வலை எழுத்து

எனக்கு ப்ரூஃப் ரீடர் தேவையில்லை

இன்றைய பதிப்புத் துறையில் நான் காணும் மிகப் பெரிய பிரச்னை ப்ரூஃப் ரீடிங். அந்தப் பணி, அதன் மேன்மையை முற்றிலும் இழந்து, சிறுமைப்பட்டுக்கொண்டிருக்கிறது. இது குறித்த எந்தக் கவலையும் இல்லாமல் ஆண்டுக்குப் பலநூறு தமிழ் நூல்கள் வெளியானவண்ணம் உள்ளன. மக்களும் வாங்கிப் படிக்கிறார்கள். அது குறித்துப் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். சில புத்தகங்கள் விருது பெருகின்றன. சில விற்பனையாகின்றன. நூலக ஆணை இதர...

பெண்ணிய விரோதக் கட்டுரை எழுதுவது எப்படி?

பொதுவாக ஆண்களுக்கு இது எளிதே என்றாலும் எழுதுவது என்னும் தொழிற்படும்போது அவர்கள் சிறிது எச்சரிக்கையாகிவிடுவார்கள். பொது புத்தி என்று பொதுவில் முன்வைக்கப்படும், காதல் சந்தியாவின் மூக்கு நிகர்த்த குற்றச்சாட்டுக்கு அஞ்சி, தம்மையொரு நடுநிலைவாதியாகக் காட்டிக்கொள்ளும் ஆயத்த உணர்வு ஆரம்பத்தில் ஏற்படும். ஆனால் அது தேவையற்றது. எப்படி என்பதைப் படிப்படியாகப் பார்க்கலாம். கட்டுரையின் முதல் பத்தியில் பெண்களின்...

எங்கு செல்லும் இந்த யுத்தம்?

இருபது நிமிடங்களில் ஐயாயிரம் ஏவுகணைகள் என்பதைக் கண்ணால் அல்ல; மனக்கண்ணால் கூட முழுதாகப் பார்த்து முடிக்க முடியாது. அக்டோபர் ஏழாம் தேதி இஸ்ரேலின் காஸா பகுதியில் இருந்து (அது ஹமாஸின் அதிகார வரம்புக்கு உட்பட்ட, முஸ்லிம்களின் பிராந்தியம்.) சீறிப் பாய்ந்த இந்த ஏவுகணைகள் இஸ்ரேலிய ராணுவத் துருப்புகளைக் குறி வைத்து அனுப்பப்பட்டதாகப் பொதுவில் சொல்லப்பட்டாலும் இந்த நூற்றாண்டு காலப் பகையின் தற்கால சாட்சியாக...

மணிப்பூர் கலவரம்: ஒரு பார்வை – சுனிதா கணேஷ்குமார்

சமீபத்தில் மணிப்பூரில் நடந்த இனக் கலவரத்தைப் பற்றிய ஒரு தெளிவான பார்வையை வாசகர்கள் புரிந்து கொள்வதற்காகப் படைக்கப்பட்ட, மணிப்பூரின் வரலாற்று படைப்பாகவே இருக்கிறது இந்த நூல்.. இனக்கலவரம் என்ற பெயரின் பின்னால் நடக்கும் அரசியலின் இருண்ட பக்கங்களை மிகத் தெளிவாக விளக்குகிறது.. மணிப்பூர் மாநிலத்தில் மலைத்தொடர்களில் வசிக்கும் பழங்குடி இனமக்கள் குக்கிகள், நாகாக்கள் மற்றும் சில பழங்குடி இனமக்கள்...

மாலனின் ‘தோழி’ நாவல்

வாழ்வில் நாம் மிகவும் எதிர்பார்த்து ஏமாந்த சில சந்தர்ப்பங்கள் இருக்கும். எவ்வளவு காலமானாலும் அது மறக்காது. முதலில் ஏமாந்து, பிறகு அது கிடைத்துவிட்டாலுமே ஏமாந்த தருணம் நினைவில் எங்காவது உட்கார்ந்திருக்கும். எனக்கு அப்படிச் சில உண்டு. சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெரிய பத்திரிகையில் விளம்பரம் ஒன்று வந்தது. ஒரு தொடருக்கான விளம்பரம். மாலன் எழுதுகிறார் என்றிருந்தது. இரண்டே சொற்களைக்...

