வலை எழுத்து

கபடவேடதாரி – இந்துமதி என். சதீஷ் மதிப்புரை (அத்தியாயம் 8)

தலைப்பைப் படித்தவுடன் இதில் ஏதோ விஷமத்தனம் இருக்கிறது என்பது பிடிபட, படிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. தனது நிழலைப்பிரிந்த கோவிந்தசாமி உணவைத் தேடி அலையும் பொழுது ,நீல நகரத்தின் மொழி புரியாமல், தனக்கு அந்நியமான நீல நகரத்தில் இந்தியை தேசிய மொழியாக்கிட முடியவில்லையே எனத் தவிக்கும் இடத்தில் .. அவன் முட்டாள் மட்டுமல்ல விவகாரமானவனும் கூட என்பது தெளிவாகிறது. இதுவரை புரியாமல் இருந்த பல விஷயங்கள் இந்த...

கபடவேடதாரி – இந்துமதி என். சதீஷ் மதிப்புரை (அத்தியாயம் 7)

நீல நகரில் சூனியனும், கோவிந்தசாமியின் நிழலும் முற்றிலும் நீல நகர வாசி யாக மாறியிருந்த சாகரிகாவை கண்டதும் வியக்கின்றனர் . சாகரிகாவின் உருவத்தில் ஏற்பட்டிருந்த மாற்றம் குறித்தும், தனக்கு அவள் மேல் இருக்கும் காதல் குறித்தும் அவளிடத்தில் புலம்பும் கோவிந்தசாமியின் நிழல் சாகரிகாவின் உருவத்தில் ஏற்பட்டிருந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கிறது. சாகரிகா சற்றும் அலட்டிக்கொள்ளாமல் தனக்கு அவன் மேல்...

கபடவேடதாரி – சீனிவாச ராகவன் மதிப்புரை (அத்தியாயம் 10)

அதிசயம் தான். ஆனால் சொல்லாமலிருக்க இயலவில்லை. உண்மையாகவே கோவிந்தசாமியின் நிழல், அவனை விட புத்திசாலித்தனமாகவும் கொஞ்சம் தன்மானம் உள்ளதாகவும் இருக்கிறது. இல்லையேல் சாகரிகா கோவிந்தசாமியுடன் வாழமாட்டாள் என்பதையும் இனி அவளை அம்பலப்படுத்துவதே சிறப்பு என்பதையும் உணர்ந்திருக்குமா?! ஆனால் சூனியன் சில Protocol வைத்திருக்கிறானே. நிழலின் நிஜத்தை உணர மீண்டும் அவன் கபாலத்தை மீண்டும் ஊடுருவ வேண்டும்...

கபடவேடதாரி – தர்ஷனா கார்த்திகேயன் மதிப்புரை (அத்தியாயம் 10)

Fake ID, கபட வேடதாரி இரண்டுக்கும் இடையில் இந்த நாவலுக்கு வேறு ஒரு பெயர் வைக்க எண்ணி நண்பர்களுடன் கலந்தாலோசித்ததைப்பற்றி பாரா முன்பொரு முறை எழுதி இருந்தார். என்னால் அப்போது இரண்டு பெயர்களை அனுமானிக்க முடிந்த போதிலும் அவற்றுள் ஒன்றை உறுதிப்படுத்த முடியவில்லை. ஒன்பது அத்தியாயங்கள் வாசிக்கும் வரை சூனியன் தான் கபட வேடதாரி ஆக இருக்குமோ என்றும் அவருக்கும் நான் யோசித்து வைத்திருந்தவருக்கும் எந்தத்...

கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 10)

முதல் அத்தியாயம் தொடங்கும்போதே சூனியனின் ஃப்ளாஷ்பேக்கை தெரிந்து கொள்ளவேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டுவிட்டது. அதை பத்தாவது அத்தியாயத்தில்தான் சொல்லவேண்டும் என முடிவுசெய்து வைத்திருந்தார் போலிருக்கிறது. சூனியனுக்கு ஒரு டாஸ்க். அந்த டாஸ்க் கடவுள் மற்றும் மனித குலத்துக்கு எதிரானது. நமக்கு மிகவும் தெரிந்த ஒரு இடத்தில் அந்த டாஸ்க் முடிக்கப்பட திட்டமிடப்படுகிறது. அந்த டாஸ்க்கைப் பற்றி அவன் சொல்லச் சொல்ல அதைப்...

