என்னுடைய புத்தகம் ஒன்றை முதல் முறையாக நானே நேரடியாக கிண்டிலில் வெளியிட்டிருக்கிறேன். 143 – குறுவரிக் களம். தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும். 2008லிருந்து நான் ட்விட்டரில் எழுதியவற்றில் இருந்து தேர்ந்தெடுத்த குறுவரிகளின் தொகுப்பு இந்நூல். குற்றியலுலகம், சந்து வெளி நாகரிகம், இங்க்கி பிங்க்கி பாங்க்கி ஆகிய மூன்று அச்சு நூல்களில் வெளியானவற்றின் தொகுப்பு. கிண்டில் டைரக்ட் பப்ளிஷிங்கின்...
ருசியியல் – 22
அசோகமித்திரனின் ‘ஒற்றன்’ நாவலில் ஓர் அத்தியாயத்தில் வரும் கதாபாத்திரம் ரெஃப்ரிஜிரேட்டரில் ஒரு பூண்டு டப்பா வைத்திருப்பான். மொத்தக் குளிர்சாதனப் பெட்டியையும் அதன் நெடி நாறடித்துக்கொண்டிருந்தாலும் தன்னிடம் பூண்டு இல்லவே இல்லை என்று சாதிக்கப் பார்ப்பான். கையும் பூண்டுமாக ஒரு கட்டத்தில் பிடிபடும்போது ஆவேசமடைந்து அந்தப் பூண்டு ஊறுகாய் டப்பாவைத் திறந்து சிங்க்கில் கொட்டிக் கழுவிவிடுவான். குளிர் சாதனப்...
சன்னியாச தருமம்
நண்பர்கள் ஜடாயு, சொக்கன் இடம் சுட்ட, மாயவரத்தான் உதவியால் அமெரிக்காவிலிருந்து தருவிக்கப்பட்ட யாதவ பிரகாசரின் ‘யதி தர்ம சமுச்சயம்’ படிக்க ஆரம்பித்தேன். State University of New York Press வெளியீடாக Rules and Regulations of Brahmanical Asceticism என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது. பூர்வாசிரமத்தில் ராமானுஜரின் குருவாக இருந்து பின்னர் சீடரானவர் யாதவ பிரகாசர். ஏகதண்ட சன்னியாசியாக இருந்து பின் திரிதண்ட...
கொனஷ்டை
ஃபேஸ்புக்கில் எனது இந்தக் குறிப்புக்கு நண்பர் ராஷித் அகமது எழுதிய கமெண்ட் கீழே உள்ளது. எழுதும்போது ஒருவரால் சிரித்தபடியோ, குறைந்தது புன்னகையுடனோ எழுத முடியுமா? அநேகமாக முடியாது என்றே நினைக்கிறேன். நான் எப்படி எழுதுகிறேன் என்று சொல்லுகிறேன். எழுதுவதையும் யோசிப்பதையும் நான் ஒன்றாகச் செய்வதில்லை. முழுதும் யோசித்து முடிக்காமல் எழுத அமரமாட்டேன். உட்கார்ந்துவிட்டால் நடுவே நிறுத்தி யோசிக்கிற வழக்கம்...
ருசியியல் – 21
இந்த வருஷத்து வெயில் ஒரு வழி பண்ணிவிடும் போலிருக்கிறது. வெளியே தலைகாட்ட முடியவில்லை. யாரையாவது எதற்காவது பார்த்தே தீரவேண்டுமென்றால் பிரம்ம முகூர்த்தத்தில் சந்திக்கலாமா என்று கேட்க ஆரம்பித்திருக்கிறேன். நடு நிசி நாயாகக்கூட இருந்துவிட்டுப் போய்விடலாம். நடுப்பகல் வேளைகளில் வெளியே போக நான் தயாரில்லை. இந்த வெயில் காலங்களின் பெரிய பிரச்னை, வேலை கெட்டுவிடும் என்பது. நூறு சதம் ஒழுங்கான காரியம் ஒன்றை...
சேட்டுக் காகங்கள்
சனிக்கிழமைகளில் மட்டும்தான் இந்தக் காக்கைகள் வருகின்றன என்று அம்மா சொன்னாள். வாரம்தோறும் அலாரம் வைத்தாற்போலச் சரியாகக் காலை எட்டு மணிக்கு அவை வீட்டு வாசலில் ஆஜராகிவிடுகின்றன. தயாராக, தடிதடியாக நாலு சப்பாத்திகளைச் சுட்டு எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்துவிடுகிறாள் அம்மா. பெரிய பெரிய துண்டுகளாகப் பிய்த்துப் போடப் போட ஒவ்வொரு காக்கையும் வரிசையில் வந்து ஒரு துண்டு எடுத்துக்கொண்டு போகிறது. எண்ணி நாலு...
தூவிய விதைகள் – அரவிந்தன் நீலகண்டன்
ஸ்ரீ ராமானுஜர், பாரதத்தின் ஆன்மிக – பண்பாட்டு நிலப் பரப்பில் ஒரு மாபெரும் சிகரம். அதன் முடியை நம் போன்ற எளியோரால் எண்ணியும் பார்க்க முடியாது. அப்படி எண்ணிப் பார்க்கும்தோறும் அது மாபெரும் வியப்பையும் அவர் அடிதொழும் பக்தி உணர்வையும் மட்டுமே உருவாக்கும். அவர் நம் தட்சிண பாரதத்தைச் சார்ந்தவர். அதுவும் தமிழ் மண்ணைச் சார்ந்தவர் என்பது தமிழர்களாகிய நமக்கு மிகப் பெரிய பாக்கியம். ஆனால்...
பொலிக பொலிக முன்பதிவு – ஹரன் பிரசன்னா
பா.ராகவன் தினமலரில் தொடராக எழுதி பரவலான கவனிப்பைப் பெற்ற பொலிக பொலிக தொடர் தற்போது நூலாக வெளிவருகிறது. தினமும் பாரா எழுத எழுத அச்சுக்குச் செல்லும் முன்பே படித்த வெகு சிலருள் நானும் ஒருவன். இதை எழுதும் நாள்களில் பாரா ஒருவித மோன நிலையில் இருந்தார் என்பதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்தேன். சில நாள்களில் தொடர்ச்சியாக பத்து அத்தியாயங்கள் எழுதுவார். சில நாள் ஒன்றும் ஓடாது. திடீரென்று பித்துப் பிடித்தது...
மிக விரைவில்…
மிஞ்சும் சொற்கள்
பொலிக பொலிக என்பது நம்மாழ்வாரின் மந்திரச் சொல். கி.பி. 1017ல் பிறக்கப் போகிற ராமானுஜருக்குக் கலி யுகம் தொடங்கியபோதே கட்டியம் கூறியவர் அவர். ராமானுஜர் பிறந்து ஆயிரம் ஆண்டுகள் இன்று நிறைவடைகின்றன. இன்றும் பொலிந்துகொண்டிருக்கிறது அந்த ஞானப்பெருஞ்சுடர். கடந்த நூற்றியெட்டு தினங்களாக இந்தத் தொடரின்மூலம் ராமானுஜரின் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்களைக் கொண்டு அவரை நெருங்கிப் புரிந்துகொள்ள ஒரு சிறு...