இங்கே கொரோனாவைவிட வேகமாக இன்னொரு அபாயம் பரவிக்கொண்டிருக்கிறது. அது வாசிப்பு குரூப்புகள். எனக்கு இந்தக் குழு வாசிப்பாளர்களைப் பார்த்தாலே திரைப்படங்களில் கண்ட கேங் ரேப் காட்சிகள் நினைவுக்கு வந்துவிடுகின்றன. அபூர்வமாக ஒன்றிரண்டு நல்ல மதிப்புரைகள் வந்தாலும் பெரும்பாலும் இக்குழுக்களில் எழுதப்படும் உரைகள் குறிப்பிட்ட புத்தகத்துக்கோ, எழுத்தாளருக்கோ தர்ம சங்கடம் தரக்கூடியவையாகவே இருக்கின்றன. எழுத்தாளர்...
நிரந்தரமானவன் [தே. குமரன்]
ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது வானில் மிதக்கும் அனுபவமும், அது துண்டிக்கப்பட்டு திடீரென்று கீழே விழுந்த அனுபவமும் ஒரே நேரத்தில் வாய்க்கும் என எவரேனும் சொல்லியிருந்தால் நான் நம்பியிருக்க மாட்டேன். உடலின் ஒவ்வொரு அணுவிலும் நிறைந்துள்ள, ‘நிரந்தரத்தை’ (அழிவின்மையை) நோக்கிய ஆன்மாவின் ஏக்கமாக உணர்கிறேன். எட்வின் இறந்தவுடன், ஆப்ரஹாம் ஹராரி ஜன்னல் வழியாக வெளியேறுவது அடுத்த...
இறவான்: இதுவரை படித்திடாத கதை – ஆர். அபிலாஷ்
“இறவான்” இந்த ஊரடங்கு தினங்களில் நான் வாசித்த மற்றொரு நாவல். நிச்சயம் குறிப்பிடத்தக்கது. சில நாவல்களை துவக்கம் முதலே ஒரு ஆச்சரியத்துடன் படிப்போம் – “இறவான்” அப்படியான ஒன்று. ஏனென்றால் தமிழில் இப்படியொரு கதையை இதற்கு முன்பு படித்ததாய் எவ்வளவு யோசித்தும் நினைவுக்கு வரவில்லை. ஆங்கிலத்தில் சாமர்செட் மாமின் Moon and the Six Pence நிச்சயம் நினைவுக்கு வந்தது. ஆனால் அது கூட – ஓவியத்தின் பாலுள்ள...
இறவான் – ஆன்மாவின் வலி [ஸ்டான்லி ராஜன்]
கம்பன் ஒரு சரஸ்வதி சிலையினை வழிபட்டானாம், மகனின் சம்பவத்துக்கு பின் சோழநாடு வேண்டாமென சேர நாட்டுக்கு செல்லும்பொழுது அந்த சிலையினை கொண்டு சென்றானாம் இன்றும் அச்சிலை பத்மநாபபுரத்தில் உண்டாம், வருடத்திற்கொரு முறை யானையில் பவனி கொண்டு வருவார்களாம் எனக்கென்னமோ அச்சிலை பா.ராகவன் வீட்டில் இருக்கலாம் போல தோன்றுகின்றது, ஆம் “இறவான்” எனும் அவரின் நாவலை படித்தபின் அப்படித்தான் தோன்றுகின்றது...
இறவான் – உயிர்த்தேடல் [ரஞ்சனி பாசு]
நிசப்தத்தின் இமை திறந்து கவனித்துக் கொண்டது இசையின் வெளியினுள் குடிகொண்ட பெருமெளனம் – பிரமிள் இசையின்றி இவ்வுலகில் உயிர்கள் ஏது? இயக்கம் ஏது? இசையே சுவாசமாக வாழும் ஒருவனின் தேடல் தான் “இறவான்”. முற்றிலும் புதியதொரு தளத்தில், ஒற்றை கதாபாத்திரமான எட்வின் ஜோசப் என்ற ஆபிரஹாம் ஹராரியின் சொல்முறையிலேயே நாவல் முழுவதும் அமைந்திருப்பது ஈர்ப்பு. முறையான பயிற்சி இல்லாமலேயே இசைக்கருவிகளை வாசிக்கத்...