கபடவேடதாரி – ஷாலினி கணேசன் மதிப்புரை (அத்தியாயம் 9)

கபடவேடதாரியில் நீலநகரம் ஒன்று உருவானதிலிருந்தே சிரிப்புக்கு பஞ்சமில்லை. குறிப்பாக இந்த அத்தியாயத்தின் தொடக்கத்திலிருந்து முடிவு வரை வாசிப்பவர்களை சலிப்படையாது சிரிக்க வைத்தே கூட்டி செல்கிறார் பாரா. அதிலும் அந்த கிரைப் வாட்டர் அல்டிமேட். கோவிந்தசாமியின் மடத்தனத்தை ஒவ்வொரு அத்தியாயம் நகர நகர மிகுதியாக புரிந்துக் கொள்ளமுடிகிறது. இப்பிடி பட்டவனை சாகரிகா வெறுக்காமல் என்ன செய்வாள். அவள் அந்த அளவிற்கு...

கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 9)

தன் எல்லைக்குள் ஆக்கிரமிப்பு செய்த பா.ரா.வை பன்னாடை (அட….நம்ம ஊரு வசை பாசை) என்று சூனியன் வசைபாடுவதில் அத்தியாயம் ஆரம்பமாகிறது. பா.ரா.வின் திட்டம் இதுவாகத் தான் இருக்கும் என அறுதியிடும் சூனியன் அவரை தங்கள் குல எதிரியாகப் பார்ப்பதோடு. கோரக்கரின் பக்தன் என்று அவரை அடையாளப்படுத்துகிறான். கோவிந்தசாமிக்கு உதவுவதில் இருந்து சூனியன் பின்வாங்க மாட்டான் என்றே தோன்றுகிறது. சாகரிகா மீதும் அவனுக்கு நல்ல...

கபடவேடதாரி – இந்துமதி என். சதீஷ் மதிப்புரை (அத்தியாயம் 6)

பூமியில் இருந்து மாறுபட்டு இருக்கும் நீல நகரம் மற்றும் சூனியர்களின் உலகம் இரண்டையும் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் ஒன்றுக்கொன்று தொடர்பின்றி வருணித்திருப்பது படிப்பவரை பிரமிக்க வைக்கிறது . சூனியர்களின் உலகில் இருக்கும் வீடுகளின் கட்டமைப்பை எடுத்துச் சொல்லியிருக்கும் விதத்தில் ஆசிரியரின் கற்பனை திறன் ஆச்சரியப்படுத்துகிறது. படிக்கும் பொழுது சிறு குழந்தையாய் நம்மை வாய் பிளக்கச்செய்கிறது. நீல...

கபடவேடதாரி – சிவகுமாரன் ராமலிங்கம் மதிப்புரை (அத்தியாயம் 1)

‘நியாயத்தீர்ப்பின்படி நான் குற்றவாளி ஆக்கப்பட்டேன்’ என்ற வார்த்தைகளில், ஏனோ பட்டாம்பூச்சி நாவலின் வரிகளில் மனம் ஆழ்ந்து, ஆற்றிலொரு கால் சேற்றிலொரு காலாக பயணிக்கத் தொடங்கியது, கதையுடனான என் உள்மனச் சாத்தான். ஒவ்வொரு மாட்டிக்கொள்ளும் பிரச்சினையிலும் என் மனம் பயணிக்கும் விதம்தான் அந்த விசாரணை போகும் விதமும். யூதாஸை என் மானசீக மனமாக அல்லது என் மூதாதையாக கற்பனை செய்தால், கதையை காமிக்ஸாக...

கபடவேடதாரி – ஷாலினி கணேசன் மதிப்புரை (அத்தியாயம் 8)

பாரா அவர்கள் அழுத்தமான நல்ல அரசியல் பேசியிருக்கிறார் இந்த அத்தியாயத்தில். சங்களின் பல அம்சங்களையும் கோவிந்தசாமியின் கதாப்பாத்திரத்தில் நேர்த்தியாக அமர வைத்திருப்பது தெள்ளத்தெளிவாக இந்த அத்தியாயத்தில் வெட்ட வெளிச்சம் ஆகிறது. இந்திய தலைநகரிலிருந்து புறப்பட்டு வந்து மாநாட்டில் பேசிய அந்த தலைவரின் ஹிந்தி மொழி புரியாத போதிலும், கோவிந்தசாமி உணர்ச்சிவசப்பட்ட இடம் மடத்தனமாக இருந்தது. அதுவே அவனை முழுமையாக...

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!