பத்திரிகை உலகம் – பத்திரிகையாளர்களின் வீர சாகசங்கள் அல்லது துயர வாழ்க்கை சார்ந்து அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால், தமிழ் வார இதழ் உலகையே கருப்பொருளாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் முதல் நாவல் ஜந்துதான். ஆனால் இந்நாவலின் தனித்துவம் அதுவல்ல. இதன் களம் ஒரு தமிழ்ப் பத்திரிகை அலுவலகமாகச் சித்திரிக்கப்பட்டிருந்தாலும், இது பேசும் உண்மைகள் உலகப் பொதுவானவை...
இரண்டல்ல
எண்ணெய் எடுக்கிறார்கள் எரிவாயு எடுக்கிறார்கள் கனிமங்கள் தனிமங்கள் சேர்மங்கள் ஏராளமாக எடுக்கிறார்கள் பார் பார் நீருக்கடியில் தடம் விரித்து புல்லட் ரயில் விடுகிறார்கள் உற்றுப் பார் உவர் நீரை நன்நீராக மாற்றிக் குடிக்கக் கொடுக்கும் திட்டம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது நம் மாநிலத்திலேயே. ஒன்றுமில்லாவிட்டாலும் அள்ளிக்கொள்ள எப்போதும் உள்ளது உப்பும் மீன்களும் முத்தும். எடுக்கப் போனால் எதையாவது கொடுப்பது...
சாலைக் கவிதை
எல்லா சாலைகளிலும் ஏதோ பணி நடக்கிறது எல்லா சாலைகளையும் ஒருவழி ஆக்கியிருக்கிறார்கள் எல்லா சாலைகளிலும் பாதி தொலைவில் பாதை மாற்றி விடுகிறார்கள் போக வேண்டிய இடத்துக்கு நேரெதிர் திசையில் நெடுந்தூரம் சுற்றிக்காட்டிவிட்டு எல்லா சாலைகளும் எங்காவது கொண்டு சேர்த்துவிடுகின்றன முடிவற்ற பெருஞ்சுவராக நீளும் நீலத் தகடுகள் எல்லா சாலைகளையும் இரண்டாகப் பிளக்கின்றன தகடுக்கு மறுபுறம் ஆட்கள் வேலை செய்கிறார்கள்...
பொதுவெளி
பொதுவெளியில் அரசியல் பேசாதே.
பொதுவெளியில் கவிதை எழுதாதே.
பொதுவெளியில் இலக்கியம் எடுபடாது.
பொதுவெளியில் தனிப்பட்ட தகவல்கள் கூடாது.
பொதுவெளியில் சண்டை போடாதே.
பொதுவில் எது சார்ந்தும் கருத்து சொல்லாதே.
பொதுவெளியில் அமைதியாக இரு.
பொதுவெளியில் நல்லவனாக மட்டும் இரு.
நீ செத்தால் RIP போட
பொதுவெளியின் புனிதத்தைப்
பேணிக்காப்பது உன் கடமை.
மணிப்பூர் கலவரம் கிண்டில் பதிப்பு
மணிப்பூர் கலவரம்: இனப்பகை அரசியலின் இருண்ட சரித்திரம் நூலின் கிண்டில் பதிப்பு தயார். மார்ச் முதல் தேதி வெளியாகிறது. இன்று முதல் இந்நூலின் மின் பதிப்புக்கான முன்பதிவு தொடங்குகிறது. மின்நூலின் விலை ரூ. 225. முன்பதிவுச் சலுகை விலை ரூ. 150 முன்பதிவுச் சலுகை விலை பிப்ரவரி 28 நள்ளிரவு வரை இருக்கும். நூல் அதிகாரபூர்வமாக வெளியானதும் விலை 225க்குச் சென்றுவிடும். முன்பதிவு செய்வோர் நூலைப் பெற தனியே ஏதும்...
பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு 2024
பிப்ரவரி 8-9-10 தேதிகளில் சென்னையில் நடைபெறவிருக்கும் பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாட்டில் கலந்துகொள்கிறேன். டிஜிட்டல் வாசிப்பு: நேற்று இன்று நாளை என்ற தலைப்பில் பேசுகிறேன். கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது முன்னின்று நடத்திய செம்மொழி மாநாட்டுக்குப் பிறகு நான் கலந்துகொள்ளும் அரசு விழா இதுதான். ஆய்வுக் கட்டுரைகள், குழு விவாதங்கள், வல்லுநர் உரைகள், நிரலாக்கப் போட்டிகள், கண்காட்சி என மூன்று...
விமலாதித்த மாமல்லன் புத்தகங்கள் – மாணவர் சலுகை அறிவிப்பு
இலக்கியத்தில் ஆர்வமுள்ள / புத்தகம் வாங்க வசதியற்ற மாணவ மாணவியர் (அல்லது அவர்கள் சார்பாக அவர்தம் பெற்றோர்) மாமல்லனை வாட்சப்பில் தொடர்புகொண்டால் போதும்.
ஃபேஸ்புக்: ஓர் அறிவிப்பு
இந்தக் குறிப்பை ஃபேஸ்புக்கில் எழுதினேன். இங்கே சேகரித்து வைக்கிறேன். அவ்வளவுதான். கடந்த மூன்று மாதங்களாக இங்கே நான் எழுதும் எந்த ஒரு குறிப்பும் ஐம்பது பேருக்கு மேலே சென்று சேராமல் இருந்தது. எப்போது நான் என்ன எழுதினாலும் – அது நட்ட நடு ராத்திரியாகவே இருந்தாலும் முதல் காரியமாக எழுந்து உட்கார்ந்து படித்து, லைக் போட்டுவிட்டுப் பிறகு இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கத் தொடங்கும் நண்பர்களுக்குக்...
அன்னதானம்
கோயில்கள், மடங்கள் போன்ற இடங்களின் ஆகப் பெரிய பயனாக நான் கருதுவது, அன்னதானம். தமிழ்நாட்டு அரசு பொறுப்பேற்று, அறநிலையத்துறையின் மேற்பார்வையில் இயங்கும் கோயில்களில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்ததற்கு முன்பிருந்தே அவ்வறப்பணி பல கோயில்களில் நடந்து வந்தன. தினமும் இல்லாவிட்டாலும் விசேட தினங்களில் அன்னதானம் இருக்கும். பசித்திருப்பவர்கள் எங்கெங்கிருந்தோ வந்து உணவருந்திப் புதிதாகப் பிறந்து செல்வதைக் காண...
பைந்நாகப் பாய்
ஒரு செங்கல் அளவு பெரிதான நோக்கியா, அதில் பாதி அளவுள்ள ஒரு விண்டோஸ் போனுக்குப் பிறகு ஐபோன் 3ஜி வாங்கினேன். கடந்த பதிமூன்று ஆண்டு காலமாகப் பல்வேறு ஐபோன்களைத்தான் பயன்படுத்தி வந்திருக்கிறேன். அதன் எளிமை, சொகுசு, நூதனங்களின் ரசிகனாக இருந்திருக்கிறேன். இன்றுவரை அதில் மாற்றமில்லை என்றாலும் இன்று ஐபோனுக்கு விடை கொடுத்துவிட்டு ஆண்டிராய்ட் போனுக்கு மாறினேன். காரணம் இது: என் ஐபோன் 14 இல் பேட்டரி பிரச்னை...