வலை எழுத்து

17ம் நூற்றாண்டு ஃப்ரெஞ்சு சுப்புடுவின் தொடைதட்டல்

14ம் லூயியின் பாத்ரூம் சாஹித்யங்கள் மின் நூலுக்கு சி. சரவண கார்த்திகேயன் எழுதிய முன்னுரை: எங்கள் வீடு குமுதம் வாங்கும் வீடு. அது என் அம்மாவின் தேர்வு. பெண்களும் இலக்கியமும் சமமாய்க் கிளுகிளுப்பூட்டிக் கொண்டிருந்த என் பதின்மங்களின் மத்தியில் குமுதம் இதழ் கச்சிதமாய் எனக்கான தீனியாய் அமைந்திருந்தது. அது புத்தாயிரத்தின் தொடக்கம். குமுதம் வார‌ இதழ் நான்கைந்து எழுத்தாளர்களின் பெயர்களைத் திரும்பத்...

அஞ்சலி: தகடூர் கோபி

கோபியுடன் எனக்கு நேர்ப்பழக்கம் கிடையாது. ஏதோ ஒரு தமிழ் இணைய மாநாட்டில் ஒரு முறை சந்தித்திருக்கிறேன். அவ்வளவுதான். ஆனால் யுனிகோட் புழக்கத்துக்கு வருவதற்கு முந்தைய திஸ்கி காலத்தில் [கிபி 2000] இரா. முருகன் நடத்தி வந்த ராயர் காப்பி க்ளப் மூலம் அவரை எனக்குத் தெரியும். கணினியில் தமிழில் எழுதுவது – வாசிப்பது சார்ந்த சிக்கல்கள் அதிகம் இருந்த அக்காலத்தில் கோபி சலிக்காமல் மின்னஞ்சல்கள் மூலம்...

பூனைக்கதை – ஹரன் பிரசன்னா மதிப்புரை

பா.ராகவனின் நூல் ஒன்றுக்கு விமர்சனம் எழுதுவது என்பது ஒரு சங்கடம்தான். ஏனென்றால் மிக மரியாதைக்குரிய நண்பர்களில் ஒருவர் அவர். எனவே வெளிப்படையாக எழுதுவது என்பதில் எனக்குக் கொஞ்சம் சிக்கல்கள் உண்டு. இதன் மற்றொரு பக்கம் சுவாரஸ்யமானது. அவரிடம் நேரில் பேசும்போது அவரது புத்தகங்களைப் பற்றிய என் வெளிப்படையான கருத்துகளை வைத்துள்ளேன். பாராவின் மிக முக்கியப் பண்பு, எந்த ஒரு சிறு நெருடலும் இன்றி, அவற்றை என்...

ஆண்டாள் படும் பாடு

நேற்று புத்தகக் காட்சியில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தபோது ஆர். வெங்கடேஷின் தொலைபேசி அழைப்பு மூலம் எனக்குப் புதிய தலைமுறை டிவியில் என் தலை உருட்டப்பட்டுக்கொண்டிருந்த விவரம் தெரியவந்தது. அடுத்தடுத்து இன்னும் இரண்டு நண்பர்கள் அழைத்து அதையே சொன்னார்கள். வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது பாதி நிகழ்ச்சி முடிந்திருந்தது. திமுக கண்ணதாசன் பேசி முடித்து, ஆசீர்வாதம் ஆச்சாரி பதினொரு மணி சீரியல் கதாநாயகி போல...

சிமிழ்க்கடல்

எனக்கு மட்டும் எழுத வராமல் போயிருந்தால் நான் என்ன ஆகியிருப்பேன் என்று அடிக்கடி நினைத்துப் பார்த்துக் கொள்வேன். முன்பெல்லாம் ஒரு துறவியாக, அல்லது ஒரு பொறுக்கியாக ஆகியிருப்பேன் என்று தோன்றும். அந்த இரண்டாவது சிந்தனை இப்போது இல்லை. மிக நிச்சயமாக ஒரு பொறுக்கியாகத்தான் போயிருப்பேன். சிறு வயது முதலே என் அந்தரங்க விருப்பம் அப்படித்தான் இருந்து வந்திருக்கிறது. ஏழாம் வகுப்பில் இருந்தபோது என்னோடு படித்த...

