Warning: Undefined array key "00" in /home/writerpara/webapps/writerpara/wp-includes/class-wp-locale.php on line 321

Warning: Undefined array key "00" in /home/writerpara/webapps/writerpara/wp-includes/class-wp-locale.php on line 321

Warning: Undefined array key "00" in /home/writerpara/webapps/writerpara/wp-includes/class-wp-locale.php on line 321
0 | Page 5 of 11 | Pa Raghavan
Warning: Undefined array key "00" in /home/writerpara/webapps/writerpara/wp-includes/class-wp-locale.php on line 321

Warning: Undefined array key "00" in /home/writerpara/webapps/writerpara/wp-includes/class-wp-locale.php on line 321

Archive2011

சுந்தரம் அழைக்கிறான்

நான் வசனம் எழுதியிருக்கும் ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, எதிர்வரும் ஜூலை 16ம் தேதி [சனிக்கிழமை] மாலை 7 மணிக்கு எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கில் நடைபெறவிருக்கிறது. நண்பர்களை இவ்விழாவுக்கு அன்புடன் அழைக்கிறேன்.

எல்.பி.ரோடில் அரிக்காமேடு

அவர் கூப்பிட்டுக்கொண்டேதான் இருந்தார். இதோ அதோ என்று இழுத்தே வருடம் ஒன்றுக்கு மேல் ஆகிவிட்டது. இன்று சந்திக்க நேர்ந்தது. அடையாறு எல்பி சாலையில் அவர் தனியே ஒரு அரிக்காமேடு வைத்திருக்கிறார். ஒரே வித்தியாசம். இங்கு நாம் தோண்டவேண்டாம். தோண்டி எடுத்து ஆராய்ச்சி செய்து அடிக்குறிப்புகளோடு அவர் தயாராக வைத்திருக்கிறார். தொன்மத்தில் ஆர்வமும் கொஞ்சம் கற்பனையில் மிதக்கும் வழக்கமும் இருந்தால் போதும். அவரது...

பாரா-ட்டு

ஆண்டுதோறும் நெய்வேலி புத்தகக் கண்காட்சியில், சிறந்த எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுத்து, பாராட்டி விருதளித்து கௌரவிப்பது வழக்கம். இந்த ஆண்டு அந்தச் சிறப்பை எனக்கு அளித்திருக்கிறார்கள். ஜூலை 8, 2011 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு கண்காட்சி வளாகத்தில் உள்ள லிக்னைட் ஹாலில் இந்தப் பாராட்டு விழா நடைபெறவிருக்கிறது. [ஜூலை மாதம் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை நெய்வேலி புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.]...

ஆஸ்வல்டும் அதிசய மீனும்

மீன் வளர்க்கலாம் என்று ஆஸ்வல்ட் முடிவு செய்தது. வின்னிக்குப் பொழுதுபோவது கஷ்டமாக இருக்கிறது. வீட்டில் குட்டி மீனொன்று துள்ளிக் குதித்துக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.
‘வா, வின்னி. நாம் மீன் வாங்கி வரலாம்’ என்று தன் செல்ல நாய்க்குட்டியை அழைத்துக்கொண்டு வளர்ப்பு மீன் கடைக்குப் போனது ஆஸ்வல்ட்.

சில சொகுசு ஏற்பாடுகள்

வாசகர்களின் வசதி அல்லது இம்சைக்காக இந்தத் தளத்தில் சில புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நீங்களே சற்று அப்படி இப்படிக் கண்ணை நகர்த்தினால் தென்பட்டுவிடும் என்றாலும் எடுத்துச் சொல்லவேண்டியது என் கடமை.

10 1/2 காதலெதிர்க் கவிழுதைகள்

வ்ரைட்டர்பேயோன் தனது தளத்தில் பதினைந்து காதல் கவிதைகள் எழுதியிருக்கிறார். இந்தரக டெம்ப்ளேட் கவிதைகள் எழுதுவது மிகவும் எளிது. [அவரும் அதை அறிந்தேதான் எழுதியிருக்கிறார்.] ஒரு வேகத்தில் 115 கவிதைகள் எழுதுகிறேன் என்று அவரிடம் சொல்லியிருந்தாலும் இப்போதைய வேலைகளுக்கு இடையில் என்னாலான கவிச்சேவை இந்த பத்தரை கவிதைகள்தான். மிச்சம் எங்கே என்று கேட்கமாட்டீர்கள் என்று திடமாக நம்புகிறேன். இது புறமுதுகிடுவதல்ல...

எனக்கு என்ன பிடிக்கும்?

தொலைக்காட்சிகளில் வரும் டாக் ஷோக்கள் எனக்கு மிகுந்த அலர்ஜி உண்டாக்கக்கூடியவை. நினைவு தெரிந்து எந்த ஒரு டாக் ஷோவையும் நான் முழுக்கப் பார்த்ததில்லை. அது என்னவோ தெரியவில்லை. இந்த டாக் ஷோக்களில் வரும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் அநியாயத்துக்கு செயற்கையாகப் பேசுகிறார்கள். அராஜகத்துக்கு ஓர் அளவே இல்லாதபடிக்குத் தொண்டை கிழியக் கத்துகிறார்கள். புருஷன் பெண்சாதிச் சண்டைகளை மேடையில் நிகழ்த்திக்...

எப்படி இருக்கலாம், கல்வி? 5

சமச்சீர் கல்வி என்பது என்ன? மிக எளிமையாக இப்படிப் புரிந்துகொள்கிறேன். தமிழ் நாட்டில் படிக்கிற மாணவர்கள் [சி.பி.எஸ்.சியில் படிப்போர் நீங்கலாக] அத்தனை பேருக்கும் ஒரே மாதிரியான, ஒரே சீரான தரத்திலான கல்வி. அரசுப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், ஓரியண்டல் பள்ளிகள் [சமஸ்கிருதம், உர்தூ இன்னபிற.] என்ற நான்கு விதமான கல்வி நிலையங்கள் இங்கே உள்ளன. இவற்றுள் ஆங்கிலோ இந்தியன்...

எப்படி இருக்கலாம், கல்வி? 4

நான் பள்ளியில் படித்த காலத்தில் குடிமைப்பயிற்சி என்றொரு வகுப்பு இருந்தது. இப்போது உண்டா என்று தெரியவில்லை. வாரத்துக்கு ஒரு பீரியட் மட்டுமே இருக்கும். ஏதாவது கைத்தொழில் கற்றுத்தரும் வகுப்பு அது. என் பள்ளியில் அது கைத்தறி சொல்லித்தரும் வகுப்பு என அறியப்பட்டது. ஓரிரு கைத்தறி இயந்திரங்களும் பள்ளிக்கூடத்தில் இருந்தன.

எப்படி இருக்கலாம், கல்வி? 3

என் தந்தை ஒரு தலைமையாசிரியர். அவரது பள்ளியில்தான் நான் ஒன்பதாம் வகுப்பு வரை படித்தேன். தலைமையாசிரியராகப்பட்டவர், பத்தாம் வகுப்புக்கு மட்டும் ஆங்கிலம் இரண்டாவது பேப்பர் எடுப்பார். பள்ளி வளாகத்தில் அவர் ஒரு பெரும் பூச்சாண்டியாக, பிரம்ம ராட்சசனாக அறியப்பட்டவர். ஹெட் மாஸ்டர் வகுப்பு என்றால் பிள்ளைகள் அலறுவார்கள். அடி, மிரட்டல், கடும் தண்டனைகளால் தன் ஆளுமையை அங்கு அவர் கட்டமைத்துக்கொண்டிருந்தார்.

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!