கிண்டில் குறித்தும் அதில் மின் நூல்களை வாங்கிப் படிப்பது குறித்தும் நான் எப்போது எழுதினாலும் குறைந்தது பத்து சந்தேகங்கள் நண்பர்களிடம் இருந்து வருகின்றன. என்னால் முடிந்தவரை அவற்றை இங்கு தீர்க்கப் பார்க்கிறேன்.
ருசியியல் – 26
ராஜமாணிக்கம் முதலியாரின் பேத்தி ராஜாத்தி வயசுக்கு வந்தபோது வீதி அடைத்துப் பந்தல் போட்டு மயில் ஜோடித்தார்கள். அன்றைக்கு முதலியார் வீட்டுக்குப் போயிருந்த அத்தனை பேருக்கும் பிளாஸ்டிக் தம்ளரில் பாதாம் கீர் கொடுத்தார்கள். பாதாம் கீர் என்ற பானத்தை வாழ்வில் முதல் முதலில் நான் அருந்திய தருணமாக அதுவே நினைவில் இருக்கிறது. நாக்கில் தட்டுப்பட்ட மெல்லிய நறநறப்பும் அடித்தொண்டை வரை இனித்த சர்க்கரையும். அது...
கண்ணீரின் ருசி
அலை உறங்கும் கடல் நாவலை இன்று கிண்டில் மின் நூலாக வெளியிட்டிருக்கிறேன். இன்று வரை என்னைச் சந்திக்கும் வாசக நண்பர்களுள் பத்துக்கு நாலு பேராவது இதைப் பற்றிப் பேசாதிருந்ததில்லை. உமாவையும் அருள்தாஸையும் அற்புத மேரியையும் நீலுப்பாட்டியையும் சங்குக்கடை ராஜுவையும் தமது மனத்துக்கு நெருக்கமாக வைத்துப் பரவசத்துடன் என் கைகளைப் பிடித்துக்கொண்டு அவர்கள் மூச்சு விடாமல் பேசுகிற போதெல்லாம் எனக்குக் கண்ணீர்...
ரசிகன்
அவன் பெயர் காந்தி பாபு. பெயரைச் சொல்வதைக் காட்டிலும் அவன் ஒரு விஜய் ரசிகன் என்று சொல்லுவதை மிகவும் விரும்புவான். இருக்கலாம். அதிலென்ன தவறு? லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ள ஒரு விஜய்க்கு ஒரு காந்தி பாபுவும் ரசிகனாக இருப்பதில் பிழையில்லை. ஆனால் என்னை அதிர்ச்சியுற வைத்த விவரம், அவன் பகவதி படம் பார்த்து விஜய் ரசிகனானான் என்பது. புதிய கீதையில் அந்த ரசிக மனோபாவம் தீவிரம் கொண்டது என்பது. சமீபத்திய கேரளப்...
மாயவலை – ஒரு கடிதம்
திரு ராகவன் அவர்களுக்கு தங்களின் ’மாய வலை’யை சிலநாட்களுக்கு முன்னர் வாங்கினேன். உங்கள் எழுத்துக்களை நிறைய வாசித்திருக்கிறேன் அதில் உணவுப் பாரம்பரியம் குறித்த ஒரு நூலை பலநாட்கள் வைத்திருந்து குறிப்பெடுத்துகொண்டிருந்தேன். உங்கள் பெயரில் இந்த தலைப்பில் ஒரு புத்தகத்தை எதிர்பார்த்திருக்கவில்லை. நான் குமுதம் வாசிப்பதில்லை. அதனால் இது தொடராக வந்தது தெரியாமல் போய்விட்டது தலையணை சைஸில் புத்தகம் – ...
ருசியியல் – 25
சமீபத்தில் என் நண்பர் சவடன் பாலசுந்தரன், எலுமிச்சை – கொத்துமல்லி சூப் என்றொரு நூதன ருசிமிகு திரவத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். அருந்தி முடித்ததுமே அடுத்த கப் ஆர்டர் செய்யலாமா என்று யோசிக்க வைத்த தரம். எளிய க்ரியேடிவிடிதான். பிடி கொத்துமல்லியை அலசிப் போட்டுக் கொதிக்கவிட வேண்டியது. நாலு துண்டு வெள்ளரி, நாலு துண்டு கேரட் தவிர வேறு அலங்காரங்கள் ஏதும் கிடையாது. இருக்கவே இருக்கிறது மிளகு சீரக...
நகையலங்காரம்
எனது நகைச்சுவைக் கட்டுரைகளின் தொகுப்பு, ‘நகையலங்காரம்’ என்ற பெயரில் இன்று கிண்டில் மின் நூலாக வெளியாகியிருக்கிறது. மொத்தம் 26 கட்டுரைகள்.
பத்திரிகைகளில் எழுதியவை, இணையத்தில் எழுதியவை, சொந்த இஷ்டத்துக்கு எழுதி எங்கும் பிரசுரிக்காதவை என்று இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் பலவிதம். அனைத்துக்கும் பொதுவான ஒரே அம்சம், நகைச்சுவை.
துறையும் மொழியும்
அன்புள்ள பாரா, டாலர் தேசம், மாயவலை, ஆயில் ரேகை போன்ற புத்தகங்கள் வழியேதான் நீங்கள் எனக்கு அறிமுகமானீர்கள். இதைப் போன்ற கனமான விஷயங்களைத் தமிழில் எளிமையாக எழுதவும் ஒரு ஆள் இருக்கிறாரே என்று உங்களுடைய ஒவ்வொரு புத்தகத்தைப் படிக்கும்போதும் வியந்து போயிருக்கிறேன். அன்சைஸ் படித்தபோது, இந்த மனிதர் இப்படியும் சிரிக்க சிரிக்க எழுதுகிறாரே என்று வியப்படைந்தேன். டாலர் தேசத்திலேயே உங்கள் நக்கல் பரிச்சயம்...
ருசியியல் – 24
போன வாரம் வெண்ணெய்க் காப்பி பற்றி நாலு வரி எழுதினாலும் எழுதினேன், காப்பி ரசிகர்கள் வீறு கொண்டெழுந்து விட்டார்கள். வரலாறு காணாத அளவுக்கு மின்னஞ்சல் விசாரணைகள். காப்பி எப்படி உணவாகும்? வெண்ணெய் சரி; அதற்குமேல் தேங்காய் எண்ணெயை வேறு ஊற்றினால் காப்பி கந்தரகோலமாகிவிடாதா? சர்க்கரை போடாமல் அதை எப்படிக் குடிப்பது? வயிற்றைப் புரட்டியெடுத்துவிடாதா? இதைக் காலையில்தான் குடிக்க வேண்டும் என்று வேறு...
ருசியியல் – 23
மதராசபட்டணத்தில் இருந்து புறப்பட்டு தெற்கே என்னவாவது ஒரு க்ஷேத்திரத்துக்குப் பேருந்தில் போனால், செங்கல்பட்டு தாண்டிய பிறகு வழியெங்கும் கிலோ மீட்டருக்கொரு கும்பகோணம் டிகிரி காப்பிக் கடை கண்ணில் படுகிறது. முன்புறம் சரிந்த கூரையும் புளிக்குளியல் முடித்து எழுந்த பாய்லரும். இங்கே ஒரு பெஞ்சு, அங்கே சில ஸ்டூல்கள். அண்ணாக்கு ஒரு காப்பீஈஈஈ என்கிற அடித்தொண்டை உத்தரவு. எல்லாக் கடைகளிலும் எல்லா நேரத்திலும்...