வெஜ் பேலியோ – அனுபவக் குறிப்புகள்

வெஜ் பேலியோ தொடர்பாக இணையத்தில் நான் அவ்வப்போது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘வெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்’ கிழக்கு பதிப்பகம் மூலம் வருகிற சென்னை புத்தகக் காட்சியில் நூலாக வெளியாகிறது. இந்தப் புத்தகத்துக்கு ஒரு விசேடம். இக்கட்டுரைத் தொகுப்பை நான் முதலில் மின் நூலாக அமேசானில் வெளியிட்டேன். ஒரு சில மாதங்களிலேயே மிக நல்ல விற்பனை உயரம் தொட்டது. மின் நூலாக வெளியிட்ட ஒன்றின் இரண்டாம் பதிப்பை அச்சுப்...

ருசியியல் – கலந்துரையாடல்

ஜனவரி 1, 2018 திங்கள் கிழமை அன்று மாலை 6 மணிக்கு டிஸ்கவரி புக் பேலஸில் [கேகே நகர், சென்னை] நடைபெறும் வாசகர் கலந்துரையாடலில் பங்குபெறுகிறேன். ருசியியல் என்பது பொதுவான தலைப்பு. இந்தத் தலைப்பில் என் புத்தகம் வெளிவருவது ஒரு காரணம் மட்டுமே. நாம் என்ன வேண்டுமானாலும் பேசலாம், எது குறித்தும் விவாதிக்கலாம். நண்பர் வேடியப்பனின் ஆர்வமே இந்நிகழ்ச்சிக்கு முக்கியக் காரணம். வாசக நண்பர்களை இந்நிகழ்ச்சியில்...

கரையான் கதை [பூனைக்கதை டிரெய்லர் 1]

கோல்கொண்டா கோட்டை விழுந்துவிட்டது என்று ஜமீந்தார் சீட்டு அனுப்பியிருந்தார். எப்படியும் ஒரு மண்டலத்துக்குள் ஔரங்கஜேப் தொண்டை நாட்டைப் பிடித்துவிடுவான். அங்கிருந்து தஞ்சை வந்து சேர அவனுக்கு அதிக அவகாசம் எடுக்கப் போவதில்லை. மராட்டி ராஜா, ராமநாதபுரத்துக்குப் போய் பதுங்கிக்கொள்ள முடிவு செய்திருப்பதாகச் சேதி வருகிறது. வருபவனுக்கு வாசல் கதவைத் திறந்து வைத்துவிட்டுப் போவதா, கழட்டி எடுத்துவைத்துவிட்டுப்...

பேய் ஊட்டிவிட்ட பிரியாணி [பூனைக்கதை டிரெய்லர்-2]

வடபழனி பஸ் ஸ்டாண்டின் கடைசி வரிசை பெஞ்சில் மயில்சாமி அமர்ந்திருந்தான். மதிய நேரம் என்பதால் ஆட்கள் அதிகம் இல்லை. பேருந்துகளை நிறுத்திவிட்டு டிரைவர்களும் கண்டக்டர்களும் சாப்பிடப் போயிருந்தார்கள். ஒவ்வொரு வரிசை பெஞ்சிலும் யாராவது ஒருவர் படுத்திருந்தார். ஈ மொய்ப்பதைப் பொறுத்துக்கொள்ளலாம் என்றால் மதியத் தூக்கத்துக்கு வடபழனி பேருந்து நிலைய பெஞ்சுகளைவிடச் சிறந்த இடம் வேறு கிடையாது. பின்புறச் சாக்கடை...

இந்த வருடம் என்ன செய்தேன்? – 2017

இப்போதெல்லாம் ஒரு வருடத்துக்கும் இன்னொரு வருடத்துக்கும் பெரிய வித்தியாசங்கள் இருப்பதில்லை. ஒரு கட்டத்துக்கு அப்பால் வாழ்க்கையே இந்த மாதிரி தன்னியல்பான வடிவம் எய்திவிடும் போலிருக்கிறது. துயரங்களின் அளவு மட்டும் சிறு வித்தியாசம் காட்டுகிறது. ஒரு வருடம் அதிகமாக. இன்னொரு வருடம் சற்றுக் குறைவாக. ஒன்றும் பிரச்னையில்லை. வாழ்வது ஒன்றும் அத்தனை சிரமமானதல்ல. இந்த வருடம் சில மரணங்கள் என்னை மிகவும் பாதித்தன...

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Pa Raghavan

Stay informed with curated content and the latest headlines, all delivered straight to your inbox. Subscribe now to stay ahead and never miss a beat!

Skip to content ↓