்று சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. நகரியில் ரோஜா கட்டியிருக்கும் வீட்டு விடியோ ஒன்றைப் பார்த்தேன். நேற்று என் அட்மின் இத்தகு விடியோக்கள் இன்னும் இரண்டினைச் சுட்டிக்காட்டினார். முதலாவது, தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் வீட்டுச் சுற்றுலா.  அவரது மகள் தயாரித்தது. மற்றது, பாண்டியன் ஸ்டோர் மீனா...

33 நாயன்மார்கள்

நான் வசிக்கும் சமஸ்தானத்தின் எல்லைக்குள் மொத்தம் 33 நாயன்மார்கள் வசிக்கிறார்கள். இவர்களுள் வீராசாமி நகர் மேநிலை நீர்த்தொட்டியைச் சுற்றி வசிப்போர் ஒன்பது பேர். சேம்பர்ஸ் காலனி மெயின் ரோடில் பன்னிரண்டு பேர். பிறருக்குக் குறிப்பிட்ட இருப்பிடம் கிடையாது. சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று இருப்பவர்கள். பிராந்தியத்தில் வசிப்பவர்கள் அத்தனை பேரும் வாகனதாரிகளாக வேண்டும், யாரும் கால்நடையாக எங்கும் சென்று...

குளிர்

பொதுவாக வேலை செய்ய அமரும்போது ஃபேன் போட மாட்டேன். ஏசிதான் எப்போதும். ஃபேன் சத்தம் அலர்ஜி. ஏசியிலும் சத்தம் உண்டென்றாலும் அந்தளவு மோசமில்லை. ஆனால் என் அலுவலகத்தில் ஏசி கிடையாது. எனவே ஃபேனை அணைத்துவிட்டு எழுதுவேன். எழுதாமல், யோசிக்கும்போது ஃபேன் போட்டுக்கொள்வேன். அதாவது குளிர்ச்சி, சூடு என்பது பொருட்டல்ல. சத்தம், சத்தமின்மையே பேசுபொருள். இப்படித்தான் சென்ற ஆண்டு வரை வாழ்ந்து வந்தேன். என்ன காரணமோ...

தனி

மிகவும் உள்ளடங்கிப் போய்க்கொண்டே இருக்கிறேன். சக மனிதர்களிடமிருந்து முற்றிலுமாகத் துண்டித்துக்கொண்டுவிடும் வேட்கை என்னையறியாமல் ஆட்கொண்டிருக்கிறது. எவ்வளவு காலமாக இது, ஏன் இது என்பதற்கான காரணம் தெரியும். ஆனாலும் என் இயல்புக்கு எதிரானதொரு பாதையில் தெரிந்தே நடந்துகொண்டிருக்கிறேன். இதை விரும்பிச் செய்கிறேனா என்று தெரியாது. ஆனால் செய்கிறேன். அதில் சந்தேகமில்லை. தற்செயலாக நேற்று என் மொபைல் போனில் யார்...

மெட்ராஸ் பேப்பர்

தொலைக்காட்சிக்கு எழுதுவதை நிறுத்தி எட்டு மாதங்கள் ஆகின்றன. இந்நாள்களில் நான் என்ன செய்கிறேன் என்று கேட்காத நண்பர்களே கிடையாது. எதையாவது செய்துகொண்டிருப்பேன் என்ற நம்பிக்கை மட்டும் எல்லோருக்கும் இருந்தது. அனைவருக்கும் சொல்வதற்கு ஒரு பதில் இருந்தாலும் அது உருத் திரண்டு ஒரு வடிவம் கொண்டு வெளிப்பட இவ்வளவு கால அவகாசம் தேவைப்பட்டது. நண்பர்களே, உங்கள் வாழ்த்தோடு ஒரு புதிய பத்திரிகை தொடங்குகிறேன்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி