என் அடுத்த நாவல், கபடவேடதாரி. bynge செயலியில் இது இப்போது தொடராக வெளி வருகிறது. வாரம்தோறும் இரண்டு அத்தியாயங்கள் பிரசுரமாகும். இந்நாவலுக்கு விமரிசனம் எழுதும் போட்டி ஒன்றை ஃபேஸ்புக்கில் அறிவித்தேன். அதன் விவரம்: bynge appல் வெளிவர ஆரம்பித்திருக்கும் ‘கபடவேடதாரி’யைப் படிக்கும் வாசக நண்பர்களுக்கு ஓர் அழைப்பு. இந்நாவல் ஐம்பது அத்தியாயங்கள் கொண்டது. வாரம் இரண்டு வீதம் இருபத்தைந்து வாரங்கள்...
அலகிலா விளையாட்டு – ஒரு மதிப்புரை (அனுராதா பிரசன்னா)
இலக்கியப்பீடம் இதழ் நடத்திய அமரர் திருமதி ரங்கநாயகி அம்மாள் நினைவு நாவல் போட்டியில் 2003ம் ஆண்டுக்கான பரிசு பெற்ற சமூகப் புதினம். 2003 இல் அவர் வயது அநேகமாக 32. இந்த வயதில் இதை எழுதியிருக்கிறார் என்றால், அவருக்கு பேர்சொல்ல இந்த ஒரு புத்தகம் போதும். நீண்டு கொண்டே போனது என் review . எதை விடுவது என்றே தெரியவில்லை. அப்படியும் நிறைவில்லை.பொறுமை ஆர்வம் இருப்பவர்கள் தொடரலாம். மற்றவர்கள் மன்னிக்கவும். பா...
இறவான் ஒரு பார்வை – கதிரவன் ரத்தினவேல்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புத்தகங்கள் வந்தடைவதும் அதை எடுத்து வாசிப்பதற்கான காரணமுமே சுவாரசியமானதொரு தனிக்கதையாக அமையும். கடந்த புத்தக திருவிழாவில் பாரா இறவான் நூலை வெளியிடுகிறார். அங்கு சென்ற பொழுது யதெச்சையாக அவரை சந்திக்க நேர்கிறது(கண்டிப்பாக என்னை பார்த்தது அவர் நினைவிலிருக்காது என நம்புகிறேன்). அவரிடம் இறவான் வாங்கப்போவதாக சொல்கிறேன். புன்னகைத்தபடி விடை கொடுக்கிறார். ஆனால் நான் அங்கு...
யாழினி
கடந்த ஒரு வாரமாகக் கதறக் கதறக் கலைச் சேவை. நான் ஆறு சீரியல்களுக்கு ஒரே சமயத்தில் எழுதியிருக்கிறேன். அப்போதுகூட இவ்வளவு கஷ்டப்பட்டதில்லை. புத்தகக் காட்சிக்குக் கூட இன்று போகலாம்; அடுத்த மூன்று நாள்களுக்கு முடியாது; வெள்ளிக் கிழமை போகலாம்; அதன் பிறகு முடியாது என்று கணக்குப் போட்டு வாழ வேண்டிய அளவுக்கு பணி நெருக்கடி. வீட்டுக்கே இரண்டு நாள்களுக்கொரு முறை போகும் கொடூரமெல்லாம் நடக்கிறது. சிறிது...
பரிநிர்வாணம்
ஏதோ ஒன்று ஙவை உறுத்திக்கொண்டிருக்க வேண்டும் என்று எல்லோரும் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு பெருங்கதை. அல்லது ஒரு சிறு சம்பவம். ஒரு குற்ற உணர்ச்சி. பழிவாங்கும் உணர்ச்சி. அல்லது நிராசை. ஏதோ ஒன்று. அந்தச் சிடுக்கு விலகிவிட்டால் அவன் நிம்மதியாக இறந்துவிடுவான் என்று எனக்கும் தோன்றியது. ஆனால் அது என்னவென்று எப்படி அறிய? அவன் பேச்சற்றுக் கிடந்தான். ஙவின் உறவினர்கள் படுக்கைக்கு அருகே வந்து நின்றுகொண்டு...