கொசு – ஒரு மதிப்புரை [தர்ஷனா கார்த்திகேயன்]
அரசியலையும் திரைப்படங்களையும் தவிர்த்துவிட்டு தமிழ் நாட்டு மக்களின் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே முடிவதில்லை. கருப்பு வெள்ளை திரைப்படக் காலம் முதல் இணையத் தொடர் காலம் வரை, அறிவியல் தொழில்நுட்பங்கள் அறியாதவர்கள் மற்றும் அன்றாடங்காய்ச்சிகள் முதல், மெத்தப்படித்தவர்கள், பெருந்தனக்காரர்கள் வரை எல்லா காலத்திலும் எல்லா மக்களிடையேயும் இந்த இரண்டு துறைகளும் நீக்கமற ஊடுருவி இருக்கின்றன. இதில் திரைத்துறை...
ருசியியல் – ஒரு பார்வை [தர்ஷணா கார்த்திகேயன்]
வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு உடனேயே செய்யக்கூடாத விஷயம் என்றால் அது, அடுத்த வேளைக்கு சமைக்க ஆரம்பிப்பது. அதே போல பெரும் பசியுடன் இருக்கையில் செய்யக்கூடாத விஷயம் என்றால் அது பல் பொருள் அங்காடிக்கு செல்வது. ஆனால் நன்றாக உண்ட பின்பு சரி, முழுப் பட்டினியாக இருந்த பின்பும் சரி உணவு சார்ந்து செய்யக்கூடிய ஒரு நல்ல விஷயம் “ருசியியல்” நூலைப் படிப்பது தான். வெந்ததும் வேகாததுமாக பல ஆயிரம்...
இறவான் மதிப்புரை [ஜெயகுமார் சீனிவாசன்]
எல்லா எழுத்தாளர்களுக்கும் தன் பெயரை உலகம் சொல்லும்படிக்கு அதி உன்னதமான ஓர் படைப்பை எழுதிவிட ஆசை இருக்கும். பா.ராகவன் இதற்கென மெனக்கெடும் ஆளில்லை என்பதை பல விதங்களில் பலமுறை சொல்லியும், எழுதியுமிருக்கிறார். இறவான் – அவர் விரும்பியோ விரும்பாமலோ எழுதிவிட்ட கிளாசிக் நாவல். ஒரு முழு நீள நாவலில் நிச்சயம் தொய்வுறும் பகுதிகளென ஏதேனும் அமையும். ஆனால், இறவான் அந்த குறையையும் அநாயாசமாய்...
இறவான் – இசை சிரஞ்சீவி [ஸ்ரீனிவாச ராகவன்]
கலைஞர்கள் பலரைக் கண்டிருக்கிறோம். சிலர் காசுக்கு மாரடிப்பவர்கள். சிலர் புகழுக்கு மயங்குபவர்கள். பித்தனைப் போல் கலையே நான் என வாழ்பவர்கள் சொற்பம். பொதுவாகக் கலையைக் கடவுளாக நேசிக்கும் பலர் இயல்பிலிருந்து பிரிந்து வாழ்பவர்களாக இருப்தற்குப் பல உதாரணங்கள் உள்ளன. பெருங்கலைஞர்கள் பலர் வேறு உலகில் சஞ்சரிப்பவர்களாகவே இருக்கிறார். பிரபல டச்சு ஓவியக்கலைஞர் Vincent Vam Gogh இம்மாதிரி...
அபாயகரம் – ஒரு மதிப்புரை [யுவகிருஷ்ணா]
ஒரு கவிதைத் தொகுப்புக்கு விமர்சனம் எழுத முயற்சிப்பேன் என்று நேற்று இரவு 12 மணி வரை எனக்கேத் தெரியாது. சம்மந்தப்பட்ட கவிஞரே, “இது கவிதைத் தொகுப்பல்ல. கவிதை எழுத முயற்சி செய்த ஒருவனின் தோல்விச் சான்றுகள் மட்டுமே” என்று சுய வாக்குமூலம் கொடுக்கும்போது, கவிதை அறியா கழுதையான நான் ஏன் எழுதக்கூடாது என்கிற தன்னம்பிக்கை ஏற்பட்டது. ‘அபாயகரம்’ என்கிற தலைப்புதான் அச்சுறுத்துகிறதே தவிர, தொகுப்பில்...