வலை எழுத்து

நல்லவனுக்கு எதற்கு இன்காக்னிடோ?

என்னுடைய எழுத்து வகுப்புகளுக்கு வருவோரில் சிலர் வரும்போதே அடிப்படை எழுத்துத் திறமையுடன் வருவார்கள். மிகச் சிறிய பிசிறுகளை மட்டும் சரி செய்தால் போதும் என்று தோன்றும். மிகச் சிலருக்கு அதுவும்கூட அவசியமாக இராது. பள்ளி நாள்களில் ஒழுங்காக இலக்கணம் கற்று , நிறைய புத்தகங்களும் படித்து, இங்கொன்றும் அங்கொன்றுமாக எழுதிப் பார்த்து, தனக்கு எவ்வளவு எழுத வருகிறது, இன்னும் என்ன வேண்டும் என்ற தெளிவான இலக்குடன்...

கடவுளுக்குப் பிடித்த தொழில்

ஜனவரி புத்தகக் காட்சிக்கு இம்முறை மெட்ராஸ் பேப்பர் சார்பில் எட்டு புதிய புத்தகங்கள் வெளியாகின்றன. இந்த நூல்களை ஜீரோ டிகிரி பப்ளிஷிங் நமக்காக வெளியிடுகிறது. ராம்ஜிக்கும் காயத்ரிக்கும் மெட்ராஸ் பேப்பர் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் புத்தகங்களை ஓரிரு வரிகளில் இங்கே தொடர்ந்து அறிமுகப்படுத்தலாம் என்று நினைக்கிறேன். ஆர்வமுள்ளோருக்கு உதவலாம் அல்லவா? 1. கடவுளுக்குப் பிடித்த தொழில் /...

பல்சரும் பால கணேஷும்

பால கணேஷ் என் நண்பர் என்பது இந்தப் பக்கத்தைப் பின் தொடரும் அத்தனை பேருக்கும் அநேகமாகத் தெரிந்திருக்கும். உடனடி நகைச்சுவைக்கு, சீண்டலுக்கு, கிண்டலுக்கு, உதாரணத்துக்கு – யோசிக்காமல், போன் செய்து ஒப்புதல் கேட்காமல் நம்மால் யார் பெயரைப் பயன்படுத்த முடியுமோ, அவரைத்தான் நண்பர் என்று சொல்ல முடியும். அவர் எனக்கு அந்த ரகம். பெரிய படிப்பாளி. நல்ல, வெகுஜன நகைச்சுவை எழுத்தாளர். கொஞ்சம் தீவிரம்...

கணை ஏவு காலம் – புத்தக முகப்பு

கணை ஏவு காலம் புத்தகமாக வெளிவருகிறது. தொடராக வெளியிட்ட இந்து தமிழ் திசையே புத்தகத்தையும் வெளியிடுகிறது. ஜனவரி 3ம் தேதி தொடங்கவிருக்கும் சென்னை புத்தகக் காட்சியில் இந்நூல் வெளியாகும். விலை ரூ. 230. நூலின் அட்டைப்படத்தினை இன்று இந்து தமிழ் திசையின் ஆசிரியர் கே. அசோகன் வெளியிட்டார். இன்றுவரை கனவாகவே தொடர்ந்துகொண்டிருக்கும் சுதந்தர பாலஸ்தீன் என்கிற கருத்தாக்கம் தெள்ளத் தெளிவாக வெளிப்படும் விதத்தில்...

புனைவு என்னும் புதிர் – புதிய தொகுப்புகள்

விமலாதித்த மாமல்லன் மெட்ராஸ் பேப்பரில் எழுதிய புனைவு என்னும் புதிர் இரு தொகுதிகளாக வெளிவர இருக்கிறது. முதல் தொகுப்பு, ஆர். சிவகுமார் மொழிபெயர்ப்பில் வெளிவந்த உலகச் சிறுகதைகளும் அவற்றின் நுட்பங்களைப் பேசும் கட்டுரைகளும் அடங்கியது. இரண்டாவது தொகுப்பும் உலகச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பும் நுட்பம் பேசும் கட்டுரைகளும்தான். ஆனால் ஆர். சிவகுமார் நீங்கலான பிறர் மொழிபெயர்த்த கதைகள் அடங்கியது. நிகரற்ற உலக...