அலகிலா விளையாட்டு – சில நினைவுகள்
இன்று காலை ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது தற்செயலாகக் கேட்டார். நீங்கள் எழுதியவற்றுள் உங்கள் மனத்துக்கு மிகவும் நெருக்கமான ஒரு நாவல் என்றால் எதனைச் சொல்வீர்கள்? இறவான் அல்லது யதியைச் சொல்வேன் என்று அவர் எதிர்பார்த்தார். உண்மையில் இந்தக் கணம் நினைத்துப் பார்க்கும்போதும் எனக்கு மிகவும் நெருக்கமானதென்று அலகிலா விளையாட்டைத்தான் சொல்லத் தோன்றுகிறது. ஒரு துறவி ஆகிவிட வேண்டும் என்ற வேட்கையுடன்...
வக்கும் வாக்கும்
அன்பின் பாரா, நீங்கள் ஏன் ஒரு கட்சி ஆரம்பித்து தேர்தலில் நிற்கக்கூடாது? நேற்று ஒரு வாசகர் மெசஞ்சரில் இதனைக் கேட்டார். நடிகர்கள் எல்லாம் கட்சி ஆரம்பித்து தேர்தலில் நிற்கும்போது எழுத்தாளர்கள் செய்யக்கூடாதா? தாராளமாகச் செய்யலாம். ஆனால் அதற்கெல்லாம் ஒரு வக்கு வேண்டும். இதுவே ஜெயமோகனைச் சொல்கிறீர்களா? நியாயம். மய்யத்தைவிட அதிகமான தொண்டர் பலம் கொண்டவர் அவர். கொரோனா கஷ்ட காலத்தில் விஷ்ணுபுரம் வாசகர்...
ஒரு கடிதம் – பொன் மகாலிங்கம்
அன்பின் பாரா, வணக்கம். குமுதம் டாட் காமில், பாக் ஒரு புதிரின் சரிதம் தொடராக வந்ததில் இருந்து உங்கள் எழுத்து எனக்கு அறிமுகம். பின்னர் டாலர் தேசம், நிலமெலாம் ரத்தம் என அது விரிந்தது. இன்றளவும் எனக்கு, அந்த இரண்டு புத்தகங்களும் உங்கள் படைப்பில் மிகப் பிடித்தமானவை. சக செய்தியாளர்களிடம், அதைப் படிக்கச் சொல்லி வற்புறுத்திக்கொண்டே இருப்பேன். அதையெல்லாம் தாண்டி, உங்களை எனக்கு மிகவும் அணுக்கமானவனாக உணரச்...
இந்தப் புத்தகம் ஏன் கிடைப்பதில்லை?
ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் இருக்கக்கூடிய ஆகப் பெரிய ஆசை என்று எதைக் கருதுவீர்கள்? பெயர், புகழ், பிரபலம், ஊருக்கு நூறு ரசிகர்கள், வீதிக்கொரு சிநேகிதி, விழா எடுக்க ஒரு கூட்டம், போஸ்டரில் போட்டோ, ஏமாற்றாத ராயல்டி, அவ்வப்போது ஒரு விருது – இதில் ஒன்றா? நிச்சயமாக இல்லை. தான் ஒரு எழுத்தாளர் மட்டுமே என்று உணரும் யாரானாலும் அவன் அல்லது அவள் மனத்தில் எப்போதும் ஈரப்பதம் குறையாதிருக்கும் ஒரே பெரிய இச்சை...
பின் அட்டைக் காவியங்கள்
ஓர் எழுத்தாளன் தனது வாழ்வில் எதிர்கொள்ளக்கூடிய ஆக மோசமான இரண்டு பணிகள் நாவலுக்குச் சுருக்கம் எழுதுவதும் புத்தகங்களுக்குப் பின்னட்டை வரிகள் எழுதுவதும்தான். ஆங்கிலத்தில் இதற்கெல்லாம் ஏஜென்சிகள் இருக்கின்றன. பிரபலப்படுத்தும் நிறுவனங்கள் செய்ய வேண்டிய பணிகளை அங்கே எழுத்தாளர்கள் செய்ய அவசியப்படாது. நாம் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தவர்கள் அல்லவா? இது நம் பணி. நாமேதான் செய்தாக வேண்டும். ஏஜென்சிக்கு...