Categoryஅறிவிப்பு

உலகத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக

வாசக நண்பர்களுக்குத் தமிழ் புத்தாண்டு தின அட்வான்ஸ் வாழ்த்துகள். நாளை மதியம் 1.30 மணிக்கு ஜெயா டிவியில் சிறப்புத் திரைப்படமாக நான் வசனம் எழுதிய தம்பி வெட்டோத்தி சுந்தரம் ஒளிபரப்பாகிறது. Ofcourse, உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக. கரண், அஞ்சலி, பாலா சிங், வெண்ணிற ஆடை மூர்த்தி போன்றோர் நடித்திருக்கிறார்கள். பாடல்கள் வைரமுத்து, இசை வித்யாசாகர். இயக்கம் வி.சி. வடிவுடையான். இப்படம் வெளியானபோது...

ரைட்டர்தமிழ்பாராபேப்பர்டாட்நெட்காம்

சில தொழில்நுட்பக் காரணங்களால் இன்று இத்தளம் செயல்படுவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன. தளம் இயங்காது போயிருந்தால்கூடப் பரவாயில்லை. தமிழ்பேப்பர் தளத்துக்குப் போக முயற்சி செய்தவர்களுக்கு உரல் இங்கே ஃபார்வட் ஆகியிருக்கிறது. இயங்காத இத்தளத்துக்கு அந்தத் தளத்தின் உரல் எப்படி அழைத்துச் செல்கிறது, ஏன் அழைத்துச் செல்கிறது என்று கேட்டு காலை முதல் ஏகப்பட்ட விசாரிப்புகள். ரைட்டர்பாராடாட்காம்...

மீள்வணக்கம்

நண்பர்களுக்கு வணக்கம். கொஞ்சகாலமாக இந்தப் பக்கம் வர இயலாமல் போனதற்கு என் பணியின் தன்மை காரணம். நேரத்தைத் துரத்தவேண்டிய நிர்ப்பந்தம். இணையத்திலிருந்துதான் விலகியிருந்தேனே தவிர, எழுத்திலிருந்தல்ல. இனி அவ்வப்போது வர இயலும் என்று நினைக்கிறேன். அதே வேலைப்பளுதான்; ஆயினும் இனி சற்றே ஒழுங்கு கடைப்பிடிக்க முடியுமென்று நினைக்கிறேன். பழகிவிட்டால் சிரமமானவை எல்லாம்கூட  சிரமமென்பது மறந்துவிடுகிறது.

அதிமுக்கிய அறிவிப்பு

என்னுடைய புதிய புத்தகம் ‘குற்றியலுலகம்’ இன்று அச்சாகி வந்துவிட்டது. சென்னை புத்தகக் கண்காட்சியில் மதி நிலையம் அரங்கில் (இடப்புறமிருந்து முதல் வரிசை – கடை எண் 18-19) இது விற்பனைக்குக் கிடைக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் நான் ட்விட்டரில் எழுதியவற்றுள் எனக்குப் பிடித்த ட்வீட்களை இதில் தொகுத்திருக்கிறேன். இனி இது ஒரு மாதத்தில் ஒன்பது லட்சம் பிரதிகள் விற்க வேண்டிய பொறுப்பு வாசகர்களாகிய உங்களைச்...

பதிலளிக்கும் நேரம்

கிழக்கிலிருந்து விலகிய பிறகு நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று கேட்டு அநேகமாக தினசரி இரண்டு மின்னஞ்சல்களாவது வருகின்றன. இணையத்தில் ஏன் முன்போல் எழுதுவதில்லை என்று விசாரித்தும்.
இது பதிலளிக்கும் நேரம்.

ஓர் அறிவிப்பு

சில தவிர்க்க முடியாத காரணங்களால் / வேலைகளால் இணையத்திலிருந்து சில தினங்கள் விடுமுறை எடுத்துக்கொள்கிறேன். இந்தத் தளம், ட்விட்டர், ஃபேஸ்புக் என நான் இயங்கும் அல்லது என் இருப்பைச் சொல்லும் இடங்கள் அனைத்துக்கும் இது பொருந்தும். அதிகபட்சம் ஒரு மண்டல காலம். குறைந்தபட்சம் இருபது நாள்கள்.
பிறகு சந்திப்போம்.

பாரா-ட்டு

ஆண்டுதோறும் நெய்வேலி புத்தகக் கண்காட்சியில், சிறந்த எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுத்து, பாராட்டி விருதளித்து கௌரவிப்பது வழக்கம். இந்த ஆண்டு அந்தச் சிறப்பை எனக்கு அளித்திருக்கிறார்கள். ஜூலை 8, 2011 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு கண்காட்சி வளாகத்தில் உள்ள லிக்னைட் ஹாலில் இந்தப் பாராட்டு விழா நடைபெறவிருக்கிறது. [ஜூலை மாதம் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை நெய்வேலி புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.]...

சில சொகுசு ஏற்பாடுகள்

வாசகர்களின் வசதி அல்லது இம்சைக்காக இந்தத் தளத்தில் சில புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நீங்களே சற்று அப்படி இப்படிக் கண்ணை நகர்த்தினால் தென்பட்டுவிடும் என்றாலும் எடுத்துச் சொல்லவேண்டியது என் கடமை.

ஓர் [அபாய] அறிவிப்பு

நாட்டில் இன்னும் கதை படிக்கிற நல்லவர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள் என்று சரியாகத் தெரியவில்லை. தமிழ் சமூகம் தனது வாசிப்பு விருப்பத்தைக் கதையல்லாத எழுத்துப் பக்கம் திருப்பிக்கொண்டு பல காலமாகிவிட்டது என்பது என் கருத்து. இதைப் பலமுறை இந்தப் பக்கங்களில் குறிப்பிட்டும் இருக்கிறேன். புனைவு என்பது இப்போது பெரிய மற்றும் சிறிய திரைகளில் மட்டுமே வாழ்ந்துகொண்டிருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கிற...

மொட்டை மாடியில் ஞாநி

மார்ச் 31ம் தேதி – வியாழக்கிழமை அன்று மாலை 6.30க்கு மணி கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் ஞாநி பேசுகிறார். இன்றைய கூட்டணி நிலவரமும் அரசியல் நிலவரமும் தேர்தலைப் புறக்கணிப்பது சரியா? ஓ போடுவது எப்படி? வெளி மாநிலங்களில், வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் அங்கிருந்தே வாக்களிக்க முடியுமா? தேர்தலில் மீடியாவின் இன்றைய பங்கு என்ன? மேலும் பல விஷயங்கள் குறித்து ஞாநி உரையாடுகிறார். பின்னர் அவருடன்...

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!