போரும் பரபரப்பும்

ஹமாஸ்-இஸ்ரேல் போர் தொடங்கியதில் இருந்து குறைந்தது இருபது யூ ட்யூப் சானல்களில் இருந்தும், அநேகமாக அனைத்து செய்தி டிவிக்களில் இருந்தும் அது குறித்துப் பேசுவதற்கு அழைத்தார்கள். தனிப் பேட்டி, வல்லுநர்களுடன் கலந்து பேசுவது, விவாதங்கள் எனப் பலவிதமான நிகழ்ச்சி அழைப்புகள். ஒரு டிவிக்காரர்கள், போர் முடியும்வரை தினசரி பத்து நிமிடங்கள் அவர்களுடைய காலை நிகழ்ச்சியில் ஓரங்கமாகப் போரினைக் குறித்துப் பேசச்...

விலகியிருத்தல்

சில தினங்களாக நண்பர்கள் பலர் அடிக்கடி நலம் விசாரிக்கிறார்கள். உடம்புக்கு ஒண்ணும் இல்லியே? ஏன், நல்லாத்தான் இருக்கேன். ஃபேஸ்புக்ல காணமேன்னு கேட்டேன். உண்மையில், மணிப்பூர் கலவரம் புத்தகத்துக்கான எழுத்துப் பணி தொடங்கியதில் இருந்து என் அன்றாட ஒழுங்கு அல்லது ஒழுங்கின்மை முற்றிலும் மாறிவிட்டது.  முன்போல இப்போதெல்லாம் இரவு நெடுநேரம் கண் விழித்து எழுத முடிவதில்லை என்பதால் பகலிலும் சிறிது நேரம் வேலை செய்ய...

தீபாவளி மலர்கள்

இந்த ஆண்டு விகடன், லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர்களுக்கு எழுதியிருக்கிறேன். விகடனில் ஒரு நகைச்சுவைக் கட்டுரை. லேடீஸ் ஸ்பெஷலில் ஒரு சிறுகதை. தொடர்ந்து அரசியலே எழுதிக்கொண்டிருப்பதால் சிறிது மூச்சுவிட்டுக் கொள்ளவும் வேண்டுமல்லவா? ஒரு காலத்தில் தீபாவளி மலரில் எழுதுவது என்பது தீபாவளியினும் பெரிய பண்டிகையாகக் கொண்டாடப்படும். மலரில் ஒரு துணுக்கு வெளியானால்கூட இனிப்பு அளித்துக் கொண்டாடியவர்களை அறிவேன்...

ஸ்ருதி பாலமுரளி

யூட்யூபில் ஸ்ருதி பாலமுரளி என்ற பெண்ணின் சானலை இப்போதெல்லாம் அடிக்கடி திறக்கிறேன். இவர் யார், இப்போது எங்கே இருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் கனடாவில் ஏதோ ஒரு பல்கலைக் கழகத்தில் படித்திருக்கிறார் என்று அவரது லிங்க்ட் இன் ப்ரொஃபைல் சொல்கிறது. எங்காவது வேலை பார்ப்பவராகவும் இருக்க வேண்டும். ஆனால் யூட்யூபில் இவர் காட்டும் முகம் முற்றிலும் வேறு. முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்றிருக்க...

ஒரு நாள், ஒரு பண்டிகை

நண்பர்கள் அனைவருக்கும் சரஸ்வதி பூஜை வாழ்த்துகள். ஓர் இறை நம்பிக்கையாளனாக, செயல்கள் அனைத்தையும் என்னால் அறிய முடியாத ஒரு பெரும் சக்தி கண்காணித்துக்கொண்டிருப்பதாகவே எப்போதும் நினைப்பேன். தெரியாமல் எந்தத் தவறும் செய்வதில்லை. தெரிந்து செய்யும் தருணங்கள் வராதிருந்ததில்லை. தவறிழைக்கும்போதும் மனத்துக்குள் என் கடவுளுக்குத் தெரிவித்துவிட்டுத்தான் ஆரம்பிக்கிறேன். மன்னித்துவிடு என்று கேளாமல் இருப்பதில்லை...

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!