தீர்மான காண்டம்

செயல் எதுவானாலும், எவ்வளவு முக்கியமானாலும் அது நடந்தேற அடிப்படைத் தேவைகள் என்று சில உண்டு. அதில் தலையாயது உடல் ஆரோக்கியம். சுண்டு விரல் நகம் சற்றுப் பெயர்ந்திருந்தாலும் அன்றைய பொழுதின் அனைத்துப் பணிகளும் கெடும். ஒரு சிறிய தலைவலி ஒரு மொத்த நாளையே புரட்டிப் போடக்கூடிய வல்லமை மிக்கது. காய்ச்சல், சளி, சுளுக்கு, கழுத்து வலி, முதுகு வலி தொடங்கி பெரும் உடல் உபாதைகள் வரை மனிதனின் உற்சாகமான செயல்பாட்டை...

உன்னை யாரும் அணைத்துக்கொள்ளவில்லையா?

நண்பர் மனுஷ்யபுத்திரனின் 50வது கவிதைத் தொகுப்பு ‘உன்னை யாரும் அணைத்துக்கொள்ளவில்லையா?’ சென்னை புத்தகக் காட்சி 2024 இல் வெளியாகிறது. மனுஷுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். மனுஷ்யபுத்திரனைத் திட்டுவது, இழிவு செய்வதாக எண்ணிக்கொண்டு அவர் எழுதுபவை கவிதையே இல்லை என்பது, அவரைக் குறித்துத் தப்பித்தவறி நல்ல விதமாக இரண்டு வரி யாராவது எழுதிவிட்டால், கர்ம சிரத்தையாக அங்கே சென்று காறித் துப்புவது போல ஒரு...

பகுதியளவு ஜெயமோகன்கள்

டிசம்பர் 16, 17 தேதிகளில் கோயமுத்தூரில் நடைபெற்ற விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்துகொண்டு திரும்பினேன். தமிழின் முக்கியமான படைப்பு ஆளுமைகளுள் ஒருவரான யுவன் சந்திரசேகருக்கு இவ்வாண்டு விருது வழங்கப்பட்டது. இந்திய வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா, மலேசிய எழுத்தாளர் ஜாஹிர், எம். கோபாலகிருஷ்ணன், ஜெயமோகன் ஆகியோர் யுவனை வாழ்த்திப் பேசினார்கள். விழாவில் யுவனைக் குறித்த ஆவணப் படம் ஒன்று திரையிடப்பட்டது...

கணை ஏவு காலம்: இன்றுடன் முற்றும்

இந்து தமிழ் திசையில் கடந்த அறுபது நாள்களாக தினமும் வெளியாகிக்கொண்டிருந்த ‘கணை ஏவு காலம்’ இன்று நிறைவு கண்டது. நடுவே ஆயுத பூஜைக்கு ஒரு நாள், தீபாவளிக்கு ஒருநாள் பத்திரிகை வெளியாகவில்லை. மற்றபடி நாள் தவறாமல் வெளியாகி நிறைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். இந்த நாள்களில் இதைத் தவிர அநேகமாக வேறு எதையும் சிந்திக்கக் கூட முடியவில்லை. எப்போதும் படிப்பு, எழுத்து என்று இந்தத் தொடரோடு மட்டுமே வாழும்படி...

சொல்லாமல் சொல்லிவைத்த பாடம்

உவேசா முன்னுரைகள் என்ற சிறிய தொகுப்பு நூல் ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தேன். அவர் பதிப்பித்த சில புராதன இலக்கியப் பிரதிகளுக்கு எழுதிய முன்னுரைக் குறிப்புகளைக் கொண்ட நூல் இது. சிறுபாணாற்றுப்படை அதிலொன்று. //சிறுபாணாற்றுப்படை என்பது நக்கீரர் முதலிய கடைச் சங்கப் புலவர்களால் இயற்றப்பட்டு, அவர்களால் தொகுக்கப்பெற்ற பத்துப் பாட்டினுள், மூன்றாவதாக உள்ள ஒரு நேரிசை ஆசிரியப்பா. இஃது இருநூற்றுப் பத்தொன்பது...

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!