பத்திரிகைகளுக்கு எழுதி வெகுகாலம் ஆகிவிட்டது. அதுவும் குழந்தைகளுக்குக் கடைசியாக எழுதி ஐந்தாறு வருடங்கள் தாண்டியிருக்கும் என்று நினைக்கிறேன். கடைசியாக கோகுலத்தில்தான் ஒரு தொடர் எழுதினேன். புதையல் தீவு.
பெரிய இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் கோகுலத்தில் ஒரு சிறுவர் தொடர்கதை ஆரம்பிக்கிறேன். கோன் ஐஸ் பூதம் குறித்து இம்மாத கோகுலத்தில் வெளிவந்திருக்கும் அறிவிப்பு கீழே. அடுத்த இதழில் கதை ஆரம்பமாகிறது.
மயான ராசி
O பா. ஜகந்நாதன்
எனக்கு இந்த வீடு ,பிளாட்’டுன்னு வாங்க அலையறது சுத்தமா பிடிக்காது சார். ஆனா,ரொம்ப நாளாவே ,ஒரு வீடோ ,மனையோ வாங்கணும்கறது என் பொண்டாட்டியோட ஆசை. “எந்த ஏரியால யார் பிளாட் போட்ருக்காங்க? என்ன ரேட்?யாரு பில்டர்?”….. எல்லாம் அவளுக்கு அத்துப்படி! அவள் ஒரு நடமாடும் “சுலேகா.காம்”.
பாபர் நாமா
முகலாய மன்னர் பாபரின் நினைவுத் தொகுப்பு நூலான பாபர் நாமா தமிழில் வெளியாகியிருக்கிறது. இதன் ஆங்கில வழித் தமிழாக்கத்தைச் செய்திருப்பவர் என்னுடைய தந்தை.
கிலி மார்க்கெட்டிங்
ஜகந்நாதன் இன்று எழுதி அனுப்பியது: காலை மணி பத்து. ஆபீஸ் பரபரப்பில் நான் . என் செல்போன் சிணுங்கியது. “குட் மார்னிங் சார் “… என்று ஒரு குயில் என் பெயரை சொல்லி செல் போனில் குழைந்தது. எஸ்…இட்ஸ் மீ ..ஸ்பீக்கிங் … என்றேன் பெருமையாக. “சார், We are calling from UCICI Brudancial Insurance company சார்…” ச்சே! காலங்காத்தாலேயே இன்சுரன்சா? இறைவா, இந்த துயரத்திலேந்து மீளரதுக்கு ஏதாவது...
Tata Photon என்னும் தண்ட கருமாந்திரம்
சென்ற மாதம் டாட்டா போட்டான் என்னும் டேட்டா கார்ட் ஒன்று வாங்கினேன். மொபைலில் தினமும் மூன்று வேளை வரும் விளம்பர எஸ்.எம்.எஸ் நம்பர் ஒன்றை அழைத்து எனது தேவையைச் சொல்லி, எனக்கொரு இண்டர்நெட் குச்சி தேவை என்று தெரிவித்தேன்.
கொளுத்திப் போட்ட காதை
வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள போலிஸ் ஸ்டேஷன் மாடியில் நேற்று மாலை தீப்பிடித்துக்கொண்டது. மொட்டை மாடியில் ஓலை வேய்ந்திருந்தபடியால் தீ மிக வேகமாகப் பரவி இரண்டு ஃபயர் எஞ்சின் வண்டிகள் வந்தபிறகுதான் ஓய்ந்தது.
மூணு
ஓடியே விட்டது ஒரு வருடம். சென்ற ஆண்டு ஜூலையில்தான் இனி முழுநேரமும் எழுத்து என்று முடிவு செய்தேன். குடும்பத்தினரின் அச்சம், நண்பர்களின் கவலை, நண்பர்கள்போல் இருந்தவர்களின் நமுட்டுச் சிரிப்பு அனைத்தையும் பதில் கருத்தின்றி வாங்கி வைத்துக்கொண்டு என் முடிவு இதுதான் என்று என் மனைவியிடம் சொன்னேன். சரி என்பதற்கு மேல் அவள் வேறேதும் சொல்லவில்லை. நான் சினிமாவில் கவனம் செலுத்துவேன் என்று அவள் நினைத்தாள்...
ஓ, மரியா!
ட்விட்டரில் திடீரென்று டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவின் பெயரைக் குறிப்பிட விரும்பி, மறந்துபோய்த் தொலைந்தேன். எப்போதோ படித்த அவரது பேட்டி ஒன்றுமட்டும் நினைவில் இருந்தது. அதை எடுத்து வைத்திருந்த ஞாபகமும். அதைத் தேடிப்பிடித்து மீண்டும் வாசித்தபோது, மரியாவைக் குறித்து ஒரு கட்டுரையும் எழுதியிருப்பது நினைவுக்கு வந்தது. அது இது. 2008 அல்லது 09ல் எழுதப்பட்ட கட்டுரை என்று நினைக்கிறேன். இப்போது எதற்கு...